Advertisment

பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் திருவள்ளுவர்: சேர்க்கப்பட்ட பின்னணி- முக்கியத்துவம் என்ன?

திருக்குறளை எழுதியதாக கூறப்படும் புலவர், சாதி, மதங்களைக் கடந்து தமிழர்களின் போற்றப்படும் அடையாளமாகத் திகழ்கிறார். திருவள்ளுவரைக் கைப்பற்றுவதற்கான அரசியல் முயற்சிகள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகின்றன.

author-image
WebDesk
New Update
Thiruvalluvar

வெள்ளை உடையில் திருவள்ளுவரின் பொதுவான நவீன சித்தரிப்பு (Wikimedia Commons)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

திருக்குறளை எழுதியதாக கூறப்படும் துறவி - புலவர், சாதி மற்றும் மதங்களைக் கடந்து தமிழர்களின் போற்றப்படும் அடையாளமாகத் திகழ்கிறார். திருவள்ளுவரைக் கைப்பற்றுவதற்கான அரசியல் முயற்சிகள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகின்றன.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Who was Thiruvalluvar, and why has the BJP invoked him in its election manifesto?

மக்களவைத் தேர்தலுக்கான பா.ஜ.க-வின் 'மோடி கி கேரண்டி 2024' என்ற தேர்தல் அறிக்கையில், 'விஷ்வபந்து பாரதத்துக்கு மோடியின் உத்தரவாதம்' என்ற தலைப்பில் கூறப்பட்டுள்ளது:  “பாரதத்தின் செழுமையான கலாச்சாரத்தை வெளிப்படுத்தவும், யோகா, ஆயுர்வேதம், பாரதீய மொழிகள், செவ்வியல் இசை போன்றவற்றை பயிற்சி அளிக்கவும் உலகம் முழுவதும் திருவள்ளுவர் கலாசார மையங்களை நிறுவுவோம். ஜனநாயகத்தின் தாயாக பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பாரதத்தின் வளமான ஜனநாயக மரபுகளை மேம்படுத்துவோம்.” என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளுவரின் புகழுக்கு உரிமை கோரும் முயற்சி பல ஆண்டுகளாக தமிழகத்தில் பா.ஜ.க-வின் அரசியல் நோக்கத்தின் ஒரு பகுதியாக உள்ளது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ம் தேதி முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது.

திருவள்ளுவர் யார்?

திருவள்ளுவரின் வரலாறு உறுதியில்லாதது, அவர் வாழ்ந்த காலகட்டம், அவரது சமய சார்பு போன்றவை விவாதங்களுக்கு உட்பட்டது. சில கணக்கீடுகள் அவரை  கி.பி 3வது அல்லது 4வது நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று குறிப்பிடுகின்றன; மற்றவர்கள் அவரை சுமார் 500 ஆண்டுகளுக்குப் பின்னால், 8 அல்லது 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டுகின்றனர். 

அவர் ஒரு இந்து மற்றும் ஒரு ஜைன முனிவராக அடையாளம் காணப்பட்டார், அதே நேரத்தில் திராவிடக் குழுக்கள் அவரை ஒரு துறவியாகக் கருதுகின்றன, அவருடைய திராவிட வேர்களைத் தவிர வேறு எந்த மத அடையாளங்களும் இல்லை. திருவள்ளுவரால், கூறப்படும் அறநெறிப் கருத்துகளின் தொகுப்பான ‘திருக்குறள்’ அல்லது ‘இரண்டடி குறள்’ அவரை அதன் ஆசிரியராகக் குறிப்பிடவில்லை; 'திருவள்ளுவ மாலை' என்று அழைக்கப்படும் பிற்கால நூல் தொகுப்பில் அவர் பெயர் முதலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'திருக்குறளின்' ஆரம்பகால மொழிபெயர்ப்புகளில் ஒன்றான எட்வர்ட் ஜூவிட் ராபின்சன், புராட்டஸ்டன்ட் மிஷனரி, தமிழ் மெய்யறிவு: இந்து துறவிகளைப் பற்றிய மரபுகள் மற்றும் அவர்களின் எழுத்துக்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை (Tamil Wisdom: Traditions Concerning Hindu Sages and Selections from their Writings) (1873) என்ற புத்தகத்தில், திருவள்ளுவரின் தாய் ‘பறையர்’ என்ற தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்றும் அவரது தந்தை பிராமணராக இருக்கலாம் என்றும் கூறுகிறார். 

“மெட்ராஸ் அருகே மயிலாப்பூரில், சிவபெருமானின் கோவிலுக்கு அடுத்ததாக ஒரு தோப்பில் அவர் குழந்தையாக கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. உயர் அந்தஸ்தில் இருந்த ஒரு வேளாளரின் மனைவி மூலம் குழந்தையை வீட்டிற்கு எடுத்துச் சென்றார், ஆனால், இறுதியில் அவரை ஒரு பறையர் குடும்பத்தின் பராமரிப்பில் ஒப்படைத்தார் என்று கூறுகிறார்.

திருவள்ளுவர் ஏன் முக்கியம்?

தமிழர்களால் வள்ளுவர் என்று அன்புடன் அழைக்கப்படும் திருவள்ளுவர், ஒரு பழங்கால துறவி, கவிஞர் மற்றும் தத்துவஞானி என்று சாதி மற்றும் மதத்தின் எல்லைகளைக் கடந்து தமிழர்களால் போற்றப்படும் ஒரு தமிழ் கலாச்சார மற்றும் தார்மீக அடையாளமாக நீண்ட காலமாகக் கருதப்படுகிறார்.

'திருக்குறள்', 1,330 குறல்களின் தொகுப்பு, ஒவ்வொரு தமிழ் குடும்பத்திலும் இன்றியமையாத பகுதியாக உள்ளது  - அதே போன்று, பகவத் கீதை அல்லது ராமாயணம்/ராமசரிதமனஸ் பாரம்பரிய வட இந்திய இந்து வீடுகளில் உள்ளன. 

Thiruvalluvar
மரபான சைவ திருவள்ளுவர் உருவப்படம். (Wikimedia Commons)

தமிழர்களின் கலாச்சார வேர்களைக் கண்டறிவதில் அவர் ஒரு இன்றியமையாத நங்கூரமாகத் திகழ்கிறார், தமிழர்கள் அவருடைய இரண்டடி குறளைக் கற்கவும், அவருடைய கருத்துக்களை அன்றாட வாழ்வில் பின்பற்றவும் கற்பிக்கப்படுகிறார்கள்.

தமிழ்நாட்டிற்கு அப்பாலும், திருவள்ளுவர் பண்டைய இந்தியாவின் வளமான தத்துவ மரபுகளின் பின்னணியில், ஒழுக்கம் மற்றும் நெறிமுறைகளுடன் அடிக்கடி உச்சரிக்கப்பட்டு குறிப்பிடப்படுகிறார். அடுத்தடுத்து வந்த இந்திய நிதியமைச்சர்கள் தங்கள் ஆண்டு பட்ஜெட் உரைகளில் திருவள்ளுவரைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர்.

சமீப தமிழக அரசியலில் திருவள்ளுவரின் புகழுக்கு உரிமை கோரும் போட்டிகள்

அக்டோபர்-நவம்பர் 2019-ல், தமிழக பா.ஜ.க ஒரு திருவள்ளுவர் படத்தை ட்வீட் செய்ததையடுத்து சர்ச்சை ஏற்பட்டது, அதில் பாரம்பரியமாக அவர் மீது காணப்பட்ட வெள்ளை அங்கி காவி நிறமாக மாற்றப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, திருவள்ளுவர் சிலையைச் சுற்றி காவி சால்வையை அணிவிக்க முயன்ற தீவிர இந்து முன்னணிக் குழுவின் தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சாதி மற்றும் மதத்திற்கு அப்பாற்பட்ட துறவியின் மதிப்புகள் மற்றும் கருத்துக்களை பா.ஜ.க அவமதித்ததாக தி.மு.க மற்றும் இடதுசாரி கட்சிகள் குற்றம் சாட்டின. ஆனால், அப்போது பா.ஜ.க-வின் தேசியச் செயலாளராக இருந்த எச்.ராஜா, திருவள்ளுவர் உண்மையில் ஒரு இந்து மகான் என்றும், கடவுளை நம்பாத திராவிடக் கட்சிகள் அவரது ஆளுமையைச் சுற்றியுள்ள இந்து அடையாளங்களை பல ஆண்டுகளாக அழித்துவிட்டதாகவும் வாதிட்டார்.

“ஒரிஜினல் திருவள்ளுவருக்கு விபூதி மற்றும் அனைத்து இந்து சின்னங்களும் இருந்தன. திராவிடர் கழகமும், தி.மு.க-வும்தான் அரசியல் ஆதாயங்களுக்காகத் அவரது தோற்றத்தை மாற்றிவிட்டது” என்று அந்த நேரத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறிய ராஜா, துறவியின் குறள்களும் வாழ்க்கையும் சனாதன தர்மத்தைப் போலவே இருப்பதாக வாதிட்டார்.

இரு தரப்பு அரசியல் உரிமை கோரல்களுக்கு அப்பால், இந்த சண்டையை எப்படி புரிந்து கொள்வது?

பண்டைய தமிழ் வரலாற்றில் நிபுணத்துவம் பெற்ற சென்னை ஐ.ஐ.டி-யின் ஓய்வுபெற்ற பேராசிரியர் எஸ். சுவாமிநாதன், அந்த நேரத்தில் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்: “திருவள்ளுவரின் வாழ்வில் எஞ்சியிருக்கும் சிறிய ஆதாரங்களில் இருந்து, பல அறிஞர்கள் பெரும்பாலும் அவர் ஒரு சமண மதத்தைச் சேர்ந்தவர், இந்துவும் இல்லை திராவிடரும் என்று முடிவு செய்துள்ளனர்.

இந்திய வரலாற்றிலோ அல்லது பண்டைய இலக்கியங்களிலோ எந்த ஒப்பீடும் இல்லாத அவரது அசாதாரண இலக்கியமான திருக்குறளால் மட்டுமே நாம் அவரைக் கண்டறிய முடியும். ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர் திராவிடக் குழுக்களாலும், இப்போது இந்துத்துவாக் குழுக்களாலும் திருவள்ளுவரைக் கைப்பற்றுவதற்கான அரசியல் முயற்சிகள் பல ஆண்டுகளாகத் தொடர்கின்றன என்று சுவாமிநாதன் கூறினார். “திருவள்ளுவர் வெள்ளை உடையில் இருக்கும் படம் என்று சொல்லப்படுவது சமீபகால கற்பனை. திருவள்ளுவரின் உருவமோ படமோ (ஆரம்பத்தில்) இல்லை.” திருக்குறள் ஒருவரால் இயற்றப்பட்டதா அல்லது பல வருடங்களாக பல அறிஞர்களின் படைப்புகளின் தொகுப்பா என்பது கூட நமக்குத் தெரியாது. இயேசுவைப் போலவே திருவள்ளுவரின் உருவத்தை அவர் இறந்து பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கினோம்” என்றார் பேராசிரியர் சுவாமிநாதன்.

மார்ச் 2017-ல் கோவை அருகே ஆர்.எஸ்.எஸ்., தேசிய கவுன்சில் கூட்டம் நடத்திய பிறகு, சங்பரிவார் தனது அரசியல் இலக்கியங்களில் தமிழ் துறவிகளின் படங்களையும் பயன்படுத்த முயன்றது. அடிமட்டத்தில் அவர்களின் ஒப்பீட்டளவில் மெல்லிய இருப்பு தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க-வுக்கு ஒரு குறைபாடாக இருந்து வருகிறது. மேலும் தமிழ் துறவிகள் மற்றும் படங்களைப் பொருத்திக்கொள்வது அல்லது  தன்வயப்படுத்தும் முயற்சிகள் சங்பரிவாரத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.

இந்த செய்தி விளக்கக் கட்டுரை நவம்பர் 4 மற்றும் நவம்பர் 9, 2019-ல் முதலில் வெளியிடப்பட்ட 2 முந்தைய செய்தி விளக்கக் கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Thiruvalluvar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment