Advertisment

கவனம் ஈர்க்கும் கருக்கலைப்பு குறித்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

கருக்கலைப்பு சட்டம் என்ன சொல்கிறது?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Supreme Courts abortion ruling

20-24 வாரங்களுக்கு இடைப்பட்ட கர்ப்பங்களுக்கு, MTP சட்டத்தின் கீழ் உள்ள விதிகளின் பிரிவு 3B ஏழு வகை பெண்களை பட்டியலிடுகிறது.

கரு 20-24 வாரங்களுக்கு இடையில் இருக்கும் போது சில விதிவிலக்கான காரணங்களுக்காக கர்ப்பத்தை கலைக்க அனுமதி கோரப்பட்ட நிலையில், திருமணமான மற்றும் திருமணமாகாத பெண்கள் என வேறுபடுத்துவது அரசியலமைப்பிற்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை ஒரு குறிப்பிடத்தக்க தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

Advertisment

அதாவது, ஜூலை மாதம் 25 வயது பெண்ணின் கர்ப்பத்தை கலைக்க நீதிமன்றம் அனுமதித்த இடைக்கால உத்தரவை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உலக பாதுகாப்பான கருக்கலைப்பு தினத்தன்று தற்செயலாக வழங்கப்பட்ட தீர்ப்பு, கருக்கலைப்பை அணுகுவதில் பெண் சுயாட்சியை வலியுறுத்துகிறது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?

நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஏ.எஸ்.போபண்ணா, ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, 2003-ம் ஆண்டு மருத்துவக் கருவுறுதல் விதிகளின் 3பி விதியின் விளக்கத்தை வடிவமைத்தனர்.

இதன்படி சில வகைப் பெண்கள் மட்டுமே 20-க்குள் கர்ப்பத்தை கலைக்க அனுமதிக்கப்படுகிறார்கள். அதுவும் சில அசாதாரண சூழ்நிலையில் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

டெல்லி உயர்நீதிமன்றம் தனது மனுவை நிராகரித்ததை அடுத்து, கருக்கலைப்பு செய்யக் கோரி நீதிமன்றத்தை நாடிய 25 வயது திருமணமாகாத பெண் ஜூலை மாதம் இந்த விதியை சவால் செய்தார்.

அந்தப் பெண் மனுவில், கடைசி கட்டத்தில் தனது காதலர் திருமணத்தை நிறுத்திவிட்டார் எனக் கூறியிருந்தார். மேலும் இந்தக் கர்ப்பம் பெரும் காயத்தை ஏற்படுத்தும், மன அமைதியை குலைக்கும் என்றும் அவர் வாதிட்டார்.

இந்த நிலையில் கர்ப்பத்தை கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.

கருக்கலைப்பு சட்டம் என்ன சொல்கிறது?

கர்ப்பத்தை நிறுத்துவதற்கான மருத்துவ சட்டம் ஒரு மருத்துவ பயிற்சியாளரால் இரண்டு நிலைகளில் கர்ப்பத்தை நிறுத்த அனுமதிக்கிறது.

2021 ஆம் ஆண்டில் ஒரு முக்கியமான திருத்தத்திற்குப் பிறகு, 20 வாரங்கள் வரையிலான கர்ப்பங்களுக்கு, ஒரு பதிவுசெய்யப்பட்ட மருத்துவ பயிற்சியாளரின் கருத்தின் கீழ் கருக்கலைப்பு அனுமதிக்கப்படுகிறது.

20-24 வாரங்களுக்கு இடைப்பட்ட கர்ப்பங்களுக்கு, சட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ள விதிகள், யார் முடிவுக்கு வரலாம் என்ற அடிப்படையில் சில நிபந்தனைகளை பரிந்துரைக்கின்றன.

இந்த வழக்கில் இரண்டு பதிவு செய்யப்பட்ட மருத்துவ பயிற்சியாளர்களின் கருத்தும் தேவைப்பட்டது.

அதன்படி 20 வாரங்களுக்குள் கருவுற்றிருந்தால், பின்வருவம் காரணங்களால் கலைக்க அனுமதிக்கலாம்:

அ) கர்ப்பத்தின் தொடர்ச்சியானது கர்ப்பிணிப் பெண்ணின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அல்லது அவரது உடல் அல்லது மன ஆரோக்கியத்திற்கு கடுமையான காயத்தை ஏற்படுத்தும் என்பதால்.

ஆ) குழந்தை பிறந்தால், அது ஏதேனும் தீவிரமான உடல் அல்லது மன அசாதாரணத்தால் பாதிக்கப்படும் கணிசமான ஆபத்து உள்ளது என்ற காரணத்தால்..

முந்தைய "திருமணமான பெண் அல்லது அவளுடைய கணவன்" என்பதற்குப் பதிலாக "எந்தவொரு பெண் அல்லது அவளுடைய பார்ட்னர் " என்ற சொற்றொடர் 2021 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

MTP சட்டத்தின் திட்டத்தில் இருந்து "திருமணமான பெண் அல்லது அவரது கணவர்" என்ற வார்த்தையை நீக்குவதன் மூலம், சட்டப்பிரிவு 3 இன் நோக்கத்தை தெளிவுபடுத்தவும் மற்றும் திருமண நிறுவனத்திற்கு வெளியே ஏற்படும் கர்ப்பங்களை சட்டத்தின் பாதுகாப்பு குடைக்குள் கொண்டு வரவும் நீதிமன்றம் விரும்புகிறது.

20-24 வாரங்களுக்குள் கர்ப்பத்தை நிறுத்த அனுமதிக்கப்படும் பெண்களின் பிரிவில் யார் அடங்குவர்?

20-24 வாரங்களுக்கு இடைப்பட்ட கர்ப்பங்களுக்கு, MTP சட்டத்தின் கீழ் உள்ள விதிகளின் பிரிவு 3B ஏழு வகை பெண்களை பட்டியலிடுகிறது.

1) பாலியல் வன்கொடுமை அல்லது கற்பழிப்பு அல்லது பாலுறவில் இருந்து தப்பியவர்கள்.

2) சிறார்கள்

3) திடீர் விவாகரத்து

4) உடல் ஊனம் அல்லது தீவிர உடல்நிலை பாதிப்பு

5) மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள்

6) கரு குறைபாடு

7) அரசினால் அறிவிக்கப்படும் மனிதாபிமான சூழல்கள் மற்றும் பேரிடர் காலத்தில் கருவுற்ற பெண்கள்

நீதிமன்றத்தின் விளக்கம் என்ன?

விதி 3பி(சி) முழுவதையும் தனித்தனியாக படிக்க முடியாது, ஆனால் 3பியின் கீழ் உள்ள மற்ற துணைப்பிரிவுகளுடன் சேர்த்து படிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.

மற்ற துணைப்பிரிவுகள் திருமணமான அல்லது திருமணமாகாத பெண்களை வேறுபடுத்தாது.

​​எடுத்துக்காட்டாக, பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்கள், சிறார்கள் போன்றவர்கள், திருமணமாகாத பெண்களை மட்டும் 3B(c) விலக்க முடியாது என்று நீதிமன்றம் கூறியது.

"விதி 3B(c) என்பது ஒரு பெண்ணின் திருமண நிலையில் ஏற்படும் மாற்றம் பெரும்பாலும் அவளது பொருள் சூழ்நிலைகளில் மாற்றத்திற்கு வழிவகுக்கிறது என்ற உண்மையை பரந்த அளவில் அங்கீகரிப்பதன் அடிப்படையில் அமைந்துள்ளது இந்தத் தீர்ப்பு.

ரு திருமணமான பெண் தன் கணவனை விவாகரத்து செய்யும் போது அல்லது அவர் இறக்கும் போது, ​​பொருள் சூழ்நிலையில் மாற்றம் ஏற்படலாம்.

தீர்ப்பின் விளைவு என்ன?

விதி 3B "ஒரு பெண்ணின் பொருள் சூழ்நிலையில் மாற்றம்" என்று கூறுகிறது. ஆகையால், இந்தத் தீர்ப்பு திருமணமாகாத பெண்களின் உரிமையை அங்கீகரிக்கும்.

சட்டமன்றம் அல்லது நீதிமன்றங்கள் ஒவ்வொரு சாத்தியமான நிகழ்வுகளையும் பட்டியலிட முடியாது, அவை பொருள் சூழ்நிலைகளின் மாற்றமாக தகுதி பெறலாம்.

ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் தனித்துவமான உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு வழக்கையும் சோதிக்க வேண்டும் என்று சொன்னால் போதுமானது" என்று தீர்ப்பு கூறுகிறது.

இதன் பொருள் முடிவு பதிவுசெய்யப்பட்ட மருத்துவ பயிற்சியாளர்களின் கைகளில் இருக்கும். மேலும் திருப்தியடையவில்லை என்றால், பெண் நீதிமன்றத்தை அணுகலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Supreme Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment