பாகிஸ்தான் கொடி தாங்கிய கப்பல் இந்தியாவில் நுழையத் தடை: கப்பல்கள் தங்கள் கொடிகளை தேர்வு செய்வது எப்படி?

இந்தியாவில் உள்ள துறைமுகங்களில் பாகிஸ்தான் கொடியுடன் கூடிய கப்பல்கள் நுழையத் தடை விதிக்கப்படுவதாக மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இந்தியாவில் உள்ள துறைமுகங்களில் பாகிஸ்தான் கொடியுடன் கூடிய கப்பல்கள் நுழையத் தடை விதிக்கப்படுவதாக மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
No entry for Pakistan-flagged ships

இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கப்பல்கள் நுழைய தடை!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்த நடவடிக்கையின் ஒருபகுதியாக, இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கொடியுடன் கூடிய கப்பல்கள் நுழைவு தடை விதித்து இந்தியக் கப்பல் இயக்குனரகம் (DGS) மே 3-ம் தேதி (சனிக்கிழமை) உத்தரவிட்டுள்ளது.

Advertisment

"இந்தியாவின் சொத்துகள், சரக்குகள் மற்றும் துறைமுக உள்கட்டமைப்பைப் பாதுகாக்க வணிகக் கப்பல் சட்டம், 1958-ன் பிரிவு 411-ன் கீழ் உடனடியாக இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது. கடற்படையின் மூலமாக இந்திய வணிகத்தை ஊக்குவிப்பதும், கடற்படையின் பராமரிப்பை உறுதி செய்வதும் இந்தச் சட்டத்தின் நோக்கம்" என்று அமைச்சகம் கூறியுள்ளது.

இந்தியாவின் நடவடிக்கைக்கு பழிவாங்கும் விதமாக பாகிஸ்தான் துறை முகங்களில் இந்திய கொடிகளுடன் வரும் எந்த கப்பல்களையும் அனுமதிக்க கூடாது என்றும் பாகிஸ்தான் கொடி ஏந்திய கப்பல்கள் இந்திய துறை முகங்களுக்கு செல்லக்கூடாது என்றும் பாகிஸ்தான் கடல்சார் விவகார அமைச்சகத்தின் துறைமுகங்கள் மற்றும் கப்பல் பிரிவு உத்தரவிட்டுள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க: No entry for Pakistan-flagged ships in India

Advertisment
Advertisements

கப்பல் போக்குவரத்து - நாடுகளின் கொடிகள் அவசியமா?

ஒரு கப்பலில் ஏற்றப்பட்டிருக்கும் கொடி, கப்பலின் உரிமையாளர் (அ) பணியாளர்களின் அந்த நாட்டை சேர்ந்தவர் என்பது அர்த்தமல்ல, அந்தக் கப்பல் எந்த நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. சர்வதேச கடல்சார் அமைப்பு (IMO) கூறுவதாவது: "ஒரு கப்பலை ஒரு அரசுடன் இணைப்பதன் மூலம், அந்தக் கப்பல் பதிவு செய்யப்பட்டுள்ள நாட்டுக்கு சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் அந்தக் கப்பலை பாதுகாக்கும் உரிமை உள்ளது. இந்த அடையாளம் அவசியமாகிறது, ஏனெனில் கப்பல்கள் பெரும்பாலும் எந்த நாட்டின் அதிகாரமும் இல்லாத சர்வதேச கடல்களைக் கடந்து செல்கின்றன.

சர்வதேச சட்டத்தின் கட்டமைப்பின் கீழ், ஒவ்வொரு நாடும் கப்பல்களுக்கு தங்கள் நாட்டுத் தேசியம் வழங்குவதற்கான நிபந்தனைகளை மற்றும் தங்கள் தேசியக் கொடியை ஏற்றுவதற்கான உரிமையை நிர்ணயிக்க வேண்டும். எனினும், தற்போது உலகளாவியமாக கட்டாயப்படுத்தப்பட்ட ஒரே மாதிரியான பதிவு செயல்முறை இல்லை.

இந்தியக் கப்பல் இயக்குனரக (DGS) இணையதளத்தின் படி, ஒரு கப்பலின் பதிவு, அதன் சொத்துகளுடன் தொடர்புடையவர்களுக்கு உரிமையை நிரூபிக்கும் ஆதாரமாக செயல்படுகிறது. மேலும், காயம் (அ) உயிரிழப்பை ஏற்படுத்தும் விபத்துகளுக்குப் பின்னர், இந்திய சட்டங்களின் கீழ் இந்திய நீதிமன்றங்களில் இழப்பீடு கோருவதற்கான உரிமையை கப்பலின் பணியாளர்களுக்கு வழங்குகிறது.

ஒரு நாடு, தங்கள் கொடியை ஏற்றியுள்ள கப்பல்களின் நிர்வாக, தொழில்நுட்ப மற்றும் சமூக அம்சங்களை கட்டுப்படுத்தும் அதிகாரத்தையும் பொறுப்பையும் மேற்கொள்கிறது. பாதுகாப்பு, மாசுபாடு தடுப்பு, மற்றும் கப்பலின் உள்ளேயுள்ள வாழும் மற்றும் பணிபுரியும் சூழ்நிலைகளுக்கான சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப இருக்கிறதா என்பதை கண்காணிக்கும் பொறுப்பு, அந்தக் கொடி நாட்டுரிமையே ஆகும்.

எந்தக் கப்பலும் எந்த நாட்டின் கொடியை ஏற்றலாமா?

1982-ம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் கடல் சட்டக் கூட்டமைப்பு (UNCLOS) என்பது கடல் சார்ந்த நடவடிக்கைகளுக்கான உலகளாவிய ஒப்பந்தமாகும். இதில், ஒரு கப்பல் மற்றும் அதைப் பதிவு செய்திருக்கும் நாட்டுக்கிடையில் “உண்மையான தொடர்பு” இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. எனினும், அந்த தொடர்பு என்னவென்பதற்கான தெளிவான வரையறை இல்லை.

2000-ம் ஆண்டு கார்டிஃப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் (“The meaning of the ‘genuine link’ requirement in relation to the nationality of ships”), அந்த “உண்மையான தொடர்பு” என்பது, ஒரு நாடு தனது கொடியை ஏற்றிய கப்பல்களில் தக்க அதிகாரமும் கட்டுப்பாடும் செலுத்துவதைப் பொருள்படுத்துகிறது என கூறப்பட்டுள்ளது. அதில், கப்பலின் ஆய்வுகளைச் செய்ய தகுதியான நிபுணர்கள், பணியாளர்களின் சான்றிதழ்களைச் சரிபார்ப்பது போன்ற பணிகள் அடங்கும்.

இந்த உண்மையான தொடர்பின் நோக்கம், கொடியேற்றப்பட்ட நாடு மேற்கொள்ள வேண்டிய கடமைகளை பயனுள்ள முறையில் செயல்படுத்துவதை உறுதிசெய்வதாகும். சில நேரங்களில், கப்பல்களின் போலியான பதிவு பற்றிய பிரச்னையும் எழுந்துள்ளது. உதாரணமாக, 2017-ல் காங்கோ ஜனநாயகக் குடியரசு (DRC) கூறியது: சுமார் 73 கப்பல்கள் தங்களுடைய கொடியைப் போலியாக பயன்படுத்தி, அவர்களது நீர்ப்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததாக கூறியது.

கப்பல்கள் எந்த நாட்டின் கொடியை தேர்வுசெய்கின்றன?

சில நாடுகள், உரிமை (அ) பணியாளர்களின் தொடர்பு போன்ற உறவுகள் உள்ள கப்பல்களையே மட்டுமே தங்களிடம் பதிவு செய்ய அனுமதிக்கின்றன. இதனை closed registry என அழைக்கின்றனர். மற்ற சில நாடுகள், வெளிநாட்டு உரிமையுள்ள அல்லது கட்டுப்பாட்டிலுள்ள கப்பல்களுக்கு தங்கள் கொடியைப் பயன்படுத்த அனுமதிக்கின்றன. இதை open registry என கூறுகின்றனர். சில நாடுகள் தங்கள் கொடியைப் பயன்படுத்தி சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபட அனுமதிக்கவே மறுக்கின்றன.
இந்நிலையில், open registry இப்போது உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன என சர்வதேச கடற்பரப்புக் கழகம் (IMO) தெரிவிக்கிறது.

2023-ல் வெளியான The Diplomat கட்டுரையொன்றில், ஒரு கப்பலுக்கு கொடி அமைப்பது என்பது அந்தக் கப்பலுக்கு குறிப்பிட்ட நாட்டின் வரிவிலக்கு, சான்றிதழ் வழங்கல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்ற பலன்களை வழங்கக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனை flag of convenience என்று குறிப்பிடுகின்றனர், இதில் கப்பல்கள் அதிகமான நன்மைகள் வழங்கும் நாடுகளைத் தேர்ந்தெடுக்கின்றன.

அதன்படி, பெரும்பாலான வர்த்தகக் கப்பல்கள் குறைந்த எண்ணிக்கையிலான நாடுகளிலேயே பதிவு செய்யப்படுகின்றன. 2023-ம் ஆண்டிற்கான முன்னணி 8 கொடி நாடுகள் பனாமா, லைபீரியா, மார்ஷல் தீவுகள், ஹாங்காங்க், சிங்கப்பூர், சீனா, மால்டா மற்றும் பகாமா என குறிப்பிடப்பட்டுள்ளது

Pakistan India

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: