ஒமிக்ரானுக்கு எதிராக தடுப்பூசி செயல்திறன்… மாடர்னா சி.இ.ஓ கருத்தால் எழுந்த புதிய கவலைகள்

பைனான்சியல் டைம்ஸ் ( Financial Times) செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில், வைரஸ் மாறுபாட்டிற்கு எதிரான தடுப்பூசிகளின் செயல்திறனில் மூலப்பொருள் வீழ்ச்சி இருக்க வாய்ப்புள்ளது என்று பன்செல் கூறினார்.

பைனான்சியல் டைம்ஸ் ( Financial Times) செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில், வைரஸ் மாறுபாட்டிற்கு எதிரான தடுப்பூசிகளின் செயல்திறனில் மூலப்பொருள் வீழ்ச்சி இருக்க வாய்ப்புள்ளது என்று பன்செல் கூறினார்.

author-image
WebDesk
New Update
Omicron, Moderna CEO Bancel comment on Omicron, Moderna ceo comment on effectiveness of vaccines against Omicron, moderna ceo bancel, ஒமிக்ரானுக்கு எதிராக தடுப்பூசி செயல்திறன், மாடர்னா சிஇஓ கருத்தால் எழுந்த புதிய கவலைகள், மாடர்னா சிஇஓ, tamilnadu, tamil politics, omicron, moderna

கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான ஓமிக்ரான் பற்றிய குணங்கள் இன்னும் ஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில், தடுப்பூசி தயாரிப்பாளரான மாடர்னாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் பன்செல், இந்த வைரஸ் மாறுபாட்டிற்கு எதிராக தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்து புதிய கவலைகளை எழுப்பியுள்ளார். பைனான்சியல் டைம்ஸ் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில், அவர் இந்த வைரஸ் மாறுபாட்டிற்கு எதிரான தடுப்பூசிகளின் செயல்திறனில் மூலப்பொருள் வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளதாக பன்செல் கூறினார்.

Advertisment

“இது ஒரு மூலப்பொருள் வீழ்ச்சியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். தரவுக்காக நாங்கள் காத்திருக்க வேண்டியிருப்பதால் எவ்வளவு வீழ்ச்சி என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், நான் பேசிய அனைத்து விஞ்ஞானிகளும்… ‘இது நன்றாக இருக்காது’ என்று தெரிவித்தனர்” என்று அவர் கூறினார்.

நிச்சயமற்ற தன்மைகள்

பன்செலின் கருத்துக்கள் அதன் உறுதியான தன்மையால் ஆச்சரியமாக இருந்தன. ஒமிக்ரான் மாறுபாட்டின் சாத்தியக்கூறுகள், நோய் எதிர்ப்பு சக்தியைத் தவிர்க்கும் அதிக திறனைக் கொண்டிருக்கின்றன. இதனால் தடுப்பூசிகள் குறைவான செயல்திறன் கொண்டவை. அது தோன்றிய நாளிலிருந்து விவாதத்தில் உள்ளது. இந்த மாறுபாட்டால் பாதிக்கப்பட்டவர்களில் பலர் ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டுள்ளனர். சிலருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும்கூட போடப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

இருப்பினும், மிகவும் நம்பகமான தரவு இல்லாத நிலையில், ஏற்கனவே, நோய்த்தொற்று பரவலில் உள்ள மற்ற வகைகளைவிட நோயெதிர்ப்பில் இருந்து தப்பிக்கும் ஒமிக்ரானின் திறன் கணிசமாக அதிகமாக உள்ளதா என்பது நிச்சயமற்றதாக இருக்கிறது. டெல்டா மாறுபாடு மற்றும் சில, பல்வேறு அளவுகளில் நோய் எதிர்ப்பு சக்தியைத் தவிர்க்க முடியும். அதனால்தான், பல தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கும் தொற்று ஏற்படுகிறது. எடுத்துக்காட்டாக, அதிக தடுப்பூசி போடப்பட்ட பகுதிகளில் ஐரோப்பாவில் தற்போதைய அலை ஒரு எடுத்துக்காட்டு ஆகும். தடுப்பூசி போடப்பட்ட மக்கள் குழுக்களிடையே கூட, ஒவ்வொரு நாளும் பல ஆயிரம் புதிய தொற்றுகள் கண்டறியப்படுகிறது.

டெல்டா அல்லது பிற வகைகளைவிட நோய் எதிர்ப்பு சக்தியைத் தவிர்ப்பதற்கான ஓமிக்ரான் மாறுபாட்டின் திறன் கணிசமாக அதிகமாக இருந்ததா என்பது இப்போது வரை தெளிவாக இல்லை. உலக சுகாதார அமைப்பு மற்றும் பிற விஞ்ஞானிகள் இன்னும் தெளிவான அறிக்கையைப் பெற குறைந்தது இரண்டு வாரங்கள் ஆகும் என்று கூறியுள்ளனர்.

நோயின் தீவிரம் தெரியவில்லை

நோய் எதிர்ப்பு சக்தியைத் தவிர்க்கும் திறன் என்பது ஒரு குறிப்பிட்ட மாறுபாட்டின் அச்சுறுத்தலை மதிப்பிடுவதற்கு விஞ்ஞானிகள் கவனிக்கும் பல பண்புகளில் ஒன்றாகும். அதிக அளவில் பரவும் தன்மை மற்றும் மிகவும் கடுமையான நோயை ஏற்படுத்தும் திறன் ஆகியவை கூர்ந்து கவனிக்கப்படும் மற்ற சில பண்புகளாகும். ஆரம்ப அறிக்கைகள் ஓமிக்ரான் மாறுபாடு வேகமாக பரவும் திறனைக் கொண்டிருப்பதாகக் கூறினாலும், அது ஏற்படுத்தும் நோயின் தீவிரம் குறித்த தகவல்கள் இல்லை.

தடுப்பூசிகள் நோய்த்தொற்றுகளைத் தடுப்பதற்காக அல்ல, ஆனால், கடுமையான நோய்கள் மற்றும் இறப்புகளைத் தவிர்க்கும் என்று விஞ்ஞானிகள் தொடக்கத்தில் இருந்து கூறிவருகின்றனர். தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து தொற்றுநோய் பாதிப்பு விதத்திலிருந்தும் இது தெளிவாகிறது. தடுப்பூசி போடப்பட்டவர்கள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், கடுமையான நோய்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் தடுப்பூசி போடப்பட்டவர்களில் இறப்புகள் கணிசமாகக் குறைந்துள்ளன.

அதாவது, ஓமிக்ரான் நோய் எதிர்ப்பு சக்தியைத் தவிர்ப்பதற்கான அதிக திறனைக் கொண்டிருந்தாலும், அது ஒரே நேரத்தில் கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கவில்லை என்றால் அதன் தாக்கம் குறைவாக இருக்கும். டெல்டா மாறுபாடு மிகவும் அழிவுகரமானதாக இருந்தது. ஏனெனில், அது குறைந்தபட்சம் தடுப்பூசி போடப்படாத மக்களிடையே, அதிக அளவில் பரவுதல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தவிர்க்கும் திறன் ஆகியவற்றைத் தவிர, கடுமையான நோய்களை ஏற்படுத்தியது.

ஒமிக்ரான் மாறுபாடு கண்டறியப்பட்டு ஒரு வாரத்திற்கும் மேலாகிறது. இந்த மாறுபாடு பல நாடுகள் மற்றும் பல பகுதிகளுக்கு பரவியிருந்தாலும், அதனால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Omicron Who Covid 19 2 Coronavirus

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: