Advertisment

மோடி - ஜீ ஜின்பிங் மகாபலிபுரத்தில் சந்திக்கும் முறைசாரா உச்சி மாநாடு என்றால் என்ன?

Modi-Xi meet in Mahabalipuram for ‘Informal Summit: பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் தமிழகத்தில் உள்ள பண்டைய கடற்கரை நகரமான மாமல்லபுரம் அல்லது மகாபலிபுரத்தில் தென் சென்னைக்கு 50 கிலோ மீட்டர் தொலைவில் அக்டோபர் 11-12 தேதிகளில் இரண்டாவது முறைசாரா உச்சி மாநாட்டுக்காக சந்திக்கிறார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
modi xi jinping summit in mahabalipuram,modi xi jinping meeting in chennai, modi xi meeting in chennai, மோடி ஜீ ஜின்பிங் சந்திப்பு, மகாபலிபுரம், மகாபலிபுரம் முறைசாரா உச்சி மாநாடு, modi xi meeting in mahabalipuram, mamallapuram meeting modi xi, modi xi informal summit, india - china

modi xi jinping summit in mahabalipuram,modi xi jinping meeting in chennai, modi xi meeting in chennai, மோடி ஜீ ஜின்பிங் சந்திப்பு, மகாபலிபுரம், மகாபலிபுரம் முறைசாரா உச்சி மாநாடு, modi xi meeting in mahabalipuram, mamallapuram meeting modi xi, modi xi informal summit, india - china

Modi-Xi meet in Mahabalipuram for ‘Informal Summit: பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் தமிழகத்தில் உள்ள பண்டைய கடற்கரை நகரமான மாமல்லபுரம் அல்லது மகாபலிபுரத்தில் தென் சென்னைக்கு 50 கிலோ மீட்டர் தொலைவில் அக்டோபர் 11-12 தேதிகளில் இரண்டாவது முறைசாரா உச்சி மாநாட்டுக்காக சந்திக்கிறார்கள். இரு நாடுகளும் ஏப்ரல் 2018 இல் மத்திய சீனாவின் வுஹானில் தங்கள் முதல் முறைசாரா உச்சி மாநாட்டைக் கூட்டின, அங்கு அவர்கள் உலகளாவிய மற்றும் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்த கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

Advertisment

மோடி - ஜீ ஜின்பிங் முறைசாரா உச்சி மாநாடு

முறைசாரா உச்சி மாநாடுகள் வருடாந்திர உச்சிமாநாட்டிற்கும், ஜி 20 உச்சிமாநாடு, ஐரோப்பிய ஒன்றிய-இந்தியா உச்சிமாநாடு மற்றும் பிரிக்ஸ் உச்சிமாநாடு போன்ற பிற முறையான பரிமாற்றங்களுக்கும் துணை பரிமாற்றங்களாக செயல்படுகின்றன. மேலும் நாடுகளுக்கு இடையில் “நேரடி, இலவச மற்றும் நேர்மையான கருத்து பரிமாற்றத்தை” அனுமதிக்கின்றன. முறையான இருதரப்பு மற்றும் பலதரப்பு கூட்டங்களின் மூலம் செய்ய முடியாத சிலவற்றை அவை நிகழ்ச்சி நிரல் இயக்கப்படுகின்றன, அங்கு குறிப்பிட்ட சிக்கல்கள் விவாதிக்கப்படுகின்றன, மேலும் முடிவுகள் மிகவும் உறுதியாக வரையறுக்கப்படுகின்றன.

முறைசாரா உச்சி மாநாடுகள் ஒரு நிலையான வருடாந்திர அல்லது இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை என்ற கால அட்டவணையில் நடைபெறாது; சம்பந்தப்பட்ட நாடுகளால் அவர்களுக்கு ஒரு தேவை உணரப்படும்போது அவை நடைபெறுகின்றன என்ற பொருளில் அவை முன்கூட்டியதாக உள்ளன. உதாரணமாக, ஆசியான் என்ற சர்வதேச அரசு அமைப்பு 1996, 1997, 1999 மற்றும் 2000 ஆண்டுகளில் நான்கு முறைசாரா உச்சி மாநாடுகளை நடத்தியது. மேலும் 2018 நவம்பரில் பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூரில் நடந்த ஆசியான்-இந்தியா முறைசாரா பிரேக் ஃபாஸ்ட் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார்.

முறைசாரா உச்சிமாநாடுகள் பரந்த அளவிலான பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அனுமதிப்பதால், அவை குறிப்பாக நோக்கம் சார்ந்தவை அல்ல. அவை சில சமயங்களில் முறையான பரிமாற்றங்களை விட ராஜதந்திர உரையாடலில் பெரிய பங்கு வகிப்பதாக கருதப்படுகின்றன. காரணம் அவை மிகவும் ஆழமானவை. நோக்கத்தில் ஒப்பீட்டளவில் நெகிழ்வானவை. விவாதத்துக்கான சாத்தியம் கொண்டவை.

உதாரணமாக, வுஹானில், பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி ஜீ ஜின்பிங் ஆகியோர் இந்தியா - சீனா எல்லை பிரச்னை, இருதரப்பு வர்த்தகம், முதலீடு, பயங்கரவாதம், பொருளாதார மேம்பாடு மற்றும் உலகளாவிய அமைதி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பற்றி விவாதித்து “பரந்த ஒருமித்த கருத்தை” அடைந்தனர்.

இந்தியா முறைசாரா உச்சிமாநாட்டைக் நடத்தியுள்ள ஒரே நாடு சீனா மட்டுமல்ல. மே 2018 -இல் ரஷ்யாவில் உள்ள சோச்சியில் நடந்த முதல் முறைசாரா உச்சி மாநாட்டில் மோடி ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புதினை சந்தித்து சர்வதேச விஷயங்களைப் பற்றி பரந்த மற்றும் நீண்டகால பார்வையில் விவாதித்தார்.

இரு தலைவர்களும் உலகளாவிய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கான தங்கள் நாடுகளின் பொறுப்புகள், இராணுவ மற்றும் அணுசக்தி ஒத்துழைப்பு மற்றும் ஒரு சமமான உலக ஒழுங்கை நோக்கிய இயக்கம் குறித்து விவாதித்தனர்.

ஜூன் 2019 -இல் ஜி 20 உச்சிமாநாட்டின் ஒரு பக்கத்தில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகியவை ரஷ்யா - இந்தியா - சீனா (ஆர்.ஐ.சி) முறைசாரா உச்சி மாநாட்டில் கூடி அங்கே உலகின் பொருளாதார, பாதுகாப்பு மற்றும் அரசியல் நிலைமை தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதித்தன.

வுஹான் முறைசாரா உச்சி மாநாட்டில் என்ன நடந்தது?

இந்தியாவிற்கு சீனாவிற்கும் இடையே 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 27, 28, தேதிகளில் வுஹானில் நடைபெற்ற முதல் முறைசாரா உச்சி மாநாட்டில் மோடியும் ஜீ ஜின்பிங்கும் சந்தித்தனர். இந்த சந்திப்பு இருதரப்பு மற்றும் உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கும், தேசிய அபிவிருத்திக்கான அவரவர் பார்வைகளையும் முன்னுரிமைகளையும் விரிவாகக் கூறவும் தற்போதைய மற்றும் எதிர்கால சர்வதேச சூழல் குறித்து பரிமாறிக்கொள்வதற்கும் நடந்தது.

இந்த உச்சிமாநாட்டிற்கு சில நாட்களுக்கு முன்னர், அரசின் பிரதிநிதிதியும் சீனாவின் வெளியுறவு அமைச்சருமான வாங் யி, வரவிருக்கும் இந்த கூட்டம் ஒரு புதிய தொடக்க கட்டத்தில் உள்ளது. இது இருதரப்பு உறவுகளின் சிறந்த மற்றும் விரைவான வளர்ச்சியை உணர்ந்து கொள்வதற்கான வாய்ப்பாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று கூறினார்.

டோக்லாமில் இந்தியா - சீனா - பூடான் மூன்று நாடுகளின் இரண்டு மாத கால எல்லை பிரச்னைக்குப் பிறகு வுஹான் உச்சி மாநாட்டில் சீன-இந்திய உறவு மறு அமைப்பை அடைந்தது. குறிப்பிடத்தக்க வகையில், வுஹானில், இரு தலைவர்களும் தங்கள் இராணுவத்திற்கு மூலோபாய வழிகாட்டுதல்களை வழங்க முடிவு செய்தனர். இதனால், டோக்லாம் நிலைப்பாட்டைப் போல பிரச்சினைகள் தீவிரமடையவில்லை.

இரு நாடுகளுக்கு இடையே ராஜதந்திர பரிமாற்றங்களின் வழக்கமான அம்சமாக வுஹான் போன்ற உச்சிமாநாடுகளை உருவாக்குவது நல்லது என்று நிபுணர்களும் ஆய்வாளர்களும் அப்போது ஒப்புக்கொண்டனர். இத்தகைய உச்சிமாநாடுகளின் நிறுவனமயமாக்கல் அதிகாரத்தில் உள்ள அரசியல் கட்சியைப் பொருட்படுத்தாமல் நாடுகளுக்கு இடையிலான மூலோபாய தகவல்தொடர்புகளை வலுப்படுத்த உதவும்.

தற்போது இந்தியா வருடாந்திர உச்சிமாநாட்டைக் கொண்ட இரண்டு நாடுகள் ஜப்பான் மற்றும் ரஷ்யா மட்டுமே.

வுஹான் உச்சிமாநாட்டிற்குப் பிறகு இந்தியாவில் உள்ள சீனத் தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் சீனாவும் இந்தியாவும் “நல்ல அண்டை நாட்டினராகவும் நல்ல நண்பர்களாகவும்” இருக்க வேண்டும் என்று கூறியது. மேலும், அது “ஆழ்ந்த நடைமுறை ஒத்துழைப்பை முன்னெடுப்பதன் அவசியத்தையும், மக்கள் மற்றும் கலாச்சார பரிமாற்றங்களை மிகவும் முதிர்ச்சியான வகையில் ஊக்குவிப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தியது.”

சமீபத்திய இந்தியா - சீனா சந்திப்புகள்

பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் கடந்த சில ஆண்டுகளில் மீண்டும் மீண்டும் சந்தித்துள்ளனர். 2019 ஜூன் 13 ஆம் தேதி பிஷ்கெக்கில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்.சி.ஓ) உச்சி மாநாட்டில் அவர்கள் சந்தித்தனர். உண்மையில் இது, 2014 ஆம் ஆண்டு மோடி முதலில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அவர்களுடைய 15வது சந்திப்பு ஆகும்.

பிஷ்கெக் சந்திப்புக்கு முன்னதாக ஜூன் 9, 2018 அன்று குயிங்டாவோவில் ஒரு சந்திப்பு நடைபெற்றது. அங்கு இந்தியாவும் சீனாவும் இருதரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.

குயிங்டாவோ சந்திப்பைத் தொடர்ந்து நவம்பர் 2018 இல் சீனாவின் செங்டுவில் 21வது சுற்று சிறப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த சந்திப்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் மற்றும் அரச பிரதிநிதி மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகியோர் கலந்து கொண்டனர். அங்கே அவர்கள் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான நெருக்கமான வளர்ச்சி கூட்டுறவை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.

India Narendra Modi China Xi Jinping
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment