scorecardresearch

இந்தியாவின் கோவிட் -19 இரண்டாவது அலை முடிவு வெகுதொலைவில் உள்ளதா?

Peak of covid second wave இரண்டு வாரங்களுக்கு 60,000 மற்றும் 50,000-களில் இருந்த நிலையில், மாநிலத்தின் தினசரி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இப்போது 40,000-களில் குறைந்துள்ளது.

Peak of covid second wave end may still be far away Tamil News
Peak of covid second wave end may still be far away Tamil News

Peak of Covid second wave end may still be far away Tamil News : கடந்த இரண்டு வாரங்களில் இந்தியாவில் உள்ள கொரோனா வைரஸ் எண்ணிக்கை, ஏற்கெனவே அது இரண்டாவது அலை உச்சத்தை எட்டியிருக்கலாம் அல்லது அடுத்த சில நாட்களில் உச்சத்தை எட்டக்கூடும் என்பதைக் குறிப்பிடுகின்றன. இரண்டாவது அலையின் முடிவு நீண்ட தூரத்தில் இருக்கலாம்.

நாடு அதிகபட்சமாக சென்ற வியாழக்கிழமை 4.14 லட்சத்தை எட்டிய பிறகு, கடந்த ஒரு வாரத்தில் தினசரி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. இது முதல் முறையாக நடப்பதில்லை. ஏப்ரல் 30-ம் தேதி, முதல் முறையாக நான்கு லட்சத்தைத் தாண்டிய பிறகு, மீண்டும் எழுச்சி ஏற்படுவதற்கு முன்பு, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சில நாட்களுக்குள் குறைந்துவிட்டது. ஆனால், தினசரி ஏற்ற இறக்கங்களைச் சரிசெய்யும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, இரண்டாவது அலையின் போது முதல் முறையாகக் குறையத் தொடங்கியது. ஏழு நாட்களில் மே 8 அன்று, சராசரியாக 3.91 லட்சமாக உயர்ந்தது. அதன் பிறகு குறையத் தொடங்கியது. புதன்கிழமை, இந்த சராசரி எண்ணிக்கை 3.75 லட்சத்திற்கு சரிந்தது. (கீழே உள்ள வரைபடத்தைக் காண்க)

சராசரி வழக்கு எண்ணிக்கையில் ஐந்து நாள் சரிவு, ஒரு முடிவை நிறுவுவதற்கு போதுமான வலுவான குறி காட்டியாக இருக்காது. ஆனால், அதே திசையில் சுட்டிக்காட்டும் பிற சிக்னல்களும் உள்ளன.

Daily new cases

எழுச்சி நிலைகளில் சரிவு

ஒரு கட்டத்தில் தினசரி பாதிக்கப்பட்டவர்களில் 60%-க்கும் அதிகமான பங்களிப்பை வழங்கிய மகாராஷ்டிரா, நிச்சயமாக இப்போது குறைந்து வரும் நிலையில் இருப்பதாக தெரிகிறது. இந்த மாநிலத்தின் ஒற்றை நாள் அதிகபட்ச வழக்கு 68,631 என அறிவித்து இப்போது மூன்று வாரங்களுக்கும் மேலாகிவிட்டது. இரண்டு வாரங்களுக்கு 60,000 மற்றும் 50,000-களில் இருந்த நிலையில், மாநிலத்தின் தினசரி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இப்போது 40,000-களில் குறைந்துள்ளது.

மகாராஷ்டிராவின் வீழ்ச்சி, தேசிய வளைவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். சில நாட்களாக, மகாராஷ்டிராவின் வீழ்ச்சிக்கு ஈடுசெய்யப்பட்டதை விடக் கர்நாடகா மற்றும் கேரளா அறிக்கை வெளியிட்ட எண்ணிக்கையில் எதிர்பாராத அதிகரிப்பு ஏற்பட்டது. ஆனால், இந்த இரு மாநிலங்களும் நீண்ட காலமாக அச்சுறுத்தலைத் தக்கவைத்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் குறைந்து வருவதற்கான அறிகுறிகளைக் காட்டுகின்றன. மகாராஷ்டிராவின் தொடர்ச்சியான சரிவு கர்நாடகாவையும் கேரளாவையும் அதிக எண்ணிக்கையிலான வழக்குகளுக்கு உட்படுத்தக்கூடும். ஆனால், மகாராஷ்டிராவில் ஏற்பட்டதைப்போல அதிகளவு பாதிப்பை இந்த இரு மாநிலங்களும் சந்திக்காது.

இங்கு மிகப்பெரிய நம்பிக்கை தரும் மாநிலம், உத்தரபிரதேசத்ம்தான். மகாராஷ்டிராவை விட அதிகமான பாதிக்கப்பட்டவர்களை இந்த மாநில கொண்டிருக்கக்கூடும். ஒரு காலத்தில் உத்தரப்பிரதேசம், ஏப்ரல் மாத இறுதியில் 35,000-ஆக முன்னேறியபோது நிச்சயம் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், ஒரு வாரத்திற்கும் மேலாக, இப்போது, ​​மாநிலத்தின் தினசரி எண்ணிக்கை 30,000-க்கும் குறைவாகவே உள்ளது. மேலும், குறைந்து வருவதற்கான அறிகுறிகளையும் காட்டுகிறது.

மகாராஷ்டிராவைப் போலவே, டெல்லியும் உச்சத்தை எட்டியது. ஆனால், தற்போது அங்கு எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து வருவதாகத் தெரிகிறது. டெல்லி சில காலங்களுக்கு 20,000-களில் எண்ணிக்கையைப் புகாரளித்து வந்தது. ஆனால், இது இப்போது ஒரு நாளைக்கு 12,000-க்கு குறைந்துள்ளது.

மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகியவற்றின் சரிவு மற்ற மாநிலங்களில் எந்தவொரு பெரிய உயர்வாலும் ஈடுசெய்யப்படவில்லை. இருப்பினும் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் மேற்கு வங்கம் ஆகியவை கவலையான தருணங்களை சந்திக்கக்கூடும். தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,000-ஐ தாண்டியுள்ளது. ஆந்திரா மற்றும் மேற்கு வங்கம் 20,000 எண்ணிக்கையை மீறியுள்ளன.

தற்சமயம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

இரண்டு மாதங்களில் முதல் முறையாக, இந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் செயலில் உள்ள பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்தது. ஏப்ரல் இறுதி வரை, செயலில் உள்ள பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் அதிகரித்து வருகின்றன. மே மாதத்தில், இந்த தினசரி அதிகரிப்பு கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களில், செயலில் உள்ள எண்ணிக்கை ஒரு நாளைக்கு 10,000-க்கு அதிகரித்துள்ளன.

கடந்த இரண்டு வாரங்களாக தினசரி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நிலையானதாக இருப்பதால், மீட்டெடுப்புகளின் எண்ணிக்கை, பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையின் அதே அளவை எட்டியுள்ளது. தற்போதைய போக்குகள் செயலில் உள்ள பாதிக்கப்பட்டிருப்பவர்கள், 40 லட்சத்திற்கு உயரக்கூடும் என்பதைக் காட்டுகின்றன. கடந்த புதன்கிழமை நிலவரப்படி, நாட்டில் 37.1 லட்சம் ஆக்டிவ் கேஸ் உள்ளன.

பாசிட்டிவ் வீதம்

இரண்டாவது அலையின் வரையறுக்கும் பண்பு, உயர் பாசிட்டிவ் வீதம். சோதனை செய்யப்பட்டவர்களில், முதல் அலையுடன் ஒப்பிடும்போது இன்னும் பலர் நேர்மறையாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். முதல் அலையின்போது இந்தியாவின் ஒட்டுமொத்த பாசிட்டிவ் விகிதம் 5% முதல் 6% வரை இருந்தது. சிறிய கட்டங்கள் இருந்தபோதிலும் அது 12 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது. இருப்பினும், இரண்டாவது கட்டத்தில், பாசிட்டிவ் விகிதம் 20 சதவிகிதத்தைத் தாண்டியுள்ளது. சில மாநிலங்களில், இது 40%-ஐ கடந்திருந்தது.

பாசிட்டிவ் விகிதம் என்பது மக்கள்தொகையில் நோய் பரவும் அளவீடு. மிக அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டிருந்தால், இன்னும் பலர் சோதனை செய்யும்போது நேர்மறையாகக் கண்டறியப்படுவார்கள். மாறுபட்ட புதிய கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுவதால் அல்லது உடல் ரீதியான தொலைதூர விதிகள் கைவிடப்பட்டதால், வைரஸ் சுதந்திரமாகப் பரவி வருகிறது. அதிக பாசிட்டிவ் விகிதம் வைரஸை வேகமாகப் பரப்புவதற்கான ஒரு குறி காட்டியாக இருக்கலாம்.

பாசிட்டிவ் விகிதம் ஏப்ரல் மாதம் மற்றும் மே முதல் வாரம் முழுவதும் அதிகரித்துக்கொண்டே இருந்தது. ஆனால், இப்போது அது உறுதிப்படுத்தப்படக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன. உண்மையில், பாசிட்டிவ் விகிதத்தின் வளர்ச்சி வளைவு தினசரி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையுடன் ஒத்திருக்கிறது. (வரைபடத்தைப் பார்க்கவும்).

Positivity rate

இருப்பினும், பாசிட்டிவ் விகிதத்தில் காணப்பட்ட நிலைத்தன்மை இந்தியாவின் சோதனை திறன் அதன் வரம்பை எட்டியதன் விளைவாகவும் இருக்கலாம். நாட்டின் சோதனை எண்கள் அதிகரித்து வரும் நோய்த்தொற்றுடன், அதன் வேகத்தைத் தக்கவைக்க முடியவில்லை. ஏப்ரல் மாதத்தில் தினசரி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்தாலும், சோதனை எண்கள் 1.8 மடங்கு மட்டுமே அதிகரித்துள்ளன. இதன் விளைவாக, நோயின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு கருவியான சோதனை – அறியப்பட்ட, பாதிக்கப்பட்ட நிகழ்வுகளைத் தனிமைப்படுத்துவதன் மூலம், இரண்டாவது அலையின் போது ஒருபோதும் பயனுள்ளதாக இல்லை.

இறப்பு எண்ணிக்கை

கடந்த 45 நாட்களில் தினசரி இறப்பு எண்ணிக்கையில் பத்து மடங்கு உயர்வு ஏற்பட்டுள்ளது. ஆனால், கடந்த இரண்டு வாரங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நிலைப்படுத்தப்பட்டுள்ளதால், இறப்புகளின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், இது ஒரு பின்தங்கிய குறி காட்டியாக இருப்பதால், சில நாட்களுக்கு இறப்புகள் இன்னும் உயரக்கூடும். தற்போதைய நிலவரப்படி, ஒவ்வொரு நாளும் சுமார் 4,000 இறப்புகள் பதிவாகின்றன.

இன்னும் முடிவு வரவில்லை

நம்பிக்கைக்குரிய அறிகுறிகள் இருந்தாலும், இரண்டாவது அலையின் முடிவு நீண்ட தூரத்தில் இருக்கிறது. முதல் அலையின் போது பாதிக்கப்பட்டவர்கள் ஒரு நாளைக்கு 98,000-ஆக இருந்தன. ஒரு நாளைக்கு சுமார் 10,000-ஆகக் குறைக்க ஐந்து மாதங்கள் ஆகின. இந்த முறை, இந்தியா மிக உயர்ந்த உச்சத்தில் தொடங்குகிறது. அதாவது இரண்டாவது அலையின் கீழ்நோக்கிய பயணம் மிக நீண்டதாக இருக்கும் என்று அர்த்தம்.

மேலும், முதல் அலையைப் போலல்லாமல், உச்சத்தை அடைந்த உடனேயே சரிவு தொடங்கவில்லை. தினசரி எண்ணிக்கை மேலும் கீழும் நகர்கிறது. இதனால் இந்தியாவில் பாதிக்கப்பட்ட எண்ணிக்கை உச்சத்தை எட்டியுள்ளனவா என்பது கூட தெரியவில்லை. மகாராஷ்டிராவில் உள்ள வளைவு, இந்த தொற்றுநோய்களின் பெரும்பகுதிக்கு இந்தியாவின் பிரதிபலிப்பைக் காட்டுகின்றது. மேலும், இன்னும் பல வாரங்களுக்கு இந்தியா ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று லட்சம் வரை மிகப் பெரிய எண்ணிக்கையிலான பாதிப்புகளைப் புகாரளிக்கக்கூடும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: Peak of covid second wave end may still be far away tamil news