Advertisment

மும்பையில் 750 கோடி லிங்கன் ஹவுஸ்: 2015 ஒப்பந்தம் குறித்து சைரஸ் பூனவாலா கேள்வி எழுப்புவது ஏன்?

2015-ம் ஆண்டில் அமெரிக்க அரசாங்கத்திற்கும் பூனாவாலாக்களுக்கும் இடையே ஒரு நிலம் சம்பந்தமான ஒப்பந்தம் ஏற்பட்டது. அப்போது இந்த்ந சொத்து ரூ. 750 கோடிக்கு விற்கப்பட்டது. ஆனால், அவர்களால் அந்த சொத்துகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

author-image
WebDesk
New Update
lincoln house, what is, mumbai, maharashtra news, மும்பை, லிங்கன் ஹவுஸ், லிங்கன் மாளிகை, சைரஸ் பூனாவல்லா, சீரம் நிறுவனம், cyrus poonawalla, adar poonawalla, serum institute, us consulate

லிங்கன் ஹவுஸ் மும்பை

2015-ம் ஆண்டில் அமெரிக்க அரசாங்கத்திற்கும் பூனாவாலாக்களுக்கும் இடையே ஒரு நிலம் சம்பந்தமான ஒப்பந்தம் ஏற்பட்டது. அப்போது இந்த்ந சொத்து ரூ. 750 கோடிக்கு விற்கப்பட்டது. ஆனால், அவர்களால் அந்த சொத்துகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

Advertisment

பூனவல்லா குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான டாக்டர் சைரஸ் பூனவல்லா (81) மும்பையில் அமைந்துள்ள லிங்கன் ஹவுஸ் என்ற அரண்மனையை வாங்குவதற்கு இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

லிங்கன் ஹவுஸ் பல ஆண்டுகளாக கை மாறிவந்துள்ளது. பல பத்தாண்டுகளாக நகரத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கான வளாகமாக கூட செயல்படுகிறது. ஏப்ரல் 2-ம் தேதி ப்ளூம்பெர்க்குடன் பேசிய பூனவல்லா, நிறுத்திவைத்திருப்பது அரசியல் மற்றும் சோசலிச முடிவு என்று விவரித்தார்.

மும்பையின் லிங்கன் ஹவுஸ் என்றால் என்ன?

இது மும்பையின் பிரதான இடங்களில் ஒன்றான ப்ரீச் கேண்டியில் உள்ள இரண்டு ஏக்கர் தரம் III அந்தஸ்து பெற்ற சொத்து. இது சுமார் 50,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டது. இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. அவற்றுக்கு வழங்கப்படும் பாதுகாப்பின் அடிப்படையில், பாரம்பரிய சொத்துக்களை தரம் I, தரம் II மற்றும் தரம் III என அரசாங்கம் வகைப்படுத்துகிறது.

publive-image

2015-ல் மும்பையில் உள்ள லிங்கன் ஹவுஸ் (எக்ஸ்பிரஸ் புகைப்படம் - பிரதீப் தாஸ்)

தரம் III கட்டிடங்களின் கட்டமைப்புகள் நகர காட்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்கள் மற்றும் வளாகங்களை உள்ளடக்கியதாக வரையறுக்கப்படுகின்றன; இது கட்டிடக்கலை, அழகியல் அல்லது சமூகவியல் ஆர்வத்தைத் தூண்டுகிறது. இந்த வகைப்பாடுகள் தற்போது அத்தகைய கட்டமைப்புகளில் எவ்வாறு மாற்றங்களைச் செய்யலாம் என்பதையும் தீர்மானிக்கிறது. தரம் III கட்டிடங்கள் பெரும்பாலும் மறுவடிவமைப்பு செய்யப்படலாம்.

லிங்கன் ஹவுஸ் முதலில் வான்கனேர் ஹவுஸ் என்று அறியப்பட்டது. 1933-ல் வான்கனேரின் கடைசி ஆட்சியாளரால் (இன்றைய குஜராத்தில் அமைந்துள்ளது), மஹாராணா அமர்சிங் ஜாலா-வால் கட்டப்பட்டது. அவர் அதை பம்பாயில் தனது இல்லமாகப் பயன்படுத்தினார்.

1957 இல், சுதந்திரத்திற்குப் பிறகு சுதேச அரசுகள் இணைந்ததைத் தொடர்ந்து தனது வரிகளை செலுத்துவதற்காக, மஹாராஜா 999 ஆண்டு குத்தகை உரிமையை அமெரிக்க அரசாங்கத்திற்கு கொடுத்தார். இதையடுத்து, அமெரிக்க அரசு தூதரகத்தை அமைத்து, அந்த சொத்தை லிங்கன் ஹவுஸ் என்று பெயர் மாற்றியது.

பூனாவல்லாக்கள் எப்போது இந்த சொத்தை வாங்கினார்கள்?

2011 ஆம் ஆண்டில், அமெரிக்க தூதரகம் லிங்கன் மாளிகையில் இருந்து மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா வளாகத்திற்கு மாற்றப்பட்டது. லிங்கன் ஹவுஸை 850 கோடி ரூபாய்க்கு விற்க அமெரிக்க அரசு முடிவு செய்தது.

அமெரிக்க அரசுக்கும் பூனாவல்லாக்களுக்கும் இடையேயான ரியல் எஸ்டேட் ஒப்பந்தப்படி 2015-ல் 750 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது. அந்த நேரத்தில், இது நாட்டின் நிதி மூலதனத்தில் இதுவரை இல்லாத மிகப்பெரிய ரியல் எஸ்டேட் ஒப்பந்தம் என்று தெரிவிக்கப்பட்டது. இது பூனாவல்லாவின் குடும்ப வசிப்பிடமாக பயன்படுத்தப்பட்டது.

பூனாவல்லாவுக்கு சொந்தமானது சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா தனியார் நிறுவனம், உலக அளவில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் மருந்துகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளர் என்று நம்பப்படுகிறது - அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசி மற்றும் நோவோவாக்ஸ் இன்க் ஆகியவற்றின் அடிப்படையிலான கோவிட்-19 தடுப்பூசிகள் உட்பட பல தடுப்பூசிகளை தயாரிக்கிறது. டாக்டர் சைரஸ் பூனாவல்லா 1966-ல் இந்த நிறுவனத்தை நிறுவினார். அவர் அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக பணியாற்றுகிறார். அதே நேரத்தில் அவரது மகன் அடர் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.

பூனாவல்லாவால் இந்த சொத்துகளை ஏன் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியவில்லை?

இந்த நிலம் பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்புத் துறை அதிகாரத்தின் கீழ் வருகிறது. இது ஒப்பந்தத்திற்கு அனுமதி வழங்கவும் குத்தகை உரிமைகளை மாற்ற வேண்டும் என்கிறது. 20 நாட்களுக்குள் சொத்து விற்பனை மற்றும் பயன்பாட்டை நிறுத்துதல் குறித்த அறிவிப்பை அமெரிக்கர்கள் கொடுக்கத் தவறிவிட்டதாகக் கூறி, தொழில்நுட்ப அடிப்படையில் இந்த ஒப்பந்தத்தை அது எதிர்த்தது.

2015-ம் ஆண்டில், விற்பனை அறிக்கைகள் சில மாதங்களுக்குப் பிறகு, மும்பை நகர மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வட்டாரங்கள் இந்த சொத்தை பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டதை உறுதிப்படுத்தின.

இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற இந்திய அரசுடன் இணைந்து பூனாவல்லாக்களும், அமெரிக்க அரசும் இணைந்து செயல்பட்டு வரும் நிலையில், இறுதி முடிவு பிரதமர் அலுவலகத்தில் இருக்கிறது என்று கூறப்படுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

India Mumbai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment