Advertisment

மம்தா மற்றும் நானோவின் கதை: மே.வங்க அரசு டாடா குழுமத்துக்கு ரூ.766 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு; ஏன்?

2011-ல் டிஎம்சி ஆட்சிக்கு வர உதவிய சிங்கூர் நிலப் போராட்டத்தின் தொடர் கதையில் ஒரு புதிய அத்தியாயம் சேர்க்கப்பட்டுள்ளது. 16 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்தக் கதை என்ன?

author-image
WebDesk
New Update
Wb.jpg

டாடா மோட்டார்ஸ் லிமிடெட் திங்கள்கிழமை (அக்டோபர் 30) ​​பங்குச் சந்தையில் வெளியிட்ட குறிப்பில், மேற்கு வங்கம்  சிங்குரில் உள்ள டாடா உற்பத்தி நிலைய பிரச்சினை, 3 பேர் கொண்ட நடுவர் மன்றத்தில் ஒருமித்த தீர்ப்பின் மூலம் தீர்க்கப்பட்டுள்ளன.  சிங்குர் உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட மூலதன முதலீட்டு இழப்புகளுக்கு மேற்கு வங்க அரசு செப்டம்பர் 1, 2016 முதல் ஆண்டுக்கு 11 சதவீத வட்டியுடன் ரூ. 765.78 கோடி வழங்க உத்தரவிட்டுள்ளது. 

Advertisment

சிங்குரில் டாடா தனது சிறிய கார் நானோவை தயாரிக்க ஒரு ஆலையை அமைத்தது - அந்த நேரத்தில் ஒரு புரட்சிகர யோசனையாக பார்க்கப்பட்டது - ஆனால்  திரிணாமுல் கட்சியின் எதிர்ப்புகளையடுத்து நிறுவனம் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. திரிணாமுல் அப்போது எதிர்க்கட்சியாக இருந்தது.

சிங்கூர் மற்றும் டாடா நானோவின் கதை

வங்காளத்தில் 2006-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று இடது முன்னணி மீண்டும் ஆட்சிக்கு வந்தது. 

தொழில்மயமாக்கல் மற்றும் வேலை வாய்ப்பு வாக்குறுதிகளை கட்சி அறிவித்திருந்தது. இதையடுத்து 

அந்த மே மாதம், முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்ஜி,  நானோ கார் தயாரிக்க, ஆலையை அமைக்க டாடா நிறுவனத்திற்கு கிட்டத்தட்ட 1,000 ஏக்கர் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இருப்பினும், ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள சிங்கூரில் நிலம் கையகப்படுத்தும் முயற்சியில் சிக்கல் ஏற்பட்டது. "வளமான" விளைநிலத்தை கையகப்படுத்தும் முயற்சிக்கு எதிராக உள்ளூர் மக்கள் மற்றும் SUCI(C) மற்றும் CPI(ML) போன்ற சிறிய கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இருப்பினும், கையகப்படுத்தல் நிறைவடைந்து, நானோ ஆலை கட்டும் பணியைத் தொடங்கியது.

2007-ம் ஆண்டில், மம்தா பானர்ஜி இடது முன்னணி அரசாங்கத்திற்கு எதிராக ஒரு இயக்கத்தைத் தொடங்கினார். மேலும் சிங்கூர் முக்கிய தொழில் பகுதியில் டி.எம்.சி கட்சியினர் காவல்துறை மற்றும் நிர்வாகத்துடன் மோதலில் ஈடுபட்டனர். மம்தா 26 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார், இது பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் ஆதரவைப் பெற்றது.

ஜனவரி 2008-ல், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் நானோவை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. விரைவில், கொல்கத்தா உயர்நீதிமன்றம் நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கியதை உறுதி செய்தது.

இதற்கிடையில், மம்தா தனது போராட்டத்தைத் தொடர்ந்தார், இது புர்பா மேதினிபூர் மாவட்டத்தில் உள்ள நந்திகிராமில் ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கான நிலம் கையகப்படுத்துதலுக்கு எதிரான அவரது மற்ற போராட்டத்துடன் வேகத்தைப் பெற்றது. மம்தாவுக்கும் அரசுக்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்த அப்போதைய மாநில ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தியின் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. 

போராட்டம், எதிர்ப்புகளுக்கு மத்தியில் டாடா மோட்டார்ஸ் மேற்கு வங்கத்தில் இருந்து வெளியே முடிவு செய்து , அக்டோபர் 3, 2008 அன்று அதன் அறிவிப்பை வெளியிட்டது. அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், நிறுவனம் அகமதாபாத் மாவட்டத்தில் சனந்தில் ஆலையை நிறுவியது.

உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம்

சிங்குர் மற்றும் நந்திகிராம் பேராராட்டத்தின்  பின்னணியில் மம்தா 2011-ம் ஆண்டு  ஆட்சியைப் பிடித்தார், இடதுசாரிகளின் 34 ஆண்டுகால ஆட்சிக்கு முடிவுகட்டினார்.  ஆலை அமைக்க வலுக்கட்டாய நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளின்  400 ஏக்கர் நிலத்தை திரும்பத் தர வேண்டும் என்பதை அவரது முதல் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

மேலும் அரசாங்கம் சிங்குர் நில மறுவாழ்வு மற்றும் மேம்பாட்டு மசோதா, 2011-ஐ நிறைவேற்றியது.

ஜூன் 2011-ல் மாநில அரசு நிலத்தை கையகப்படுத்திய பிறகு, டாடா கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.  நீதிமன்றம் தலையிட மறுத்ததால், உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றது. இந்த வழக்கை கொல்கத்தா உயர் நீதிமன்றமே விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் கூறியது. 

செப்டம்பர் மாதம், தனி நீதிபதி அரசுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தார். டாடா மோட்டார்ஸ் மேல்முறையீடு செய்தது, உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் 2011 சட்டத்தை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று அறிவித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேற்கு வங்க அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

ஆகஸ்ட் 31, 2016 அன்று, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வி.கோபால கவுடா மற்றும் அருண் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, இடது முன்னணி அரசாங்கத்தால் சிங்குரில் விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட 997 ஏக்கர் நிலத்தை 12 வாரங்களில் அதன் உரிமையாளர்களிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு பிறகு மம்தா, "இப்போது என்னால் நிம்மதியாக இறக்க முடியும்" என்று கூறினார். மேலும் இந்த வரலாற்று வெற்றியை சிங்கூர் இயக்கத்தின் "தியாகிகளுக்கு" அர்ப்பணிப்பதாக கூறினார். 

நடுவர் மன்றம் 

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிற்குப் பிறகு, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மேற்கு வங்க தொழில் வளர்ச்சிக் கழகத்துடன் (WBIDC) இணைந்து ஏற்கனவே செய்த மூலதன முதலீடுகளுக்கு இழப்பீடு கோரி நடுவர் மன்றத்திற்கு சென்றது. அக்டோபர் 2008-ல் கட்டாய வெளியேற்றம் செய்த நிலையில் அதற்கு முன்னதாக செய்த மூலதன முதலீடுகளுக்கு இழப்பீடு கோரியது.  

ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/explained/explained-politics/story-of-mamata-and-nano-why-tata-can-claim-rs-766-crore-9007996/

டாடா மோட்டார்ஸ் இதுகுறித்து பங்குச் சந்தையில் தெரிவிக்கையில்,  "3 உறுப்பினர்கள் கொண்ட நடுவர் மன்றத்தின் முன் நிலுவையில் உள்ள நடுவர் மன்ற நடவடிக்கைகள் இப்போது இறுதியாக அக்டோபர் 30, 2023 தேதியிட்ட டிஎம்எல்லுக்கு ஆதரவாக ஒருமித்த தீர்ப்பால் அகற்றப்பட்டது, இதன் மூலம் உரிமைகோருபவர் (டிஎம்எல்) நடத்தப்பட்டது. அதன் படி செப்டம்பர் 1, 2016 முதல் ஆண்டுக்கு 11% வட்டியுடன் ரூ.765.78 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது என்று கூறியது. 

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

Mamata Banerjee West Bengal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment