Advertisment

2013-க்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் தீவிர மழைப்பொழிவு; ஆனால் கற்றுக் கொண்ட பாடங்கள் மிகக் குறைவு

தீவிர மழைப்பொழிவு இருக்கும் என பல ஆண்டுகளாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை; 2013 க்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக நடக்கிறது; ஆனால் கற்றுக்கொண்ட பாடங்கள் மிகக் குறைவு

author-image
WebDesk
New Update
rainfall

ஞாயிற்றுக்கிழமை குர்கானில் உள்ள சுபாஷ் சவுக்கில் மூழ்கும் காரில் சிக்கித் தவிக்கும் பயணி. (பி.டி.ஐ)

Amitabh Sinha 

Advertisment

2013 ஆம் ஆண்டு உத்தரகாண்ட் பேரழிவிற்குப் பிறகு, இந்தியாவில் குறைந்தபட்சம் ஒரு பெரிய தீவிர மழை பெய்யாத ஒரு வருடம் கூட இல்லை, இந்த தீவிர மழைப்பொழிவு பெரிய அளவிலான வெள்ளம், அழிவு மற்றும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உயிர் இழப்புகளை விளைவிக்கிறது.

காஷ்மீர், சென்னை, பெங்களூரு, புனே, மும்பை, குர்கான், கேரளா, அசாம், பீகார் மற்றும் பல இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.

இதையும் படியுங்கள்: அறிவியல் ஆராய்ச்சித் துறைகளில் பின்தங்கிய இந்தியா: சரிசெய்ய தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை உதவுமா?

பல ஆண்டுகளாக விஞ்ஞானிகள் எச்சரிக்கும் நிகழ்வுகள் இவைதான்: அந்த மழைப்பொழிவு மிகவும் தீவிரமானதாகவும், செறிவூட்டப்பட்டதாகவும் மாறும், அதாவது குறுகிய காலத்தில் மிக அதிக மழைப்பொழிவு, மற்றும் இதுபோன்ற நிகழ்வுகளின் அதிர்வெண் அதிகரிக்கும்.

வட இந்தியாவில் தற்போது பெய்து வரும் கனமழை இந்த போக்கின் ஒரு பகுதியாகும், மேலும் சில இடங்களில் கடந்த 20 அல்லது 25 ஆண்டுகளில் இல்லாத அளவில் மிக அதிக மழை பெய்தாலும் கூட, இது ஆச்சரியம் இல்லை. உலகெங்கிலும் மிகவும் தீவிரமான வானிலை நிகழ்வுகள் ஆபத்தான ஒழுங்குடன் நடக்கின்றன.

publive-image

தீவிர நிகழ்வுகள் தவிர்க்க முடியாததாக மாறியிருக்கலாம், ஆனால் அவை விளைவிக்கும் பேரழிவுகள் உறுதியாக நிகழ வேண்டிய அவசியம் இல்லை. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அதிகாரப்பூர்வ திறமையின்மை, புறக்கணிப்பு, அலட்சியம் மற்றும் பெரும்பாலும் பேராசை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு மோசமான காரணி உள்ளது.

பெங்களூரு ஒவ்வொரு ஆண்டும் வெள்ளத்தில் மூழ்குவது வழக்கத்திற்கு மாறான மழை பெய்வதால் அல்ல, மாறாக மேற்பரப்பிற்கு அடியில் உள்ள இயற்கையான நீர்ப்பாதைகள் ஒழுங்கற்ற கட்டுமானத்தால் தடுக்கப்பட்டதால் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

publive-image

இமாச்சல பிரதேச மாநிலம் மண்டியில் பியாஸ் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. (ANI)

ஸ்ரீநகர் 2014-ல் வரலாறு காணாத வெள்ளத்தை சந்தித்தது மிகக் கனமழையால் மட்டுமல்ல, ஜீலம் நதியைக் கடந்து செல்லும் அனைத்து தாழ்வான பகுதிகளும் மக்கள் தொகையால் நிரம்பி வழிவதால் ஏற்பட்டது. ஸ்ரீநகர் அந்த ஆண்டு செப்டம்பரில் நான்கு நாட்களில், அங்கு முழு மாதத்திற்கும் பெய்யும் இயல்பான மழையை விட ஐந்து மடங்கு அதிகமான மழையைப் பெற்றது.

கேரளா, கனமழைக்கு புதியதல்ல, 2018 இல் பரவலான அழிவைக் கண்டது, இதற்கு முக்கிய காரணம் நதிகளின் வெள்ளப்பெருக்கு ஏற்படும் பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள் மற்றும் சுற்றுலா உள்கட்டமைப்புகள் வந்துள்ளன. மும்பையின் வடிகால் உடைந்து அல்லது அடைக்கப்பட்டுள்ளதால், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வெள்ளத்தில் மூழ்குகிறது.

உத்தரகாண்ட் பேரழிவு, பின்னர் விசாரணை அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டபடி, ஒழுங்குபடுத்தப்படாத கட்டுமானம் மற்றும் தவறான திட்டமிடப்பட்ட உள்கட்டமைப்பு வேலைகளால் மோசமாக்கப்பட்டது என தெரியவந்தது.

கடந்த 10 ஆண்டுகளில் இந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றும் ஒரு எச்சரிக்கையை வழங்கியுள்ளன, மேலும் அவை ஒவ்வொன்றும் பல கற்றல்களை வழங்கியுள்ளன. துரதிர்ஷ்டவசமாக, மிகக் குறைவான பாடங்கள் மட்டுமே கற்றுக்கொண்டதாகத் தெரிகிறது. சாலைகள், துறைமுகங்கள், ரயில்வே, நகர்ப்புற இடங்கள், வீடுகள், மருத்துவமனை, மின் நிலையங்கள் போன்ற உள்கட்டமைப்பைக் கட்டமைக்கும் பணியில் இந்தியா இன்னும் ஈடுப்பட்டுள்ளது. அடுத்த நான்கு முதல் ஐந்து தசாப்தங்களுக்கு காலநிலை மாற்றத்தின் மோசமான எதிர்பார்க்கப்படும் தாக்கங்களை எதிர்க்கும் வகையில் அவற்றை வடிவமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.

கடந்த சில நாட்களாக டெல்லி, குர்கான் மற்றும் பிற இடங்களில் பரவலாக தண்ணீர் தேங்கி காணப்பட்டதற்கு மழையைக் குறை கூறுவது வீண். நொய்டா, அதே அளவு மழையுடன், முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தை வெளிப்படுத்தியது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rain In Tamilnadu Climate Change
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment