Advertisment

போதைப் பொருள் கடத்தல் வழக்கு; சிங்கப்பூரில் தமிழருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

தங்கராசுவிடம் இருந்து போதைப் பொருள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவர் கடத்தல் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க மட்டுமே செய்துள்ளார் என வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Singapore executes convicted drug trafficker why are rights groups angry

தங்கராசு சுப்பையா

கஞ்சாவை கடத்தும் சதியில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட 46 வயதை சேர்ந்த தங்கராசு சிங்கப்பூரில் புதன்கிழமை (ஏப்ரல் 26) காலை தூக்கிலிடப்பட்டார்,

இது, கடுமையான போதைப்பொருள் சட்டத்தின் (MDA) கீழ் விதிக்கப்பட்ட தண்டனை ஆகும். இந்தத் தண்டனைக்கு மனித உரிமை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

Advertisment

தமிழ் வம்சாவளியை சேர்ந்த தங்கராசு சுப்பையா, “1.017.9 கிராம் போதைப் பொருள் கடத்திய குற்றஞ்சாட்டப்பட்டார். இந்த வழக்கில் 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9ஆம் தேதி அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து தங்கராசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு ஆகஸ்ட் 14, 2019ஆம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது. தொடர்ந்து ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார்.

அது நிராகரிக்கப்பட்ட நிலையில், தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரினார். அது, பிப்.23ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

சிங்கப்பூர் சட்டத்தில் போதைப் பொருள் கடத்தலுக்கு உச்சப்பட்ச தண்டனை

சிங்கப்பூர் சட்டம், ஹெராயின், கோகோயின், கெட்டமைன் மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களை குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக கடத்தினால் மரண தண்டனை விதிப்பதை கட்டாயமாக்குகிறது.

உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில், "எம்.டி.ஏ.க்கு இரண்டாவது அட்டவணையுடன் படிக்கப்பட்ட 33(1) இன் கீழ், குற்றத்திற்கான பரிந்துரைக்கப்பட்ட தண்டனை மரணம்" என்று குறிப்பிட்டது.

தொடர்ந்து சில விலக்குகள் உள்ளன என்ற போதிலும் தங்கராசு வழக்கில் அது சாத்தியமில்லை எனவும் நீதிபதி கூறினார். ஏனெனில் போதைப் பொருள் அளவு 500 கிராமை தாண்டியுள்ளது.

தீர்ப்பில் சர்ச்சை ஏன்?

தங்கராசு என்ற நபரிடமோ அல்லது அவர் வசம் இருந்தோ போதைப்பொருள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், அவர் கடத்தல் நடவடிக்கையை ஒருங்கிணைத்ததாக மட்டுமே வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மரண தண்டனை எதிர்ப்பு ஏசியா நெட்வொர்க்கின் அறிக்கையின்படி, மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு சுமார் 1 கிலோ கஞ்சாவை “போக்குவரத்துக்கான சதியில் ஈடுபட்டு போதைப்பொருள் கடத்தலுக்குத் தூண்டியதாக” தங்கராசுவுக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

திருட்டுத்தனமான கூரியர் பயன்படுத்திய இரண்டு மொபைல் போன்கள் தங்கராசுவிடம் இணைக்கப்பட்டதாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்த தங்கராஜூ, இரண்டு போன்களில் ஒன்று தான் தன்னுடையது என்றும், ஆனால் அதை தொலைத்துவிட்டதாகவும் கூறினார்.

மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு மரண தண்டனைக்கு எதிரான பரப்புரையாளர் ர் ரிச்சர்ட் பிரான்சன், “கைது செய்யப்பட்ட போது தங்கராஜூ இந்த போதைப்பொருட்களின் அருகில் இல்லை. இது பெரும்பாலும் அனுமானங்களை நம்பியிருந்த ஒரு சூழ்நிலை வழக்கு.” எனத் தெரிவித்திருந்தார்.

சிங்கப்பூரின் மரண தண்டனை கொள்கை

கடந்த ஆண்டு செப்டம்பரில், நாட்டின் உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் கே.சண்முகம் தனது அமைச்சகத்தின் கணக்கெடுப்பை மேற்கோள் காட்டினார்,

இது கிட்டத்தட்ட 87% சிங்கப்பூரர்கள் மரண தண்டனையை ஆதரிப்பதாகக் காட்டியது. பிராந்தியத்தின் சில பகுதிகளிலிருந்து சிங்கப்பூர் அல்லாதவர்கள் மத்தியில் ஒரு தனி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் பதிலளித்தவர்களில் 83 சதவீதம் பேர் மரண தண்டனையால் மக்கள் சிங்கப்பூருக்கு கணிசமான அளவு போதைப்பொருள் கடத்த விரும்பவில்லை என்று கூறியுள்ளனர்.

நான் மரண தண்டனையை நீக்கிவிட்டால், சிங்கப்பூருக்குள் போதைப்பொருள் வரத்து மிக அதிகமாக இருக்கும். உங்கள் உயிர்கள், உங்கள் உடன்பிறந்தவர்களின் உயிர்கள் மற்றும் பல உயிர்கள் ஆபத்தில் இருக்கும். மரண தண்டனையை நீக்கினால் சிங்கப்பூரில் அதிகமானோர் இறப்பார்கள்” என்று சிங்கப்பூரை தளமாகக் கொண்ட ஒளிபரப்பு சிஎன்ஏ அந்த நேரத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் சண்முகத்தை மேற்கோள் காட்டியது.

பிரான்சனின் வலைப்பதிவு இடுகையைத் தொடர்ந்து, சிங்கப்பூர் அரசாங்கம், மரண தண்டனை "சிங்கப்பூர் குற்றவியல் நீதி அமைப்பின் இன்றியமையாத அங்கம்" என்றும், பிரான்சனின் கூற்றுக்கள் "பொதுவாக பொய்யானது" என்றும் கூறியுள்ளது.

போதைப்பொருள் மற்றும் மரண தண்டனை தொடர்பான சிங்கப்பூரின் கொள்கைகள் அதன் அனுபவத்திலிருந்து பெறப்பட்டவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மரண தண்டனை என்பது போதைப்பொருள் தேவை மற்றும் விநியோகம் ஆகிய இரண்டையும் குறிவைக்கும் சிங்கப்பூரின் விரிவான தீங்கு தடுப்பு உத்தியின் ஒரு பகுதியாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Singapore Death
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment