Advertisment

மக்களவையில் அத்துமீறி நுழைந்தவர்களுக்கு பாஸ் வழங்க பரிந்துரைத்த பா.ஜ.க எம்.பி பிரதாப் சிம்ஹா யார்? பாஸ் வழங்கும் நடைமுறை என்ன?

பிரதாப் சிம்ஹா யார், நாடாளுமன்றத்திற்கு பார்வையாளர் அனுமதிச் சீட்டுகளை வழங்கும் செயல்முறை என்ன? எம்.பி விண்ணப்பதாரரை தனிப்பட்ட முறையில் அறிந்திருக்க வேண்டுமா அல்லது அவரது நடத்தைக்கு ஏதேனும் பொறுப்பு ஏற்க வேண்டுமா?

author-image
WebDesk
New Update
security breach bjp mp

pபா.ஜ.க எம்.பி பிரதாப் சிம்ஹா (இடது), 2 பேர் மக்களவையில் அத்துமீறி நுழைந்தபோது (வலது)

பிரதாப் சிம்ஹா யார், நாடாளுமன்றத்திற்கு பார்வையாளர் அனுமதிச் சீட்டுகளை வழங்கும் செயல்முறை என்ன? எம்.பி விண்ணப்பதாரரை தனிப்பட்ட முறையில் அறிந்திருக்க வேண்டுமா அல்லது அவரது நடத்தைக்கு ஏதேனும் பொறுப்பு ஏற்க வேண்டுமா? ஆகியவற்றை விரிவாக விளக்குகிறோம்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Parliament security breach: Who is BJP MP Pratap Simha, who recommended visitor passes for the accused; how they are issued

புதன்கிழமை (டிசம்பர் 13) மக்களவைக்குள் நுழைந்து மஞ்சள் புகையை வெளியேற்றும் குப்பியை வீசிய இருவர் பா.ஜ.க எம்.பி பிரதாப் சிம்ஹாவின் அங்கீகார அனுமதிச் சீட்டுகளை (பாஸ்) வைத்திருந்தனர்.

பி.டி.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான மனோரஞ்சன் டி, அவருடன் வந்த சாகர் ஷர்மாவை எம்.பி அலுவலகத்தில் நண்பராக அறிமுகப்படுத்தி, புதிய நாடாளுமன்றத்தைப் பார்ப்பதாகக் கூறி, அவர்களுக்கு அனுமதி சீட்டுகளைப் பெற்றார் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், மனோரஞ்சன் டி மூன்று மாதங்களுக்கும் மேலாக பாஸுக்காக சிம்ஹாவையும் அவரது அலுவலகத்தையும் பின்தொடர்ந்ததாக பி.டி.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

பிரதாப் சிம்ஹா யார், நாடாளுமன்றத்திற்கு பார்வையாளர் அனுமதிச் சீட்டுகளை வழங்கும் செயல்முறை என்ன? எம்.பி விண்ணப்பதாரரை தனிப்பட்ட முறையில் அறிந்திருக்க வேண்டுமா அல்லது அவரது நடத்தைக்கு ஏதேனும் பொறுப்பு ஏற்க வேண்டுமா? ஆகியவற்றை விரிவாக விளக்குகிறோம்.

நாடாளுமன்றத்திற்கு பார்வையாளர் அனுமதிச் சீட்டுகள் (பாஸ்) எப்படி வழங்கப்படுகிறது? 

பார்வையாளர்களின் அனுமதி (நாடாளுமன்ற மொழியில் வெளி ஆட்கள்) லோக்சபா நடைமுறை மற்றும் நடத்தை விதிகளின் விதி 386 ஆல் நிர்வகிக்கப்படுகிறது.  “அறிமுகம், திரும்பப் பெறுதல் மற்றும் வெளி ஆட்களை அகற்றுதல்”,  “உறுப்பினர்களின் பிரத்தியேக பயன்பாட்டிற்காக ஒதுக்கப்படாத சபையின் அந்த பகுதிகளுக்கு சபையின் அமர்வுகளின் போது வெளி ஆட்களை அனுமதிப்பது ஆகியவற்றைக் கையாளும் விதி சபாநாயகரின் உத்தரவுகளின்படி ஒழுங்குபடுத்தப்படும்” என்று கூறுகிறது.

எம்.என்.கௌல் மற்றும் எஸ்.எல். ஷக்தேர் ஆகியோர்,“நாடாளுமன்றத்தின் நடைமுறை மற்றும் நடைமுறை”யின்படி,  “ஒரு உறுப்பினர் தங்களுக்குத் தனிப்பட்ட முறையில் நன்கு தெரிந்தவர்களுக்கு மட்டுமே பார்வையாளர் அட்டைகளை வழங்க விண்ணப்பிக்க முடியும்.” 

பார்வையாளர் அட்டைகளுக்கு விண்ணப்பிக்கும் போது, உறுப்பினர்கள், “மேற்கண்ட பெயரில் உள்ள பார்வையாளர் எனது உறவினர்/தனிப்பட்ட நண்பர்/ எனக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்தவர், அவருக்கு/அவளுக்கான முழுப் பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்கிறேன்” என்று சான்றிதழ் வழங்க வேண்டும்.

பாதுகாப்பு காரணங்களுக்காக, பார்வையாளர்கள் புகைப்பட அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும்.

“பார்வையாளர்களின் பெயர்கள் முழுவதுமாக கொடுக்கப்பட வேண்டும், இனிஷியலுடன் அல்ல. பார்வையாளரின் தந்தை/கணவரின் பெயரும் தவறாமல் முழுமையாக கொடுக்கப்பட வேண்டும்.” என்று விதிகள் கூறுகிறது.

ராஜ்யசபாவிற்கும் இதே போன்ற விதிகள்

“விதிமுறைகளின் கீழ், ஒரு உறுப்பினர் தனக்குத் தெரிந்த நபருக்காக பார்வையாளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் அல்லது தனிப்பட்ட முறையில் தனக்குத் தெரிந்த நபரால் உறுப்பினருக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர்களுக்காக குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் விண்ணப்பிக்கலாம். இதில் கடசியாக குறிப்பிட்டதில் உறுப்பினர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.” என்று விதிகள் கூறுகிறது.

குறிப்பாக, “அத்தகைய உறுப்பினர்களின் வேண்டுகோளின் பேரில் வழங்கப்பட்ட அட்டைகளை வைத்திருப்பவர்கள் ஏதாவது செய்ததன் விளைவாக, பார்வையாளர்கள் மாடத்தில் ஏதேனும் விரும்பத்தகாத நிகழ்வு அல்லது விரும்பத்தகாத காரியங்கள் நடந்தால் அதற்கு உறுப்பினர்கள் பொறுப்பு என்பதை நினைவில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.” என்று விதிகள் கூறுகிறது.

இந்நிலையில், மனோரஞ்சன் டி- யின் தந்தை இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், பிரதாப் சிம்ஹா உள்ளூர் எம்.பி.யாக இருப்பதால், அவருடன் நல்ல உறவைப் பகிர்ந்து கொள்கிறோம்.

சிம்ஹாவின் அலுவலகம் அவரை ஆதரித்ததாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது, பொதுவாக எம்.பி.க்கள் தங்கள் தொகுதி உறுப்பினர்களிடம் இருந்து இதுபோன்ற கோரிக்கைகளை ஏற்றுக்கொள்கின்றனர்.

பிரதாப் சிம்ஹா யார்?

பிரதாப் சிம்ஹா மைசூர்-குடகு மக்களவை உறுப்பினராக உள்ளார். அவர் முதலில் 2014 இல் எம்.பி ஆனார், அதற்கு முன்பு கன்னட மொழி வெளியீடுகளில் பத்திரிகையாளராக பணியாற்றினார். இவர் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் முன்னாள் தலைவர் ஆவார்.

பிரதாப் சிம்ஹா எம்.பி.யாக இருந்த காலம் கர்நாடகாவை சேர்ந்த பா.ஜ.க தலைவர்களுடனான மோதல் உட்பட பல சர்ச்சைகளால் குறிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில், கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் இருந்தபோது, மைசூர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் ரூ.5 முதல் 6 கோடி வரை ஊழல் நடந்துள்ளதாகவும், பல்கலைக்கழகத்திற்கு உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் பிரதாப் சிம்ஹா கூறியிருந்தார். 

கர்நாடகாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் காங்கிரஸிடம் பா.ஜ.க தோல்வியடைந்த பிறகு, பி.எஸ். எடியூரப்பா மற்றும் பசவராஜ் பொம்மையின் முதல்வர்களின் கீழ் உள்ள பா.ஜ.க அரசாங்கங்கள் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் மீது ஒருவித புரிதல் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பிரதாப் சிம்ஹா குற்றம் சாட்டினார். பிரதாப் சிம்ஹா பா.ஜ.க தேசிய பொதுச் செயலாளர் (அமைப்பு) பி.எல்.சந்தோஷுக்கு நெருக்கமானவராகக் பார்க்கப்படுகிறார், எனவே, இவர் எடியூரப்பா முகாமில் இல்லை.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தெருநாய்களை இரக்கமின்றி ஒழிக்க வேண்டும் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். தெருநாய்களைக் கொல்லக் கூடாது என்று உச்ச நீதிமன்ற உத்தரவு உள்ளது. தெருநாய்கள் கொல்லப்படும்போது எங்கள் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் பிரச்னைகளை உருவாக்குகிறார்கள். தெருநாய்கள் தாக்கப்படும் சம்பவங்களை ஊடகங்கள் கூட எடுத்துக் கூறுகின்றன. புலிகள் மற்றும் யானைகள் ஒன்று அல்லது இரண்டு குட்டிகளை வைத்திருக்கும்போது, நாய்கள் கிட்டத்தட்ட 10 நாய்க்குட்டிகளை வைத்திருக்கின்றன, எந்த இரக்கமும் இன்றி அவைகளை ஒழிக்க வேண்டும்,” என்று அவர் கூறியிருந்தார்.

கடந்த ஆண்டு நவம்பரில், "மசூதி போன்ற குவிமாடங்கள்" இருப்பதால், பேருந்து நிலையத்தை இடிப்பதாக மிரட்டினார். பா.ஜ.க எம்.எல்.ஏ எஸ்.ஏ ராமதாஸின் பகுதி மேம்பாட்டு நிதியில் பேருந்து நிலையம் கட்டப்பட்டது. பிரதாப் சிம்ஹாவின் கருத்து துரதிர்ஷ்டவசமானது என்று கூறிய ராமதாஸ், பேருந்து நிலையத்தின் அமைப்பு மைசூர் அரண்மனையால் ஈர்க்கப்பட்டது என்றும் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Parliment Of India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment