அழிந்து வரும் கிரேட் இந்தியன் பஸ்டர்ட் (கானமயில்) பறவையைப் பாதுகாக்கக் கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘புராஜெக்ட் டைகர்’ மாதிரியான ‘புராஜெக்ட் ஜி.ஐ.பி’ (Project GIB) தொடங்கலாமா என்று புதன்கிழமை கேட்டது.
"நம்மிடம் புராஜெக்ட் டைகர் உள்ளது, 'புராஜெக்ட் கிரேட் இந்தியன் பஸ்டர்ட்' போன்ற கிரேட் இந்தியன் பஸ்டர்ட்டில் (Great Indian Bustard) கவனம் செலுத்த சில வழிமுறைகள் சாத்தியமில்லையா" என்று தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட், நீதிபதி ஏ.எஸ் போபண்ணா மற்றும் நீதிபதி வி.ராமசுப்ரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியதாக பி.டி.ஐ தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்: இனவெறி, களங்கம்: உலக சுகாதார அமைப்பு குரங்கு அம்மையை ‘mpox’ என்று அழைக்க என்ன காரணம்?
கிரேட் இந்தியன் பஸ்டர்ட் என்றால் என்ன?
முக்கியமாக ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் காணப்படும் இந்த பெரிய பறவை, இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தால் (IUCN) அழிந்து வரும் இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
கிரேட் இந்தியன் பஸ்டர்ட்களின் வரலாற்று வரம்பு இந்திய துணைக் கண்டத்தின் பெரும்பகுதியை உள்ளடக்கியிருந்தாலும், இப்போது அது வெறும் 10 சதவீதமாக சுருங்கிவிட்டது. பறக்கும் பறவைகளில் அதிக எடை கொண்ட பறவைகளான கிரேட் இந்தியன் பஸ்டர்ட்கள் புல்வெளிகளை தங்கள் வாழ்விடமாக விரும்புகின்றன. நிலப்பறவைகளான கிரேட் இந்தியன் பஸ்டர்ட்கள் தங்கள் பெரும்பாலான நேரத்தை தரையில் செலவிடுகின்றன, பூச்சிகள், பல்லிகள், புல் விதைகள் போன்றவற்றை உண்கின்றன. புல்வெளி சுற்றுச்சூழல் அமைப்புகளின் ஆரோக்கியத்தின் காற்றழுத்தமானிகளாக இருப்பதால், கிரேட் இந்தியன் பஸ்டர்ட்கள் புல்வெளியின் முதன்மையான பறவை இனங்களாகக் கருதப்படுகின்றன.
கிரேட் இந்தியன் பஸ்டர்ட் ஏன் ஆபத்தான நிலையில் உள்ளது?
கிரேட் இந்தியன் பஸ்டர்ட்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்று மேல்நிலை மின் பரிமாற்றக் கம்பிகள். அவற்றின் மோசமான முன் பார்வை காரணமாக, பறவைகள் மின் கம்பிகளை தூரத்தில் இருந்து கண்டுபிடிக்க முடியாது, மேலும் நெருக்கமாக இருக்கும்போது பாதையை மாற்ற முடியாத அளவுக்கு கனமாக இருக்கும். இதனால், கம்பிகளில் மோதி இறக்கின்றன.
இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் (WII) படி, ராஜஸ்தானில், ஒவ்வொரு ஆண்டும் 18 கிரேட் இந்தியன் பஸ்டர்ட்கள் மேல்நிலை மின் கம்பிகளில் மோதி இறக்கின்றன.
கிரேட் இந்தியன் பஸ்டர்ட்: பாதுகாப்பு முயற்சிகள்
உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 2021 இல், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் உள்ள முக்கிய மற்றும் சாத்தியமான கிரேட் இந்தியன் பஸ்டர்ட் வாழ்விடங்களில் உள்ள அனைத்து மேல்நிலை மின் பரிமாற்றக் கம்பிகளையும் நிலத்திற்கு அடியில் மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது.
புதன்கிழமை நடந்த விசாரணையின் போது, முன்னுரிமை பகுதிகளில் பறவை திசை திருப்பும் கருவிகளை (மின் கேபிள்களில் பொருத்தப்பட்ட பிரதிபலிப்பான் போன்ற கட்டமைப்புகள்) நிறுவுவது குறித்து ஆறு வாரங்களில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் தலைமைச் செயலாளர்களிடம் நீதிமன்றம் அறிக்கை கேட்டது. மேலும் இரு மாநிலங்களிலும் நிலத்தடியில் செல்ல வேண்டிய டிரான்ஸ்மிஷன் லைன்களின் மொத்த நீளத்தை மதிப்பிடுமாறும் கேட்டுக் கொண்டது.
மேலும், 2015 ஆம் ஆண்டில், மத்திய அரசு கிரேட் இந்தியன் பஸ்டர்ட் இனங்கள் மீட்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் கீழ், இந்திய வனவிலங்கு நிறுவனம் மற்றும் ராஜஸ்தான் வனத்துறை இணைந்து இனப்பெருக்க மையங்களை அமைத்தது, அங்கு காடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட கிரேட் இந்தியன் பஸ்டர்ட் முட்டைகள் செயற்கையாக அடைகாக்கப்பட்டு வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil