எமெர்ஜென்சி 50 ஆண்டுகள் நிறைவு: பிரதமரை பதவியிழக்கச் செய்த அறை எண் 24-ன் தீர்ப்பு!

1975-ம் ஆண்டு, ஜூன் 12-ம் தேதி காலை 10 மணிக்கு, அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சின்ஹா தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினார். அது, இந்திய தேசத்தின் சரித்திரப் போக்கையே மாற்றியமைத்த தீர்ப்பு. அந்த வரலாற்றுத் தீர்ப்பு வழங்கப்பட்டு, இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

1975-ம் ஆண்டு, ஜூன் 12-ம் தேதி காலை 10 மணிக்கு, அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சின்ஹா தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினார். அது, இந்திய தேசத்தின் சரித்திரப் போக்கையே மாற்றியமைத்த தீர்ப்பு. அந்த வரலாற்றுத் தீர்ப்பு வழங்கப்பட்டு, இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Emergency 50 years

அலகாபாத் தீர்ப்பும், அவசர நிலைப் பிரகடனமும்: 50 ஆண்டுகள் நிறைவு

1975-ம் ஆண்டு, ஜூன் 12-ம் தேதி காலை 10 மணியளவில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் 24-ம் எண் அறைக்குள் நீதிபதி ஜக்மோகன் லால் சின்ஹா நுழைந்தார். மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்த அந்த அறையில் நிலவிய கனத்த அமைதிக்கு மத்தியில், ஒரு தீர்ப்பை வாசித்தார். அந்த தீர்ப்பு, அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கும், இந்திய நாட்டுக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விளைவுகளை ஏற்படுத்தியது.

Advertisment

1971-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், ரேபரேலி தொகுதியில் பிரதமர் இந்திரா காந்தியிடம் தோல்வியுற்ற ராஜ் நரைன், 'தேர்தலில் பிரதமர் முறைகேடுகளில் ஈடுபட்டார்' எனக் குற்றம்சாட்டி இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். பல ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி சின்ஹா, ராஜ் நரைனின் மனுவை ஏற்றுக்கொண்டார்.

The view of the Allahabad High Court.

தனது தீர்ப்பில் அவர் குறிப்பிட்டதாவது: “இந்த மனு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. எதிர்மனுதாரர் எண் 1  இந்திரா காந்தியின் மக்களவைத் தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்கப்படுகிறது. அதன்படி, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து, 6 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட தகுதிநீக்கம் செய்யப்படுகிறார்.” உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, இந்திய அரசியலில் ஒரு பெரும் புயலைக் கிளப்பியது. இதுவே, பின்னாளில் நாட்டில் 'நெருக்கடி நிலை' அறிவிக்கப்படுவதற்கும் முக்கிய காரணமாக அமைந்தது.

Advertisment
Advertisements

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில், ஒரு பிரதமரின் தேர்தல் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புக்கு சில மாதங்களுக்கு முன்பு, இதே நீதிமன்ற அறை மற்றொரு முதல் நிகழ்விற்கும் சாட்சியாக இருந்தது. நாட்டின் பிரதமரே தொடர்ந்து 2 நாட்கள் குறுக்கு விசாரணை செய்யப்பட்ட நிகழ்வாகும். நீதிபதி சின்ஹா அந்த உத்தரவில் கையெழுத்திட்ட கணத்தில் இருந்து, ஒரு சங்கிலித் தொடர் போன்ற நிகழ்வுகள் அரங்கேறத் தொடங்கின. அதன் இறுதிக் கட்டமாக, பிரதமர் இந்திரா காந்தி, அரசியலமைப்பு விதிகளைப் பயன்படுத்தி நாட்டில் உள்நாட்டு 'நெருக்கடி நிலை' (எமெர்ஜென்சி) அமல்படுத்தினார். 21 மாத காலத்தில், நாடு முழுவதும் வரலாறு காணாத வகையில் மக்களின் அடிப்படை உரிமைகள் முடக்கப்பட்டன; மாற்றுக்கருத்துக்களும், எதிர்ப்புக்குரல்களும் இரும்புக்கரம் கொண்டு நசுக்கப்பட்டன.

1975 Emergency, Emergency 1975, Indira Gandhi, Congress, history of Emergency, Indian political history, Allahabad High Court, Justice Jagmohan Lal Sinha, Indira Gandhi, Raj Narain, 1975 election verdict, Emergency declaration, india constitutional crisis, cross-examination of PM indira gandhi, Shanti Bhushan, Karpoori Thakur, indian judicial legacy, india emergency historical judgment, Indian democracy, express exclusive, 50 years of emergency, Indian express

50 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று...

அந்த வரலாற்றுத் தீர்ப்பு வழங்கப்பட்டு, இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் அன்றைய அறை எண் 24-ன் உயரமான தேக்கு மரக் கதவுகள், நீதிமன்ற விடுமுறை காரணமாகப் பூட்டப்பட்டிருந்தன. வழக்கமான நிர்வாக சீரமைப்பின் ஒரு பகுதியாக, அந்த அறைக்கு தற்போது நீதிமன்ற அறை எண் 34 எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்புக் காரணம்:

அந்தக் காலகட்டத்தில் அந்த அறை தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணம் குறித்து, உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்கள் சில தகவல்களைப் பகிர்கின்றனர். 1975-ம் ஆண்டு, மார்ச் 18,19 ஆகிய தேதிகளில், நாட்டின் பிரதமரே குறுக்கு விசாரணைக்காக நேரில் ஆஜரானார். 2-வது தளத்தில் அமைந்திருந்த அந்த அறை, ஒருபுறம் மட்டுமே திறந்திருந்த நீண்ட வராண்டாவின் கோடியில் இருந்தது. எனவே, பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் அதுவே மிகவும் பாதுகாப்பான இடமாகக் கருதப்பட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டது" என்கின்றனர் அவர்கள்.

Main entrance of the Allahabad High Court. (Express Photo by Shyamlal Yadav)

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வழக்கின் தொடக்கம் 1971-ம் ஆண்டு, ஏப்.24-ம் தேதி நிகழ்ந்தது. அந்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், ரேபரேலி தொகுதியில் சம்யுக்த சோசலிஸ்ட் கட்சியின் சார்பில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிட்ட சோசலிசத் தலைவர் ராஜ் நரைன், பிரதமர் இந்திரா காந்தியிடம் தோல்வியுற்றார். 

 

3 நீதிபதிகளைக் கடந்த வழக்கு:

இந்த வழக்கு முதலில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் கடைசி பிரிட்டிஷ் நீதிபதியான வில்லியம் புரூம் என்பவரின் அமர்வுக்கு வந்தது. ஆனால், அவர் 1971 டிசம்பரில் ஓய்வுபெற்றார். அதைத் தொடர்ந்து, இந்த வழக்கு 2 வெவ்வேறு அமர்வுகளுக்கு மாற்றப்பட்டது. அதாவது, (முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் லோகூரின் தந்தையான) நீதிபதி பி.என். லோகூர் மற்றும் நீதிபதி கே.என். ஸ்ரீவஸ்தவா ஆகியோரின் அமர்வுகளுக்குச் சென்றது. ஆனால், அவர்களும் அடுத்தடுத்து ஓய்வுபெற்றதால், இறுதியாக 1975 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த வழக்கு நீதிபதி ஜக்மோகன் லால் சின்ஹாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

சாட்சிகளும் வழக்கறிஞர்களும்:

1975-ம் ஆண்டு, பிப்.12 ஆம் தேதி, வழக்கில் வாய்மொழி சாட்சியங்கள் பதிவு செய்யப்படத் தொடங்கியபோது, நீதிமன்றம் இரு தரப்பிலும் பல முக்கியப் பிரமுகர்கள் சாட்சிகளாக ஆஜரானதைக் கண்டது. இந்திரா காந்தி தரப்பிற்காக, அப்போதைய திட்டக் கமிஷன் துணைத் தலைவரான ஹக்சர் ஆஜரானார். ராஜ் நரைன் தரப்பிற்காக பாரதிய ஜன சங்கத்தின் அன்றைய தலைவரான எல்.கே.அத்வானி, பீகாரின் முன்னாள் முதல்வர் கர்ப்பூரி தாக்கூர் மற்றும் ஸ்தாபன காங்கிரஸ் தலைவரான எஸ். நிஜலிங்கப்பா ஆகியோர் சாட்சியம் அளித்தனர்.

முக்கிய வழக்கறிஞர்கள்:

இந்திரா காந்தி தரப்பில் வழக்கறிஞர் எஸ்.சி. கரே வாதாடிய நிலையில், ராஜ் நரైன் தரப்பிற்காக சாந்தி பூஷண் மற்றும் ஆர்.சி. ஸ்ரீவஸ்தவா ஆகியோர் வாதாடினர். இவர்களைத் தவிர, அப்போதைய உத்தரப் பிரதேச அரசின் தலைமை வழக்கறிஞரான எஸ்.என். கக்கர், மாநில அரசுக்காகவும், இந்திய அரசின் தலைமை வழக்கறிஞரான (அட்டர்னி ஜெனரல்) நிரேன் டே, மத்திய அரசுக்காகவும் ஆஜராகினர்.

1975 Emergency, Emergency 1975, Indira Gandhi, Congress, history of Emergency, Indian political history, Allahabad High Court, Justice Jagmohan Lal Sinha, Indira Gandhi, Raj Narain, 1975 election verdict, Emergency declaration, india constitutional crisis, cross-examination of PM indira gandhi, Shanti Bhushan, Karpoori Thakur, indian judicial legacy, india emergency historical judgment, Indian democracy, express exclusive, 50 years of emergency, Indian express

சாட்சிக் கூண்டில் பிரதமர்:

இறுதியாக, நாட்டின் பிரதமரே சாட்சிக் கூண்டில் ஏறி, குறுக்கு விசாரணைக்கு ஆஜராகும் நேரமும் வந்தது. தனது 2 நாள் குறுக்கு விசாரணை தொடங்குவதற்கு ஒருநாள் முன்பாக, அதாவது 1975 ஆம் ஆண்டு, மார்ச் 17 அன்று, பிரதமர் இந்திரா காந்தி அலகாபாத் வந்தடைந்தார்.

குழுமியிருந்த தலைவர்கள்:

கிடைத்த தகவல்களின்படி, விசாரணை நாளன்று நீதிபதி சின்ஹா வருவதற்கு ஏறக்குறைய ஒருமணி நேரத்திற்கு முன்பாக, காலை 9 மணிக்கு எல்லாம் நீதிமன்ற வளாகத்தில் மக்கள் வெள்ளமெனத் திரண்டிருந்தனர். அன்றைய தினம் நீதிமன்றத்தில் நாட்டின் முன்னணி வழக்கறிஞர்களும், அரசியல் தலைவர்களும் குழுமியிருந்தனர். எதிர்க்கட்சித் தலைவர்களான மது லிமாயே, (பின்னாளில் வெளியுறவுத்துறை அமைச்சரான) ஷியாம் நந்தன் மிஸ்ரா, மற்றும் (பின்னாளில் மக்களவைத் தலைவரான) ரபி ராய் ஆகியோர் ஒருபுறம் இருந்தனர். மறுபுறம், இந்திரா காந்தியின் மகன் ராஜீவ் காந்தி மற்றும் மருமகள் சோனியா காந்தி ஆகியோரும் அமர்ந்திருந்தனர்.

Justice Sinha with his parents, wife and kids. (Express)

நீதிமன்றத்தில் நடந்த சுவாரஸ்யங்கள்:

நீதிமன்ற வட்டாரங்களில் இன்றுவரை சுவாரஸ்யமாகப் பேசப்படும் ஒரு நிகழ்வும் அப்போது நடந்தது. வழக்கமாக, சாட்சிகள் சாட்சிக் கூண்டில் நின்றுகொண்டுதான் சாட்சியம் அளிக்க வேண்டும். ஆனால், பிரதமர் இந்திரா காந்திக்காக, சற்று உயரமான மேடை மீது ஒரு நாற்காலி போடப்பட்டது. இதன் மூலம் அவர், நீதிபதிக்கு நிகரான உயரத்தில் அமர்ந்திருந்தார்.

முன்னதாக, இந்திரா காந்தியின் சாட்சியத்தைப் பதிவு செய்ய டெல்லிக்கே ஆணையத்தை (Commission) அனுப்ப வேண்டும் என அவரது வழக்கறிஞர் எஸ்.சி. கரே கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், நீதிபதி சின்ஹா அந்தக் கோரிக்கையை திட்டவட்டமாக நிராகரித்து, அவரை நீதிமன்றத்திற்கு நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.

தீர்ப்புக்காகக் காத்திருந்த தருணம்:

சில நாட்களுக்குப் பிறகு, வழக்கில் வாதங்கள் அனைத்தும் முடிவுக்கு வந்தன. 1975-ம் ஆண்டு, மே 23-ம் தேதி கோடை விடுமுறைக்காக நீதிமன்றம் மூடப்பட்டது. "இந்தியாவை உலுக்கிய வழக்கு: நெருக்கடி நிலைக்கு வழிவகுத்த தீர்ப்பு" (The Case That Shook India: The Verdict That Led to the Emergency) என்ற தனது புத்தகத்தில், பிரசாந்த் பூஷண் ஒரு முக்கியத் தகவலைப் பதிவு செய்துள்ளார். ராஜ் நரైனின் வழக்கறிஞராகவும், பின்னாளில் மத்திய சட்ட அமைச்சராகவும் பணியாற்றிய சாந்தி பூஷணின் மகன்தான் இந்த பிரசாந்த் பூஷண்.

அவர் தனது புத்தகத்தில், "மே 23 அன்று வாதங்கள் முடிவடைந்து தீர்ப்புக்காகக் காத்திருந்த காலகட்டத்தில், நீதிபதி சின்ஹா எண்ணற்ற அழுத்தங்களை எதிர்கொண்டார்" என்று எழுதியுள்ளார்.

1975 Emergency, Emergency 1975, Indira Gandhi, Congress, history of Emergency, Indian political history, Allahabad High Court, Justice Jagmohan Lal Sinha, Indira Gandhi, Raj Narain, 1975 election verdict, Emergency declaration, india constitutional crisis, cross-examination of PM indira gandhi, Shanti Bhushan, Karpoori Thakur, indian judicial legacy, india emergency historical judgment, Indian democracy, express exclusive, 50 years of emergency, Indian express

கடும் அழுத்தங்களுக்கு மத்தியில் எழுதப்பட்ட தீர்ப்பு:

"தீர்ப்பில் என்ன இருக்கிறது என்பதை முன்கூட்டியே அறிவதற்காக, சி.ஐ.டி-யின் சிறப்புப் படையே களமிறக்கப்பட்டது" என்று பிரசாந்த் பூஷண் தனது புத்தகத்தில் குறிப்பிடுகிறார். மேலும், நீதிபதி சின்ஹாவின் சுருக்கெழுத்தாளரான மன்னா லால் வீட்டிற்கு, சி.ஐ.டி. அதிகாரிகள் 2 முறை சென்று விசாரித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

அடுத்த 3 வாரங்களுக்கு, தீர்ப்பை எழுதும் பணியில் ஈடுபட்டிருந்த நீதிபதி சின்ஹா, தன்னை வீட்டிற்குள்ளேயே பூட்டிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அவரைப் பார்க்க வந்தவர்களிடமும், தொலைபேசியில் அழைத்தவர்களிடமும், "பேராசிரியரான தனது மூத்த சகோதரரைக் காண உஜ்ஜயினிக்குச் சென்றிருக்கிறார்" என்றே தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீர்ப்பு வெளியாவதற்கு முந்தைய நாள் இரவு, நீதிபதி சின்ஹா முக்கியமான ஏற்பாட்டைச் செய்ததாகவும் பிரசாந்த் பூஷண் எழுதியுள்ளார். தனது சுருக்கெழுத்தாளர் மன்னா லாலை, உயர் நீதிமன்றக் கட்டிடத்தை ஒட்டி இருந்த 'பங்களா எண் 10'-ல் பாதுகாப்பாகத் தங்க வைத்தார். (அந்த பங்களா தற்போது இடிக்கப்பட்டுவிட்டது. அந்த இடத்தில், உயர் நீதிமன்ற வளாகத்தின் ஒரு பகுதியாக, பல அடுக்குகள் கொண்ட புதிய கட்டிடம் எழுப்பப்பட்டுள்ளது)

1975 Emergency, Emergency 1975, Indira Gandhi, Congress, history of Emergency, Indian political history, Allahabad High Court, Justice Jagmohan Lal Sinha, Indira Gandhi, Raj Narain, 1975 election verdict, Emergency declaration, india constitutional crisis, cross-examination of PM indira gandhi, Shanti Bhushan, Karpoori Thakur, indian judicial legacy, india emergency historical judgment, Indian democracy, express exclusive, 50 years of emergency, Indian express

பிரயாக்ராஜில் உள்ள சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள தனது இல்லத்தில், நீதிபதி சின்ஹாவின் 3 மகன்களில் 2-வது மகனான நீதிபதி விபின் சின்ஹா, அந்த நாட்களை நினைவு கூர்கிறார். அவரும் 2020-ல் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக ஓய்வு பெற்றவர்தான்.“நான் அப்போது 11 -ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அந்த நாட்கள் எங்களுக்கு மிகவும் கடினமானவை. எங்களுக்கு மிகவும் மோசமான, வசைபாடும் தொலைபேசி அழைப்புகள் வந்தன. அதன் காரணமாக, நாங்கள் எங்கள் தந்தையை தொலைபேசியை எடுக்கவே அனுமதிக்கவில்லை” என்று அவர் கூறினார்.

நீதிமன்றத்தில் நடந்தவை:

1968-ல் தனது வழக்கறிஞர் பணியைத் தொடங்கிய அவர், தீர்ப்பு வழங்கப்பட்ட ஜூன் 12, 1975 அன்று நீதிமன்ற அறையில் நேரில் இருந்தவர். "தீர்ப்பைக் கேட்டதும் சிலர் ஆச்சரியப்பட்டனர், சிலரோ அதிர்ச்சியில் உறைந்தனர். இந்திரா காந்தியின் வழக்கறிஞர் எஸ்.சி. கரே, உடனடியாக நிலைமையைச் சமாளிக்க விரைந்தார். அவரது மருமகனும், அவருக்குக் கீழ் பணியாற்றியவருமான வி.என். கரே (பின்னாளில் இந்தியத் தலைமை நீதிபதியானவர்), உடனடியாகத் தனது கையெழுத்திலேயே தடை கோரும் மனுவைத் தயாரித்தார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி சின்ஹா, தனது தீர்ப்புக்கு 20 நாட்கள் இடைக்காலத் தடை விதித்தார்" என்கிறார் அவர்.

Jutice Sinha (extreme left) with Bhimji Narayanrao Lokur (extreme right) and person is Justice Parekh.

காலத்தால் அழியாத தீர்ப்பு:

மூத்த வழக்கறிஞரும், முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலும், தற்போதைய உத்தரப் பிரதேச அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரலுமான அசோக் மேத்தா, இந்தத் தீர்ப்பின் மகத்துவம் குறித்துப் பேசுகிறார். 1980-ல் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர் பணியைத் தொடங்கியவர் இவர்.

“நீதிபதி சின்ஹா மற்றும் நீதிபதி எச்.ஆர். கண்ணா ஆகியோருக்கு இணையாகப் போற்றக்கூடிய நீதிபதிகள் மிகச் சிலரே உள்ளனர். (நெருக்கடி நிலை அமலில் இருந்தபோதும், ஒரு தனிநபரின் வாழ்வுக்கும், தனிப்பட்ட சுதந்திரத்திற்குமான உரிமை மறுக்க முடியாதது என்று தனித்து நின்று தீர்ப்பளித்தவர் நீதிபதி கண்ணா).

எப்போதெல்லாம் தேர்தல் வழக்கு நீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் எங்கள் நினைவுக்கு வரும் முதல் வழக்கு, ராஜ் நரைன் Vs இந்திரா காந்தி வழக்குதான். இதுதான் அலகாபாத் உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த நாங்கள் பெருமைப்பட வேண்டிய விஷயம்” என்கிறார் அவர்.

50 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், நீதிமன்ற அறை எண் 24-ல் நடந்த அந்த வரலாற்று சிறப்புமிக்க நாளுக்குச் சாட்சியாக இருந்தவர்கள் இன்று வெகு சிலரே. இந்தத் தீர்ப்பை வழங்கிய நீதிபதி சின்ஹா, மார்ச் 2008-ல் காலமானார். ஆகஸ்ட் 1996-ல் செய்தியாளருக்கு அளித்த பேட்டி ஒன்றில், அவர் தனது தீர்ப்பின் முக்கியத்துவத்தை மிகவும் சாதாரணமாகவே குறிப்பிட்டிருந்தார். “என்னைப் பொறுத்தவரை, அது மற்றுமொரு வழக்கு போன்றதுதான். தீர்ப்பை வழங்கியவுடன் என் வேலை முடிந்துவிட்டது” என்று அவர் கூறியிருந்தார்.

இருப்பினும், நீதிபதி சின்ஹாவை நெருக்கமாக அறிந்தவர்கள் கூறுவதன்படி, அன்று ஒன்றுக்கும் மேற்பட்ட ‘தீர்ப்புகள்’ தயாராக இருந்தன. நீதிபதி சின்ஹாவின் குடும்ப நண்பரும், மூத்த வழக்கறிஞருமான கோபால் ஸ்வரூப் சதுர்வேதி இதுகுறித்து கூறுகையில், நீதிபதி சின்ஹா 2 உத்தரவுகளைத் தயாரித்து வைத்திருந்தார் என்கிறார். ஒன்று, ராஜ் நரைனின் மனுவை ஏற்கும் உண்மையான உத்தரவு; மற்றொன்று, அந்த மனுவைத் தள்ளுபடி செய்யும் மாற்று உத்தரவு. இந்த வழக்கு உச்சகட்ட கவனம் பெற்றிருந்ததால், 2வது உத்தரவானது ஒரு தந்திரமாகவே தயாரிக்கப்பட்டது. தீர்ப்பை முன்கூட்டியே அறிய முயற்சிப்பதாகக் கூறப்பட்டவர்களை ஏமாற்றித் திசைதிருப்பவே அந்த 2வது போலி உத்தரவு உருவாக்கப்பட்டதாக அவர் குறிப்பிடுகிறார்.

1975 ஆம் ஆண்டு, ஜூன் 12 ஆம் தேதி காலை 10 மணிக்கு, நீதிபதி சின்ஹா அந்த முதல் உத்தரவிலிருந்து தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினார்; அது, இந்திய தேசத்தின் சரித்திரப் போக்கையே மாற்றியமைத்த தீர்ப்பு....

Indira Gandhi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: