விசாரணையில் சிக்கிய நடிகை ஜெனிலியா நிறுவனம்: பிரச்னை என்ன?

தேஷ்முக்கின் நிறுவனத்திற்கு முந்தைய மகாராஷ்டிர அரசு சிறப்பு சலுகைகளை வழங்கியதாக பாஜக கூறியுள்ளது. இங்கே கூறப்படும் குற்றச்சாட்டுகள் என்ன? நாங்கள் விளக்குகிறோம்.

தேஷ்முக்கின் நிறுவனத்திற்கு முந்தைய மகாராஷ்டிர அரசு சிறப்பு சலுகைகளை வழங்கியதாக பாஜக கூறியுள்ளது. இங்கே கூறப்படும் குற்றச்சாட்டுகள் என்ன? நாங்கள் விளக்குகிறோம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
explained

Why actors Riteish Deshmukh and Genelia’s firm is facing probe

நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் அவரது மனைவி நடிகை ஜெனிலியா தேஷ்முக் ஆகியோருக்குச் சொந்தமான ஒரு வேளாண் செயலாக்க நிறுவனம், நிலம் மற்றும் கடன்களை பெற்றதில் முறைகேடுகள் கண்டறியப்பட்டதை அடுத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர அமைச்சர் அதுல் சேவ் புதன்கிழமை (நவம்பர் 30) ​​தெரிவித்தார்.

இது என்ன சர்ச்சை? நாங்கள் விளக்குகிறோம்.

இங்கே கூறப்படும் குற்றச்சாட்டுகள் என்ன?

Advertisment

இந்த ஆண்டு அக்டோபரில், தகவல் அறியும் உரிமையின் (RTI) கீழ் நில ஒதுக்கீடு குறித்த தகவல்களை பெற்றதாக பாஜக கூறியது. இது தேஷ்முக் சமூகத்துக்கு மாநில அரசாங்கத்தால் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதைக் காட்டுகிறது.

லத்தூர் நகரில் மகாராஷ்டிரா தொழில் வளர்ச்சிக் கழகம் (MIDC) பகுதியில் உள்ள ஒரு வேளாண் செயலாக்க யூனிட் தான் சர்ச்சையின் மையத்தில் உள்ளது.

MIDC என்பது மகாராஷ்டிர அரசாங்கத்தின் முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனமாகும். இது மாநிலத்தில் தொழில்துறை பகுதிகளை அமைக்கிறது மற்றும் தொழில்முனைவோருக்கு கிடைக்கும் வகையில் மாநிலத்தில் உள்ள மனைகளை ஏலம் எடுப்பதற்கான நடைமுறைகளைக் கொண்டுள்ளது.

Advertisment
Advertisements

இது உருவாக்கப்பட்ட மூன்று வாரங்களுக்குள் ரித்தேஷ் மற்றும் ஜெனிலியா தேஷ்முக் சம பங்குதாரர்களாக உள்ள தேஷ் அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு ஒரு சதுர மீட்டருக்கு ரூ. 605  என்ற சலுகை விலையில் நிலத்தை ஒதுக்கியது. நிலத்திற்கான விண்ணப்பம் 10 நாட்களுக்குள் பரிசீலிக்கப்பட்டது.

இந்நிறுவனம், 7.50 கோடி ரூபாய் பங்கு மூலதனத்துடன், சோயாபீன் பதப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டது.

ஆளும் பாஜகவின் கூற்றுப்படி, நிறுவனம் அக்டோபர் 4, 2021 அன்று பந்தர்பூர் நகர்ப்புற கூட்டுறவு வங்கியில் கடனுக்கு விண்ணப்பித்தது. இதற்கு அக்டோபர் 27 அன்று வங்கி ஒப்புதல் அளித்தது. பின்னர் லத்தூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் கடனுக்கு விண்ணப்பித்து, அக்டோபர் 27ஆம் தேதி ரூ.61 கோடி கடனுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஜூலை 25, 2022 அன்று வங்கியில் இருந்து மேலும் ரூ.55 கோடி கடனைப் பெற்றது.

குற்றச்சாட்டுகள் குறித்து நிறுவனம் கூறியது என்ன?

தேஷ் அக்ரோ பிரைவேட் லிமிடெட் இந்த குற்றச்சாட்டுகளை அடிப்படையற்றது என்று மறுத்துள்ளது.

காங்கிரஸ் அங்கம் வகித்த முந்தைய மகா விகாஸ் அகாடி அரசாங்கத்தின் போது, ​​நிலம் ஒதுக்கீட்டில் முறைக்கேடுகள் நடந்துள்ளதாக லத்தூரில் உள்ள பாஜக தலைவர்கள் கூறுகின்றனர்.

ரித்தேஷ் தேஷ்முக், மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான மறைந்த விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகன் ஆவார். அவரது மூத்த சகோதரர் அமித் மகா விகாஸ் அகாடி அரசாங்கத்தில் அமைச்சராகவும், அவரது தம்பி தீரஜ் லத்தூர் கிராமப்புற தொகுதியின் எம்.எல்.ஏ.வும் ஆவார்.

எங்கள் பாஜகவின் லத்தூர் மாவட்டத் தலைவர் குருநாத் மாகே பிரச்சினையை எழுப்பி ஒரு கடிதம் எழுதியிருந்தார். MIDC பற்றி எனக்கு எதுவும் தெரியாது, ஆனால் வங்கிகள் தரப்பில் ஏதேனும் முறைகேடுகள் நடந்துள்ளதா என்பதை சரிபார்க்க விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன், என்று மாநில கூட்டுறவு அமைச்சர் சேவ் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Maharashtra

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: