/tamil-ie/media/media_files/uploads/2021/09/covid-antibody-explained.jpg)
Study compares antibody levels in Moderna, Pfizer recipients : வர்ஜீனியா மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளால் மனித உடல்களில் ஏற்படும் ஆன்ட்டிபாடிகளின் அளவுகளை ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டுள்ளனர். JAMA நெட்வொர்க் ஓப்பன் என்ற இதழில் இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. ஃபைசர் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களைக் காட்டிலும் மாடர்னா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் உடலில் ஆன்ட்டிபாடிகள் அளவு சற்று அதிகமாக உள்ளது.
ஒரு தடுப்பூசியின் செயல்பாட்டை அறிந்து கொள்ள அது உடலில் ஏற்படுத்தும் ஆன்ட்டிபாடிகளின் அளவை மதிப்பிடக் கூடாது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளதாக வர்ஜீனியா பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. , மேலும் புதிய கண்டுபிடிப்புகள் குறிப்பிடத்தக்கவை என்று அவர்கள் கூறுகிறார்கள், ஏனெனில் இந்த முடிவுகள் சில முக்கிய அம்சங்களில் ஒரு தடுப்பூசி உயர்ந்ததாக இருக்குமா என்பதை விஞ்ஞானிகள் தீர்மானிக்கும் மற்றொரு படியை குறிக்கிறது.
தடுப்பூசிகளை செலுத்திக் கொண்ட 167 பல்கலைக்கழக ஊழியர்களிடம் இருந்து இரத்த மாதிரிகள் பெறபட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது. 79 நபர்கள் பைசர் தடுப்பூசியையும் 88 பேர் மாடர்னாவையும் செலுத்திக் கொண்டனர்.
ஒட்டுமொத்தமாக, ஃபைசர் உடன் ஒப்பிடும்போது இரண்டாவது டோஸுக்குப் பிறகு இரத்தத்தில் அதிக ஆண்ட்டிபாடிகளை மாடர்னா உற்பத்தி செய்வதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். மாடர்னா ஒரு மில்லிலிட்டர் இரத்தத்திற்கு 68.5 மைக்ரோகிராம் ஆன்டிபாடிகளை உருவாக்கியது, அதே நேரத்தில் ஃபைசர் ஒரு மில்லிலிட்டர் இரத்தத்திற்கு 45.9 மைக்ரோகிராம் ஆன்டிபாடிகளை உருவாக்கியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.