Advertisment

அதிக அதிகாரங்கள்; நீளும் அமலாக்கத்துறை நடவடிக்கைகள்

மோடி அரசாங்கத்தின் வருகைக்குப் பிறகு, மற்ற மத்திய சட்ட அமலாக்க அமைப்புகளை விட ஊழல் என்று சந்தேகிக்கப்படும் அரசியல்வாதிகளை மிக அதிக கவனத்துடன் பின்தொடரும் அமலாக்கத்துறை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அதிக அதிகாரங்கள்; நீளும் அமலாக்கத்துறை நடவடிக்கைகள்

Deeptiman Tiwary

Advertisment

2014 முதல் எட்டு ஆண்டுகளில், அமலாக்க இயக்குனரகம் (ED) 121 முக்கிய அரசியல்வாதிகளை விசாரித்து, 115 முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக கைது நடவடிக்கை, விசாரணை, சோதனை அல்லது FIR பதிவு செய்துள்ளது. இதற்கு நேர்மாறாக, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் 10 ஆண்டுகளில் (2004-14) 26 தலைவர்கள் மட்டுமே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர், இதில் 14 எதிர்க்கட்சி தலைவர்களும் அடங்குவர்.

நரேந்திர மோடி அரசாங்கத்தின் வருகைக்குப் பிறகு, அமலாக்கத்துறை மற்ற மத்திய சட்ட அமலாக்க அமைப்புகளை விட ஊழல் என்று சந்தேகிக்கப்படும் அரசியல்வாதிகளை மிக அதிக கவனத்துடன் பின்தொடர்கிறது.

இதையும் படியுங்கள்: உயர்கல்வி நிறுவனங்களை மதிப்பிடுதல் தொடர்பாக NAAC அமைப்பு மீதான சர்ச்சை என்ன?

PMLA, அமலாக்கத்துறையின் வாள் உள்ள கை

அமலாக்கத்துறை நடவடிக்கைகளின் தீவிரம் அதன் தற்போதைய இயக்குனர் சஞ்சய் குமார் மிஸ்ரா (2018 முதல்) மற்றும் அவருக்கு முன் இருந்த கர்னால் சிங் (2015-18) ஆகியோர் பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA) 2002 மூலம் ஏஜென்சிக்கு வழங்கப்பட்டுள்ள பெரிய அதிகாரங்களைப் பயன்படுத்தியன் காரணமாக வந்துள்ளது.

மற்ற ஏஜென்சிகளை, குறிப்பாக சி.பி.ஐ.,யை நிர்வகிக்கும் சட்டங்களைப் போலல்லாமல், மாநில அரசுகளின் ஒப்புதலுடன் அல்லது ஒப்புதல் இல்லாமல் நாடு முழுவதும் அதன் பரந்த அட்டவணையின் கீழ் எந்தவொரு குற்றத்தையும் அறிய அமலாக்கத்துறையை PMLA சட்டம் அனுமதிக்கிறது.

எனவே, மாநில போலீஸ் படைகளால் பதிவுசெய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர்.,களின் அடிப்படையில் அரசியல்வாதிகள் அல்லது ஆர்வலர்கள் மீது பணமோசடி வழக்குகளை பதிவு செய்ய முடிந்தது, இது மாநில அரசு கோரினால் அல்லது நீதிமன்றம் அல்லது மத்திய விஜிலென்ஸ் கமிஷன் (CVC) உத்தரவின்றி சி.பி.ஐ.,யால் செய்ய முடியாத ஒன்று ஆகும்.

தேசிய புலனாய்வு முகமைக்கும் (NIA) நாடு முழுவதும் உள்ள குற்றங்களை தானாக முன்வந்து விசாரணை நடத்த அதிகாரம் இருந்தாலும், NIA சட்டத்தின் அட்டவணை, அதாவது, அது விசாரிக்கக்கூடிய குற்றங்களின் வகைகள் சுமார் ஒரு டஜன் குற்றங்களுக்கு மட்டுமே.

