Advertisment

Explained: ராணுவத்தில் அஹீர் படைப் பிரிவை சேர்க்க கோரிக்கை

தங்கள் சமூக படைப்பிரிவை ராணுவத்தில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி அஹீர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் டெல்லி-குர்கான் நெடுஞ்சாலையில் மார்ச் 23ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

author-image
WebDesk
New Update
Explained: ராணுவத்தில் அஹீர் படைப் பிரிவை சேர்க்க கோரிக்கை

தங்கள் சமூக படைப்பிரிவை ராணுவத்தில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி அஹீர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் டெல்லி-குர்கான் நெடுஞ்சாலையில் மார்ச் 23ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குர்கானில் கேர்கி டெளலா சுங்கச் சாவடியில் பிப்ரவரி 4ஆம் தேதி முதல் அஹீர் சமூகத்தினர் முகாமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் பின்னணி என்னவென்று பார்ப்போம் வாருங்கள்.

அஹீர்வால் பிராந்தியம் ஹரியானாவில் தெற்கு மாவட்டங்களான ரெவாரி, மகேந்திரகர், குர்கான் ஆகியவற்றை ஒருங்கிணைந்த பகுதியாக கொண்டுள்ளது.

அஹீர் சமூகத்தினர் அதிக அளவில் இந்திய ராணுவத்தில் இருந்தவர்கள் ஆவர். 1962-ஆம் ஆண்டில் சீனாவுக்கு எதிரான போரில் அஹீர் படைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் முக்கியப் பங்காற்றினர். இதையடுத்து, அவர்கள் நாடு முழுவதும் அறியப்பட்டவர்களாக ஆகினர்.

குமாவன் படைப்பிரிவிலும், மேலும் சில படைப்பிரிவிலும் அஹீர் சமூகத்தினர் அங்கம் வகித்து வருகின்றனர்.

ஆனால், அஹீர் படைப் பிரிவு என்ற பெயரில் மீண்டும் அந்தப் பிரிவை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 2012ஆம் ஆண்டில் அச்சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த ஆண்டு தான் சீனாவை எதிர்த்து போராட்டம் நடத்தி 50 ஆண்டுகள் நிறைவு செய்த ஆண்டாகும். தற்போது 60 ஆவது ஆண்டு நிறைவையொட்டி மீண்டும் அஹீர் சமூகத்தினர் இந்தக் கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.

பல்வேறு அரசியல் கட்சியினரும் இவர்களின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

குமாவன், இந்தியா ராணுவத்தில் அஹீர் சமூகத்தினரின் வரலாறு என்ன?

குமாவன், ஜாட், ராஜ்புத் ஆகியோரை கொண்ட படைப்பிரிவில் அஹீர் சமூகத்தினர் சேர்க்கப்பட்டனர்.

அஹீர் சமூகத்தினர் 19 ஹைதராபாத் படைப்பிரிவில் தொடக்கக் காலத்தில் கணிசமான அளவில் சேர்க்கப்பட்டனர். 19 ஹைதராபாத் படைப்பிரிவில் ஆரம்ப காலத்தில் உத்தரப் பிரதேசத்தில் இருந்து ராஜ்புத் சமூகத்தினரும், தக்காண பீட பூமியிலிருந்து முஸ்லிம்களும் சேர்க்கப்பட்டனர். மேலும் சில சமூகத்தினரும் சேர்க்கப்பட்டனர்.

1945ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி இந்த படைப்பிரிவின் பெயர் 19 குமாவன் என்று மாற்றப்பட்டது.

சுதந்திரத்துக்கு பிறகு குமாவன் என்று ஆனது.

குமாவன் படைப் பிரிவின் 13ஆவது பட்டாளம், ரெஸாங் லா பகுதியில் சீன ராணுவத்தினரை விரட்டி அடித்ததில் முக்கிய பங்கு வகித்தது. இந்தப் பட்டாளத்தில் குமாவனிகள் மற்றும் அஹீர் சமூகத்தினர் சரிசம விகிதத்தில் கலந்திருந்தனர்.

குமாவன் படைப் பிரிவில் 13ஆவது குமாவன் பட்டாளம் 1960களில் உருவாக்கப்பட்டது. அதில் அஹீர் சமூகத்தினர் முக்கிய அங்கம் வகித்தனர்.

ரெசாங் லா பகுதியில் அஹீர் சமூகத்தினரின் பங்கு என்ன?

கிழக்கு லடாக்கில் உள்ள ரெசாங் லா பகுதியில் 13ஆவது குமாவன் படை சீனர்களை விரட்டி அடித்தது.

இந்தச் சண்டை 1962ஆம் ஆண்டு நவம்பர் 18-ஆம் தேதி தொடங்கியது. சண்டை நடந்த இடம் நிலப் பரப்பிலிருந்து 17,000 அடி உயரத்தில் இருந்தது.

117 பட்டாளங்களில் 114 பட்டாளங்களைச் சேர்ந்த அஹீர் சமூகத்தினர் உயிர்த் தியாகம் செய்தனர்.

அரசியல் கட்சிகளும் இவர்களின் கோரிக்கைக்கு ஆதரவு அளிப்பது ஏன்?

கடந்த சில பத்தாண்டுகளாக அரசியல் கட்சிகள் அஹீர் சமூகத்தினரின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஹரியானா, உத்தரப் பிரதேசம், பிகார், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அஹீர் சமூகத்தினர் செல்வாக்கு உள்ளது. கடந்த 2018இல் இரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் இந்திரஜித் சிங், அஹீர் படைப்பிரிவை ராணுவத்தில் சேர்க்குமாறு பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதினார்.

அஹீர் சமூகத்தினரின் வீரத்தை யாருக்கும் நிரூபிக்க வேண்டியதில்லை என்று காங்கிரஸ் எம்.பி. தீபேந்தர் ஹூடா மாநிலங்களவையில் தெரிவித்தார்.

பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.யான ஷியாம் சிங் யாதவும் அஹீர் படைப் பிரிவை இந்திய ராணுவத்தில் சேர்க்குமாறு நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தார்.

மைக்ரோசாஃப்ட், சாம்சங், ஓக்டாவை டார்கெட் செய்த Lapsus$ ஹேக்கர் குழு… ஊடுருவியது எப்படி?

அஹீர் சமூகத்தினரின் கோரிக்கைக்கு ராணுவத்தின் பதில் என்ன?

ஏற்கனவே இருக்கும் ஜாதி, மத அடிப்படையிலான படைப் பிரிவு மட்டும் தொடர்ந்து செயல்படும். புதிய கோரிக்கைகளை ஏற்க முடியாது என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

டோக்ரா, சீக், ராஜ்புத் பஞ்சாப் ஆகிய படைப் பிரிவுகளை தொடரவும், அஹீர், ஹிமாசல், கலிங்கா, குஜராத் மற்றும் பழங்குடியின படைப் பிரிவைச் சேர்க்க கோரும் கோரிக்கைகளை நிராகரிப்பதாகவும் ராணுவம் தெரிவித்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Explained
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment