/tamil-ie/media/media_files/uploads/2023/05/CCTV-footage-purportedly-shows-that-when-Tajpuriya-was-being-stabbed-the-police-personnel-did-not-act-in-time..jpg)
Suspended after Tajpuriya murder: Why Tamil Nadu cops were deployed at Tihar jail
கடந்த வாரம் புதுடெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுனில் பல்யான் @ தில்லு தாஜ்பூரியா என்ற கிரிமினல் கைதிகளால் கொல்லப்பட்டதை அடுத்து, சிறையில் நிறுத்தப்பட்டிருந்த தமிழ்நாடு சிறப்புப் படை அதிகாரிகளின் பங்கு விசாரணைக்கு உள்ளானது.
தாஜ்பூரியா கத்தியால் குத்தப்பட்ட நிலையில், போலீசார் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை சிசிடிவி காட்சிகள் காட்டுகிறது.
இந்த சம்பவம் குறித்து டெல்லி சிறைத்துறை தலைமை இயக்குனர், தமிழ்நாடு சிறப்பு படை தலைமை இயக்குனருக்கு கடிதம் எழுதினார், அதன் பிறகு ஞாயிற்றுக்கிழமை படை, ஏழு அதிகாரிகளை இடைநீக்கம் செய்து அவர்களை மீண்டும் மாநிலத்திற்கு அழைத்தது.
தற்போது, ​​திகார் சிறையில் உள்ள கைதிகளுக்கு பாதுகாப்பாக தமிழ்நாடு சிறப்புப் படையைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட அதிகாரிகள் உள்ளனர். அவர்கள் சிறை வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கோபுரங்கள் உட்பட அனைத்து வார்டுகளிலும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கான பதில் 1976 ஆம் ஆண்டு சிறை உடைப்பில் உள்ளது, அது டெல்லிக்கு பெரும் சங்கடமாக இருந்தது.
நீதிமன்றங்களால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 13 கைதிகள், சிறை வளாகத்தின் எல்லைச் சுவருக்குக் கீழே சுரங்கம் தோண்டி, மார்ச் 1976 இல் தப்பினர்.
பதிவேடுகளை சரிபார்த்தபோது, ​​குற்றவாளிகள் அனைவரும் ஹரியானாவை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அப்போது, ​​பெரும்பாலான சிறை ஊழியர்களும், கண்காணிப்பாளரும் அதே மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.
எனவே கைதிகள் தப்பிக்க அதிகாரிகள் உடந்தையாக இருப்பது குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டன, என்று 1981 மற்றும் 2016 க்கு இடையில் திஹாரின் சட்ட அதிகாரி மற்றும் செய்தித் தொடர்பாளராக இருந்த சுனில் குப்தா கூறினார்.
அப்போது கைதிகளுக்கும் காவலர்களுக்கும் இடையே இடைவெளியை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உணரப்பட்டது.
திகாரில் உள்ள பெரும்பாலான கைதிகள் டெல்லி, ஹரியானா, உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், மத்திய அரசிடம் தலையிட்டு வேறு மாநிலத்திலிருந்து, குறிப்பாக இந்தி மற்றும் அதன் பேச்சுவழக்குகள் அதிகம் பேசப்படாத மாநிலத்திலிருந்து பணியாளர்களை வழங்குமாறு கோரிக்கை விடுக்க முடிவு செய்யப்பட்டது, என்று பெயர் வெளியிட விரும்பாத முன்னாள் திகார் சிறை அதிகாரி கூறினார்.
இதே போன்ற காரணங்களுக்காக, தேர்தலை நடத்துவதற்கு பிற மாநிலங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
உதாரணமாக, வரவிருக்கும் கர்நாடக தேர்தலுக்கு, தகுதி நிலவரத்தின் மதிப்பீட்டின் அடிப்படையில், மற்ற மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட மத்திய ஆயுதப் போலீஸ் படைகள் (CAPFs) மற்றும் மாநில ஆயுதப்படை போலீஸார் (SAP) தேர்தலின் போது பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று பிரஸ் இன்பர்மேஷன் பீரோவின் (PIB) செய்திக் குறிப்பு கூறுகிறது.
திஹார் சிறைக்கு தமிழ்நாடு அதிகாரிகள் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது?
இந்த முடிவில் டெல்லிக்கு எந்த சம்பந்தமும் இல்லை. அதிகாரிகள் பிரச்சினையை விளக்கி, வேறு மாநிலத்திலிருந்து ஒரு படையை வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர், இறுதி முடிவை எடுக்கும்போது படைகளின் இருப்பு, ஒழுக்கம் மற்றும் செயல்திறன் போன்ற காரணிகள் மனதில் வைக்கப்பட்டிருக்கும் என்று குப்தா கூறினார்.
1980 களின் முற்பகுதியில் தமிழ்நாடு சிறப்புப் படையின் முதல் குழு அதிகாரிகள் திஹாரில் இணைந்தனர்.
இருப்பினும், தமிழ்நாடு சிறப்புப் படை மட்டும் திகாரில் நிறுத்தப்பட்ட ஒரே பாதுகாப்பு ஏஜென்சி அல்ல. மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRFP) மற்றும் சிறை ஊழியர்களும் இங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
அதிகாரிகள் வழக்கமாக திகார், ரோகினி மற்றும் மண்டோலி என ஒரு சிறையிலிருந்து மற்றொரு சிறைக்கு மாற்றப்படுவதாகவும் – மேலும் பலர் டெல்லி சிறைகளில் சுமார் இரண்டு ஆண்டுகள் பணியாற்றுவதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.
இருப்பினும், சமீப ஆண்டுகளில், திகாரில் கூட்டுச் சதி பற்றிய கேள்விகள் இன்னும் எழுப்பப்படுகின்றன. ஏப்ரலில் குண்டர் அரசன் தெவதியா கொலை மற்றும் சுகேஷ் சந்திரசேகர் வழக்கில் லஞ்சப் புகார்கள் போன்ற ஊழல் மற்றும் வன்முறை வழக்குகள் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.