மறுபுறம், PMLA இன் அட்டவணை, சட்டம் இயற்றப்பட்ட 2002 இல் வெறும் ஆறு குற்றங்களில் இருந்து, இப்போது 147 விதிகளுக்கு மேல் உள்ள குற்றங்களின் 30 குழுக்களாக அதிகரித்துள்ளது. பயங்கரவாதம் போன்ற கடுமையான குற்றங்களில் இருந்து காட்டு விலங்குகளை வேட்டையாடுவது வரை மற்றும் பதிப்புரிமை மீறலில் இருந்து தவறான வர்த்தக முத்திரைகள் வரை அமலாக்கத்துறையின் பரவலான எல்லை நீண்டுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் சொத்துக்கள் மற்றும் செல்வங்களை பறிமுதல் செய்யவும், குற்றஞ்சாட்டப்பவர்களை கைது செய்து செய்யவும், கடுமையான ஜாமீன் நிபந்தனைகளை விதிக்கவும், நீதிமன்றத்தில் சாட்சியமாக விசாரணை அதிகாரி முன் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்தை வழங்கவும் புலனாய்வாளர்களுக்கு அதிகாரம் வழங்கும் PMLA இன் விதிகள், சி.பி.ஐ.,யை விட அமலாக்கத்துறையை மிகவும் சக்திவாய்ந்ததாக ஆக்கியுள்ளன.

பெருகிய முறையில் கடுமையானது

PMLA இன் வரம்பு 2009, 2013, 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் திருத்தங்கள் மூலம் விரிவுபடுத்தப்பட்டது, இவை அமலாக்கத்துறைக்கு இப்போது இருக்கும் அதிக அதிகாரங்களை வழங்குகின்றன.

2009 ஆம் ஆண்டில், இந்திய தண்டனைச் சட்டத்தின் 120பி பிரிவின் கீழ் 'கிரிமினல் சதி' பல்வேறு குற்றங்களில் PMLA இன் அட்டவணையில் சேர்க்கப்பட்டது. இது, பல ஆண்டுகளாக, சதி எனக் கூறப்படும் எந்தவொரு வழக்கிலும் நுழைய அமலாக்கத்துறையை அனுமதித்துள்ளது, முதன்மைக் குற்றம் PMLA அட்டவணையின் பகுதியாக இல்லாவிட்டாலும் கூட. 2009 ஆம் ஆண்டில், பணமோசடி வழக்குகளைக் கண்காணிப்பதைப் பொருத்தவரை அமலாக்கத்துறை சர்வதேச அதிகார வரம்பையும் பெற்றது.

2015 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் செய்யப்பட்ட திருத்தங்களைத் தொடர்ந்து, மோசடி செய்யப்பட்ட பணத்தின் மூலம் வெளிநாட்டில் வாங்கிய சொத்துகளுக்கு இணையான சொத்துக்களை இந்தியாவில் இணைக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டது.

2019 இல் PMLA இல் சேர்க்கப்பட்ட சில "விளக்கங்கள்" மூலம், திட்டமிடப்பட்ட குற்றத்துடன் "தொடர்புடையதாக" குற்றஞ்சாட்டப்பட்ட குற்றச் செயல்களின் மூலம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சம்பாதித்த சொத்துக்களை இணைக்க அமலாக்கத்துறைக்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

சர்ச்சைக்குரிய விதிகள்

குற்றம் சாட்டப்பட்டவர்கள் சாட்சியமாக அளித்த அறிக்கைகளை ஏற்றுக்கொள்வது தொடர்பான PMLA இன் விதிகள் மற்றும் கடுமையான ஜாமீன் விதிகள் மிகவும் சர்ச்சைக்குரியவை. விசாரணை அதிகாரியின் முன் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலம் நீதிமன்றத்தில் சாட்சியமாக ஏற்றுக்கொள்ளப்படும் என்ற நாட்டில் உள்ள ஒரே சட்டம் இதுவாகும். TADA மற்றும் POTA போன்ற அத்தகைய விதிகளைக் கொண்ட பிற சட்டங்கள் நீண்ட காலமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஜாமீன் வழங்குவதற்கான விதியானது, ஒரு மாஜிஸ்திரேட் ஒரு குற்றம் சாட்டப்பட்டவருக்கு முதன்மையான பார்வையில் எந்த குற்றமும் செய்யப்படவில்லை என்று அவர் நம்பும் வரை அவருக்கு ஜாமீன் வழங்க மாட்டார் என்று கூறுகிறது. ஜாமீன் கட்டத்திலேயே விசாரணையை முன்னிறுத்தி உச்ச நீதிமன்றம் இந்த விதியை ரத்து செய்தது. ஆனால் இந்த ஆண்டு ஜூலை 27 அன்று நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் தலைமையிலான ஒரு பெரிய பெஞ்ச், பணமோசடி வழக்குகளில் கடுமையான ஜாமீன் நிபந்தனைகள் உட்பட PMLA இன் அனைத்து விதிகளின் செல்லுபடியை உறுதி செய்தது.

இதன் விளைவாக இரண்டு முதல் ஏழு ஆண்டுகள் வரையிலான தண்டனைகளை ஈர்க்கும் குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீன் இல்லாமல் நீண்ட காலத்திற்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், உண்மையில் இது இந்த செயல்முறையை தண்டனையாக மாற்றுகிறது.

பெரிய மற்றும் மிகவும் பயமுறுத்தும் எண்ணிக்கை

இயக்குனர் மிஸ்ராவின் கீழ், அமலாக்கத்துறை இந்த விதிகளை சந்தேகத்திற்குரிய குற்றவாளிகள் மீது முன்பை விட அதிக தீவிரத்துடன் பயன்படுத்தியுள்ளது, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கீழ் சுமார் 400 அதிகாரிகளைக் கொண்ட குழுவில் இருந்து இப்போது 1,600 அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறையின் பலம் அதிகரித்துள்ளது. அமலாக்கத்துறையின் அனுமதிக்கப்பட்ட பலம் 2,000க்கு மேல் உள்ளது.

அமலாக்கத்துறையின் விரிவாக்கப் பணியின் நோக்கம், அது சமீபத்தில் எடுத்துக் கொண்ட வழக்குகளின் எண்ணிக்கையிலும் பிரதிபலிக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் கீழ், அமலாக்கத்துறை 1,867 பணமோசடி வழக்குகளை பதிவு செய்தது, இதில் 112 சோதனைகள் மற்றும் 5,346 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் கீழ், மார்ச் 2022 வரை உள்ள தரவுகளின்படி, கிட்டத்தட்ட இரு மடங்கு வழக்குகள், அதாவது 3,555 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரெய்டுகளின் எண்ணிக்கை (3,010) 27 மடங்கு அதிகமாகவும், இணைப்புகளின் மதிப்பு (ரூ. 99,356 கோடி) ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை விட 18 மடங்கு அதிகமாகவும் இருந்தது.

தேசிய ஜனநாயக கூட்டணியின் கீழ் அமலாக்கத்துறையால் பதிவு செய்யப்பட்ட 3,555 PMLA வழக்குகளில், 3,066 வழக்குகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன, 3,010 சோதனைகளில் 2,564 சோதனைகள் இந்த காலகட்டத்தில் நடத்தப்பட்டன.

சி.பி.ஐ அல்லது மாநில காவல்துறையால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட குற்றத்தை மட்டுமே அறிந்து கொள்ள முடியும் என்பதால், எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை குறிவைத்து அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது என்ற விமர்சனம் ஆதாரமற்றது என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

"எங்களால் விசாரிக்கப்படுபவர்கள் ஏற்கனவே பிற நிறுவனங்களால் வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள், எனவே அமலாக்கத்துறை அவர்களை குறிவைக்கிறது என்று எவ்வாறு கூற முடியும்? ஒரு அரசியல்வாதி மீது சி.பி.ஐ அல்லது ஒரு மாநிலத்தின் விஜிலென்ஸ் துறை ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான பிறகுதான் நாங்கள் பணமோசடி குறித்து விசாரிக்க வருகிறோம். மேலும், எங்களுக்கு மோசமான தண்டனை விகிதம் உள்ளது என்ற தவறான எண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. பணமோசடி தொடர்பான 21 வழக்குகளில் விசாரணை நிறைவடைந்த நிலையில், 18 வழக்குகளில் 30 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது,” என மூத்த அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Enforcement Directorate Explained
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment