Advertisment

சேவை கட்டணத்திற்கு தடை: ஹோட்டல்களில் மீறி வசூலித்தால் என்ன செய்வது?

ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரென்ட்கள் சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று நுகர்வோரிடம் கட்டாயப்படுத்தக் கூடாது என மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) உத்தரவு பிறப்பித்துள்ளது.

author-image
WebDesk
New Update
சேவை கட்டணத்திற்கு தடை: ஹோட்டல்களில் மீறி வசூலித்தால் என்ன செய்வது?

ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரென்ட்கள் சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று நுகர்வோரிடம் கட்டாயப்படுத்தக் கூடாது என மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisment

சிசிபிஏ சொல்லும் புதிய வழிமுறை என்ன?

1) உணவு கட்டணத்துடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சேவைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது .

2) சேவைக் கட்டணம் அளிக்க வேண்டும் என்பது வாடிக்கையாளர் விருப்பத்துக்கு உட்பட்டதாகும். அதை நுகர்வோரின் முடிவுக்கு விட்டுவிட வேண்டும்.

3) நுகர்வோர் ஆர்டர் செய்த உணவுடன் எந்த பெயரிலும் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படக் கூடாது.

4) மேலும் சேவை கட்டணம் தொடர்பாக சிறப்பான சேவை தரப்படும் என்று ஹோட்டல்கள் கூறக்கூடாது.

இந்த வழிமுறைகளை மீறி கட்டணம் வசுலீக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

இதைமீறியும் சேவைக்கட்டணம் வசூலிக்கப்பட்டால் வாடிக்கையாளர்கள் தேசிய நுகர்வோர் சேவை தொலைபேசி எண் 1915-ல் தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரென்ட் குறித்து புகார் அளிக்கலாம்.

ஹோட்டல் நிர்வாகிகள் என்ன சொல்கிறார்கள் ?

இந்நிலையில், ஜூன் 2 ம் தேதி நடைபெற்ற ஹோட்டல் நிர்வாகிகள் கூட்டதில், சர்வீஸ் சார்ஜ் தொடர்பாக பேசப்பட்டபோது, இது தனிநபர்கள் சார்ந்த திட்டமே தவிற, சட்டபூவமாக கட்டாயமில்லை. ஆனால் அதேவேளையில் சர்வீஸ் சார்ஜ் மூலம் அரசுக்கு வருவாய் வருகிறது. அந்த பணத்திற்கும் வரி இருக்கிறது என்று கூறியுள்ளனர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment