Advertisment

ரஷ்யா மீதான தடைக்கு பிறகு, கச்சா எண்ணெய்க்கு ஈரான் & வெனிசுலாவை நாடும் அமெரிக்கா

ரஷ்யா மீதான பொருளாதார தடைக்குப் பிறகு, ஈரான் மற்றும் வெனிசுலாவிடம் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க அணுகும் அமெரிக்கா

author-image
WebDesk
New Update
ரஷ்யா மீதான தடைக்கு பிறகு, கச்சா எண்ணெய்க்கு ஈரான் & வெனிசுலாவை நாடும் அமெரிக்கா

Karunjit Singh

Advertisment

Explained: Amid sanctions on Russia, US efforts to ease curbs on Iran, Venezuela to boost oil supply: உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தை அதிகரிக்க வெனிசுலா மற்றும் ஈரானை அமெரிக்கா அணுகுகிறது. இந்தத் தடைகள் எவ்வாறு விநியோகத்தை சீர்குலைத்துள்ளன என்பதையும், நெருக்கடியைச் சமாளிக்க அமெரிக்கா என்ன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதையும் இப்போது பார்க்கலாம்.

உலக கச்சா எண்ணெய் சந்தையில் ரஷ்யா எவ்வளவு முக்கியமானது?

அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியாவிற்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளராக ரஷ்யா உள்ளது, மேலும் அரபு நாடுகளுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய ஏற்றுமதியாளராக உள்ளது. ரஷ்யா தற்போது ஒரு நாளைக்கு சுமார் 7.5 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்கிறது. பொருளாதார தடைகள் மூலம் உலகளாவிய விநியோகத்தில் இருந்து ரஷ்யா அகற்றப்பட்டால், ரஷ்ய கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு மாற்றாக எந்த வழியும் இருக்காது என்றும், அத்தகைய நடவடிக்கையானது விலையை எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்த்தக்கூடும் என்றும் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

எவ்வாறாயினும், ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மீதான பரந்த தடையை ஐரோப்பா பரிசீலிக்கவில்லை என்று ஜெர்மனி சுட்டிக்காட்டியுள்ளது. ப்ரெண்ட் கச்சா எண்ணெய் தற்போது பீப்பாய் ஒன்றுக்கு 111.3 டாலராக வர்த்தகம் செய்யப்படுகிறது, இது ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 43 சதவீதம் உயர்ந்துள்ளது. ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியை அமெரிக்கா தடை செய்திருந்தாலும், 2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் ரஷ்ய கொள்முதலை நிறுத்துவதாக இங்கிலாந்து அறிவித்திருந்தாலும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு மற்ற நாடுகளுக்கு தற்போது எந்த தடையும் இல்லை.

இதையும் படியுங்கள்: உத்தரப் பிரதேசத்தில் பாஜக வென்றதற்கான 5 காரணங்கள்

இருப்பினும், சில வங்கிகள் SWIFT சர்வதேச கட்டண முறையைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் நடவடிக்கை உட்பட, ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளின் தாக்கம் குறித்த கவலைகள், வாங்குபவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. வாங்குபவர்கள் ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்குவதால் ஏற்படும் நற்பெயர் சேதம், அதாவது கொள்முதல் செய்யப்படும் நிதி உக்ரைனில் ரஷ்ய படையெடுப்பிற்கு உதவும் வகையில் உள்ளது குறித்து கவலை அடைகிறார்கள். எண்ணெய் நிறுவனமான ஷெல் செவ்வாயன்று ரஷ்ய கச்சா எண்ணெயை கொள்முதல் செய்ததற்காக மன்னிப்பு கேட்டது மற்றும் உடனடியாக அனைத்து ஸ்பாட் கொள்முதலையும் நிறுத்தியது.

ஈரான் மற்றும் வெனிசுலாவிலிருந்து உற்பத்தியை அதிகரிக்க அமெரிக்கா எவ்வாறு திட்டமிட்டுள்ளது?

2015 ஆம் ஆண்டு ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை புதுப்பிக்கும் முயற்சியில் அமெரிக்கா தற்போது ஈடுபட்டுள்ளது, இந்த ஒப்பந்தத்தின் கீழ் எண்ணெய் ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் பொருளாதார தடைகளில் தளர்வுகளுக்கு ஈடாக ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை குறைக்க ஒப்புக்கொண்டது.

எவ்வாறாயினும், மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் ஈரானுடனான ரஷ்யாவின் பொருளாதார உறவுகளை பாதிக்காது என்பதற்கு ரஷ்யா உத்தரவாதம் கேட்டதாகக் கூறப்படுகிறது. அமெரிக்கா மற்றும் ரஷ்யாவைத் தவிர இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளும் ஈரானுடனான வர்த்தகத்தில் பங்கு கொள்கின்றன.

சில மாதங்களில் ஈரான் தனது கச்சா எண்ணெயை ஒரு நாளைக்கு சுமார் 1.5 மில்லியன் பீப்பாய்களில் இருந்து 4 மில்லியன் பீப்பாய்களாக அதிகரிக்கக்கூடும் என்று நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். 2019 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தெஹ்ரானில் இருந்து எண்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்தியது, மேலும் எண்ணெய் வாங்குவதற்கான கூடுதல் விருப்பங்களை வழங்கும், ஈரான் மற்றும் வெனிசுலா மீதான பொருளாதாரத் தடைகளை தளர்த்துவதை ஆதரிப்பதாக பகிரங்கமாக கூறியது. இந்தியா தற்போது தனது கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது.

2019 இல் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை தளர்த்துவதற்காக வெனிசுலாவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கலாம் என்று வெனிசுலா சுட்டிக்காட்டியுள்ளது.

வெனிசுலாவின் தேசிய எண்ணெய் நிறுவனமான PDVSA க்குக் கடனைத் தீர்ப்பதற்கான எண்ணெய் சரக்குகளைப் வாங்குவதற்கு ONGC Videsh Ltd (OVL) நிறுவனத்தை அனுமதிக்க இந்திய தூதர்கள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அமெரிக்க வெளிநாட்டு சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் (OFAC) உடன் நிலுவையில் உள்ள பிரச்சினை குறித்து, பேசிய OVL செய்தித் தொடர்பாளர், "412.82 மில்லியன் டாலர் நிலுவையில் உள்ள ஈவுத்தொகையை அடைய கடன் எண்ணெய் சரக்குகளை உயர்த்துவதற்கான தடைகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், அத்தகைய ஒப்புதலுக்கான காலக்கெடுவைக் கணிக்க முடியாது என்றும்” கூறினார்.

மற்ற மூலங்களிலிருந்து கச்சா எண்ணெய் விநியோகத்தை அதிகரிப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிகள், மற்ற நாடுகளின் நலனுக்காகவும் அமெரிக்கா செயல்பட்டு வருகிறது எனபதற்கான சமிக்ஞை என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

“கிட்டத்தட்ட நான்கு தசாப்த காலத்தில் இல்லாத அளவிற்கு அமெரிக்காவின் பணவீக்கம் 7.9 சதவீதத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவால் எரிபொருள் விலைகள் உயர்வதைத் தாங்க முடியாது, இது நுகர்வோருக்கும் துயரங்களைச் சேர்க்கிறது. தற்போது அனுமதிக்கப்பட்ட ஈரான் மற்றும் வெனிசுலா (அதன் மூலம்) சந்தைக்கு ஒரு சமிக்ஞையை அனுப்புவது உட்பட, கிடைக்கக்கூடிய அனைத்து மூலங்களிலிருந்தும் எண்ணெய் விநியோகத்தை அதிகரிக்க அவர்கள் அனைத்தையும் செய்வார்கள்,” என்று டெலாய்ட் இந்தியாவின் பங்குதாரரான தேபாசிஷ் மிஸ்ரா கூறினார்.

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil“

Ukraine Russia America Explained Crude Oil Prices
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment