Advertisment

மத்திய செயலாளர் பதவியில் இருந்து நீக்கிய இந்திரா காந்தி; ஜெய்சங்கர் தந்தை கே.சுப்ரமணியம் யார்?

எனது தந்தை மிகவும் நேர்மையான நபர், அதுதான் பிரச்சனையை ஏற்படுத்தியிருக்கலாம், எனக்குத் தெரியாது-ஜெய்சங்கர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
India

S Jaishankar father K Subrahmanyam

பிரதமர் இந்திரா காந்தியின் கீழ் மத்திய செயலாளராக இருந்த தனது தந்தை கே.சுப்பிரமணியம் நீக்கப்பட்டதாகவும், ராஜீவ் காந்தியின் ஆட்சிக் காலத்தில் அவர் மாற்றப்பட்டதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 21) தெரிவித்தார்.

Advertisment

ஜெய்சங்கர் தந்தை கே சுப்ரமணியம், ஐஏஎஸ் அதிகாரி, இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற மூலோபாய சிந்தனையாளர்களில் ஒருவர், தொடர்ச்சியான பிரதமர்களின் நம்பிக்கை பெற்ற புவிசார் அரசியலில் ஒரு உயர்ந்த அதிகாரி.

இந்திரா காந்தி குறித்து ஜெய்சங்கர் கூறியது

ஜெய்சங்கர் ANI க்கு அளித்த பேட்டியில், “நான் சிறந்த வெளிநாட்டு சேவை அதிகாரியாக இருக்க விரும்பினேன். என் மனதில், சிறந்த வெளியுறவு செயலாளராக ஆக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. எங்கள் வீட்டிலும் அது இருந்தது, நான் அதை அழுத்தம் என்று கூறமாட்டேன். ஒரு அதிகாரியாக இருந்த என் தந்தை ஒரு செயலாளராகிவிட்டார், ஆனால் அவர் தனது செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பதை நாங்கள் அனைவரும் அறிந்திருந்தோம். அந்த நேரத்தில் அவர் 1979 இல் ஜனதா அரசாங்கத்தின் இளைய செயலாளராக ஆனார்.

1980 இல், அவர் பாதுகாப்பு உற்பத்தி (Defence Production) செயலாளராக இருந்தார். 1980ல் இந்திரா காந்தி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ​​அவர் நீக்கிய முதல் செயலாளர். மேலும் தற்காப்பு குறித்து அனைவரும் சொல்லக்கூடிய மிகவும் அறிவுள்ள நபர்.

எனது தந்தை மிகவும் நேர்மையான நபர், அதுதான் பிரச்சனையை ஏற்படுத்தியிருக்கலாம், எனக்குத் தெரியாது.

ஆனால் உண்மை என்னவென்றால், ஒரு நபராக அவர் அதிகாரத்துவத்தில் தனது சொந்த வாழ்க்கையைப் பார்த்தார். அதன் பிறகு, அவர் மீண்டும் ஒரு செயலாளராக ஆகவில்லை. அவர் ராஜீவ் காந்தி காலத்தில் கேபினட் செயலாளராக இருந்த, அவரை விட ஜூனியர் ஒருவருக்காக மாற்றப்பட்டார் அது அவருக்கு வலிமிகுந்த ஒன்று... நாங்கள் அதைப் பற்றி அரிதாகவே பேசினோம். எனவே எனது மூத்த சகோதரர் செயலாளராக ஆனபோது அவர் மிகவும் பெருமையாக இருந்தார், என்றார் ஜெய்சங்கர்.

ஜெய்சங்கரின் சகோதரரும், ஐஏஎஸ் அதிகாரியுமான எஸ் விஜய் குமார், இந்தியாவின் முன்னாள் ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக இருந்தார். அவரது இன்னொரு சகோதரர் சஞ்சய் சுப்ரமணியம் ஒரு வரலாற்றாசிரியர்.

கே சுப்ரமணியம் வகித்த பதவிகள்                 

அரசு ஊழியர் மற்றும் மூலோபாய விவகார நிபுணராக தனது நீண்ட வாழ்க்கையில், சுப்ரமணியம், கார்கில் போர் மறுஆய்வுக் குழுவின் தலைவராகவும், இந்தியாவின் அணுசக்தி தடுப்புக் கொள்கையை ஆதரித்தற்காகவும் அவர் அறியப்பட்டார்.

2011 இல் அவர் மறைந்தபோது, ​​இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளின் பரிணாம வளர்ச்சிக்கு சுப்பிரமணியம் முக்கியமான மற்றும் நீடித்த பங்களிப்பைச் செய்துள்ளார் என்று அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். அரசாங்கத்திற்கு வெளியே அவரது பணி இன்னும் சிறப்பு வாய்ந்தது, அவர் நாட்டின் பாதுகாப்பு ஆய்வுத் துறையை முன்னெடுத்து வளர்த்தார், என்று மன்மோகன் சிங் கூறினார்.

மேலும் அப்போதைய துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, அவரை "இந்தியாவின் மூலோபாய விவகார சமூகத்தின் தலைவன்" என்று அழைத்தார். அவர் நம் பாதுகாப்பு கொள்கை கோட்பாட்டின் முக்கிய வடிவமைப்பாளர்களில் ஒருவராக இருந்தார். கொள்கை வகுப்பாளர்களையும் குடிமக்களையும் மூலோபாயப் பிரச்சினைகளுக்கு உணர்த்துவதிலும், அவற்றைச் சமாளிப்பதற்கான கொள்கை விருப்பங்களை உருவாக்க உதவுவதிலும் அவர் முக்கியப் பங்காற்றினார்.

1929 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் பிறந்த சுப்பிரமணியம், மெட்ராஸ் பிரசிடென்சி கல்லூரியில் பயின்று, பின்னர் இந்திய நிர்வாகப் பணியில் சேர்ந்தார்.

பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வுகளுக்கான செக்யூரிட்டி திங்க் டேங்க் இன்ஸ்டிடியூட் (IDSA) இன் ஸ்தாபக இயக்குனராக சுப்ரமணியன் இருந்தார், இப்போது இது மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வுகளுக்கான நிறுவனமாகி விட்டது.

1999 இல், சுப்ரமணியம் பத்ம பூஷன் விருதை நிராகரித்தார், அதிகாரிகளும் பத்திரிகையாளர்களும் அரசாங்க விருதுகளை ஏற்கக்கூடாது என்று அவர் கூறினார்.

&feature=youtu.be

இந்தியாவின் அணு கோட்பாடு

1998 இல், பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் கீழ், சுப்ரமணியம் முதல் தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை வாரியத்தின் (NSCAB) கன்வீனராக நியமிக்கப்பட்டார், இது நாட்டின் வரைவு அணுக் கோட்பாட்டை உருவாக்கியது. உள் மற்றும் சர்வதேச எதிர்ப்பை எதிர்கொண்டாலும், சுப்ரமணியத்தின் நிலைப்பாடு, இந்தியாவுக்கு அணு ஆயுதங்கள் தேவைப்பட்டாலும், அதை முதலில் பயன்படுத்த முடியாது என்பதுதான்.

2009 இல் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் அவர் எழுதிய கட்டுரையில், இந்தியாவைப் போல எந்த நாடும் அணு ஆயுதக் குறைப்புக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்யவில்லை, அது பாதுகாப்புச் சூழ்நிலையின் காரணமாக இறுதியாக தன்னை அணு ஆயுத நாடாக அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

கார்கில் போர் ஆய்வுக் குழு

1999 ஆம் ஆண்டு, பாகிஸ்தானுடனான போருக்குப் பிறகு அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட கார்கில் மறுஆய்வுக் குழுவின் தலைவராக சுப்ரமணியம் நியமிக்கப்பட்டார். இந்திய உளவுத்துறை சேவைகளின் கட்டமைப்பில் மாற்றங்கள் மற்றும் பாதுகாப்புப் படைத் தலைவர் (CDS) உருவாக்கம் ஆகியவற்றைக் குழு பரிந்துரைத்தது.

இது இறுதியாக 2019 டிசம்பரில் நரேந்திர மோடி அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது, முன்னாள் ராணுவ தளபதி மறைந்த ஜெனரல் பிபின் ராவத் முதல் பாதுகாப்புப் படைத் தலைவர் ஆனார்.

பிரதமரின் முதன்மைச் செயலாளர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) பதவிகளை இணைக்கும் வாஜ்பாய் அரசின் முடிவையும் சுப்ரமணியம் கடுமையாக விமர்சித்தார். 2004-ல் மன்மோகன் சிங் அரசு இரண்டு பதவிகளையும் பிரித்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India S Jaishankar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment