Advertisment

திருநங்கைகள், ஆண் ஓரினச் சேர்க்கையாளர், பெண் பாலியல் தொழிலாளர்கள் ரத்த தானம் செய்யக் கூடாது: மத்திய அரசு

ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் மற்றுப் பாலினத்தவர்கள் ரத்த தானம் செய்ய உள்ள தடையை நீக்கக் கோரிய மனுவுக்கு பதிலளித்து, மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் “இந்த விலக்கு அறிவியல் சான்றுகளின் சரியான பரிசீலனையின் அடிப்படையிலானது” என்று கூறியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
LGBTQ, trans, gays, blood donation, Centre, Thangjam Singh, Indian Express, Express Explained

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், மாற்றுப் பாலினத்தவர்கள், ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் பெண் பாலியல் தொழிலாளர்களை இரத்த தானம் செய்பவர்களாக எச்.ஐ.வி.க்கான ஆபத்தான பிரிவில் சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசு சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஹெபடைடிஸ் பி அல்லது சி நோய்த்தொற்றுகள் அறிவியல் சான்றுகளின் சரியான பரிசீலனையை அடிப்படையாகக் கொண்டது.

Advertisment

“அக்டோபர் 11, 2017-ல் தேசிய ரத்த மாற்று கவுன்சில் (என்.பி.டி.சி) மற்றும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு பிறப்பித்த, ரத்த தானம் செய்பவர்களை தேர்வு செய்வது மற்றும் இரத்த தானம் செய்பவர்களை பரிந்துரை செய்வதற்கான வழிகாட்டுதல்கள், 12 மற்றும் 51-வது பிரிவின் கீழ் ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் மாற்றுப் பாலினத்தவர்கள் ரத்த தானம் செய்ய உள்ளத் தடையை நீக்கக் கோரி மாற்றுப் பாலினத்தவர்கள் சமூகத்தைச் சேர்ந்த தங்கஜம் சிங் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததை அடுத்து மத்திய அரசின் இந்த பதில் வந்துள்ளது.

2017 வழிகாட்டுதல்கள் என்ன கூறுகிறது?

ஜூன் 1, 2017-ல் என்.பி.டி.சி-யின் நிர்வாகக் குழு அதன் 26-வது கூட்டத்தில், தேவைப்படுபவர்களுக்கு பாதுகாப்பான, போதுமான மற்றும் சரியான நேரத்தில் ரத்தம் மற்றும் ரத்தக் கூறுகளை வழங்குவதற்கான ரத்தமாற்ற சேவையைக் கொண்டுவருவதற்கான வழிகாட்டுதல்களுக்கு ஒப்புதல் அளித்தது. வழிகாட்டுதல்கள் பி.டி.எஸ்-இல் சிறந்த நடைமுறைகளை ஊக்குவிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. இது சாத்தியமான மிகக் குறைவான ஆபத்துள்ள ரத்தக் கொடையாளர்களிடமிருந்து ரத்தம் பெறுவதை உறுதிப்படுத்துகிறது.

தற்போதைய வழக்கில், வழிகாட்டுதல்களின் 12 மற்றும் 51-வது பிரிவுகள் இந்திய அரசியலமைப்பின் 14, 15 மற்றும் 21-வது பிரிவுகளை மீறுவதாகக் கூறி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த பிரிவுகள் மாற்றுப் பாலினத்தவர், ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்கள் மற்றும் பெண் பாலியல் தொழிலாளர்களை ரத்த தானம் செய்யும் ரத்தக் கொடையாளர்களில் இருந்து விலக்குகிறது.

‘ஆபத்தான நடத்தை’ என்ற தலைப்பில் உள்ள வழிகாட்டுதல்களின் பிரிவு 12, ‘ரத்தக் கொடையாளர் தேர்வு அளவுகோல்களின்’ கீழ் வருகிறது. ரத்தம் செலுத்துவதன் மூலம் பரவக்கூடிய எந்தவொரு உறுதியான நோயிலிருந்தும் ரத்தக் கொடையாளர் விலக்கப்பட வேண்டும். ‘எச்.ஐ.வி, ஹெபடைடிஸ் பி அல்லது சி ஆகியவற்றால் ஆபத்தில் இருக்கும் நபராக இருக்கக்கூடாது. மாற்றுப் பாலினத்தவர், ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள், பெண் பாலியல் தொழிலாளர்கள், போதை ஊசி போட்டுக்கொள்பவர்கள், பல பேருடன் உறவு வைத்துக்கொள்பவர்கள், அல்லது வேறு ஏதேனும் நோய்த்தொற்றுகளால் அதிக ஆபத்தில் இருப்பவர்கள் போன்றவர்கள் இரத்த தானம் செய்வதற்கான அவர்களின் தகுதியை மருத்துவ அதிகாரி தீர்மானிக்கிறார்.

மேலும், பிரிவு 15 ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் மாற்றுப் பாலினத்தவர் உட்பட எச்.ஐ.வி தொற்றுக்கான ஆபத்தில் உள்ளவர்களை ரத்த தானம் செய்வதிலிருந்து நிரந்தரமாக ஒதுக்கிவைக்கிறது. நிரந்தரமாக ஒதுக்கி வைப்பது என்பது ரத்த தானம் செய்ய அனுமதிக்கப்படாதவர்கள் எனக் குறிக்கிறது.

தற்போதைய வழக்கு எதைப் பற்றியது?

மாற்றுப் பாலினத்தவர்கள் மற்றும் ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் இரத்த தானம் செய்வதைத் தடுக்கும் 2017-ம் ஆண்டு வழிகாட்டுதல்களின் அரசியலமைப்புச் செல்லுபடியை எதிர்த்து மணிப்பூரைச் சேர்ந்த திருநங்கைகள் உரிமை ஆர்வலர் ஒருவர் 2021-ல் தங்ஜம் சாந்தா சிங் எதிரி இந்திய அரசு என்ற பெயரில் தற்போதைய பொதுநல மனுவைத் தாக்கல் செய்தார்.

“ஒருவரின் பாலின அடையாளம் மற்றும் பாலியல் நோக்குநிலை ஆகியவற்றின் அடிப்படையில் இத்தகைய விலக்கு முற்றிலும் தன்னிச்சையானது, நியாயமற்றது, பாரபட்சமானது, அறிவியலுக்குப் புறம்பானது” என்று தங்ஜம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும், இந்த மனு கூறுகிறது: எய்ட்ஸ்/எச்ஐவி, ஹெபடைடிஸ் சி மற்றும் பி போன்ற தொற்று நோய்களுக்கு ரத்தம் பரிசோதிக்கப்படுவதால், அவர்களின் பாலியல் விருப்பத்தின் அடிப்படையில் நபர்களை நிரந்தரமாக விலக்குவது அவர்களின் சமத்துவத்திற்கான உரிமையை மீறுவதாகும என்று கூறுகிறது.

கோவிட்-19 தொற்று பரவலின்போது, நவ்தேஜ் ஜோஹர் & நல்சா (NALSA) வழக்குகளில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு முரணான வழிகாட்டுதல்கள் காரணமாக, ரத்தம் தேவைப்படும் பலர் தங்கள் மாற்று உறவினர்கள் அல்லது அன்புக்குரியவர்களிடமிருந்து ரத்தத்தைப் பெற முடியவில்லை.

நல்சா வழக்கில், 15 மற்றும் 16-வது பிரிவுகளின் கீழ் பாலின அடிப்படையில் பாகுபாடு காட்டுவது பாலின அடிப்படையில் பாகுபாடுகளை உள்ளடக்கும் என்று நீதிமன்றம் கூறியது. “எங்கள் பார்வையில் பாலின அடையாளம் என்பது பாலினத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். மேலும், மூன்றாம் பாலினமாக அடையாளப்படுத்துபவர்கள் உட்பட பாலின அடையாளத்தின் அடிப்படையில் எந்தவொரு குடிமகனும் பாகுபாடு காட்ட முடியாது” என்று நீதிமன்றம் கூறியது.

இதற்கிடையில், நவ்தேஜ் சிங் வழக்கில், எல்.ஜி.பி.டி நபர்கள் 'பிடிக்கப்படாதவர்கள் என்ற நிழலில் இருந்து விடுபடாமல் வாழத் தகுதியானவர்கள் என்று நீதிமன்றம் கூறுகிறது. வயது வந்தோரின் சம்மதத்துடன் தனிப்பட்ட முறையில் பாலியல் செயல்களை குற்றமாகக் கருதும் பிரிவு 377, அரசியலமைப்பின் கட்டுரைகள் 14, 15, 19 மற்றும் 21-ஐ மீறுவதாக அறிவித்தது.

எனவே, எச்.ஐ.வி-யின் உண்மையான ஆபத்தை ஆய்வு செய்யாமல் இந்த நபர்களை விலக்குவது 14 மற்றும் 15-வது பிரிவுகளின் கீழ் பாகுபாடு காட்டுவதாகும். மேலும், புரிந்துகொள்ளக்கூடிய வேறுபாடுகளின் சோதனையை சந்திக்கவில்லை என்று இந்த மனு வாதிடுகிறது.

இவர்களை விலக்குவதற்கான அரசாங்கத்தின் வாதம் எதை அடிப்படையாகக் கொண்டது?

ரத்த தானம் செய்வதில் இருந்து மாற்றுப் பாலினத்தவர்கள் மற்றும் ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் விலக்கப்படுவது அறிவியல் சான்றுகளின் அடிப்படையிலானது என்றும், “திருநங்கைகள், ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்கள் மற்றும் பெண் பாலியல் தொழிலாளர்களுக்கு எச்.ஐ.வி தொற்று மற்றும் ஹெபடைடிஸ் பி அல்லது சி தொற்றுகள் ஏற்படுவதற்கான ஆபத்து உள்ளது என்பதற்கு கணிசமான சான்றுகள் உள்ளன” என்றும் அரசு தனது பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது. இதை, மேலும் வலுப்படுத்தும் வகையில், சர்வதேச சமூக மருத்துவம் மற்றும் பொது சுகாதார இதழ் மற்றும் எஸ்.டி.டி & எய்ட்ஸ் -ன் இன்டர்நேஷனல் ஜர்னல் போன்ற உள்ளூர் மற்றும் சர்வதேச "புகழ்பெற்ற அறிவியல் இதழ்களின் ஆராய்ச்சியை இந்த பிரமானப்பத்திரம் மேற்கோள் காட்டுகிறது.

ஹிஜ்ராக்கள், ஆண்களுடன் உறவுகொள்ளும் ஆண்கள் (எம்.எஸ்.எம்) மற்றும் பெண் பாலியல் தொழிலாளர்கள் ஆகிய வயது வந்தவர்களிடையே எச்.ஐ.வி பாதிப்பு 6 முதல் 3 மடங்கு அதிகமாக இருப்பதாக சுகாதார மற்றும் குடும்ப நலத் துறையின் (2020-2021) ஆண்டு அறிக்கையை மத்திய அரசு குறிப்பிடுகிறது.

எச்.ஐ.வி மற்றும் பிற பரவுதல் மூலம் பரவும் நோய்த்தொற்றுகள் அதிகம் உள்ள மக்கள்தொகைக் குழுக்களைப் பொறுத்தவரை ரத்த தானம் செய்பவர்களுக்கான கட்டுப்பாடுகள் உலகம் முழுவதும் இருப்பதாக இந்த பிரமானப்பத்திரம் வாதிடுகிறது. உதாரணமாக, பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் பாலுறவு செயலில் உள்ள ஆண்களுடன் உறவு கொள்ளும் ஆண்கள் ரத்த தானம் செய்வதிலிருந்து நிரந்தரமாக ஒதுக்கி வைக்கின்றன. ஐரோப்பிய ஆண்கள்-ஆண்களுடன் உடலுறவு கொள்ளும்-இன்டர்நெட் சர்வே (EMIS) கணக்கெடுப்பை நம்பி மத்திய அரசு கூறியுள்ளது.

தொற்று நோய்களுக்கான பரிசோதனையைப் பொருட்படுத்தாமல் நடைபெறுகிறது என்ற மனுதாரரின் வாதத்திற்கு பதிலளிக்கும் விதமாக, இந்த பிரமாணப் பத்திரம், “நியூக்ளிக் அமில சோதனை (NAT) போன்ற சிறந்த சோதனைகளுடன் கூடிய காலத்தை சுட்டிக்காட்டியது. முகவர் மற்றும் நோய்த்தொற்றுகளைக் கண்டறியும் சோதனை, சோதனைத் தொழில்நுட்பத்தில் உள்ள வரம்புகள் காரணமாக நோய்த்தொற்றைக் கண்டறிய முடியாமல் போகலாம்.” என்று கூறியுள்ளது.

இறுதியாக, இத்தகைய சிக்கல்கள் நிர்வாகத்தின் வரம்பிற்குள் வரும் என்றும் தனிநபர் உரிமைக் கண்ணோட்டத்திற்கு மாறாக பொது சுகாதாரக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்றும் மத்திய அரசு வாதிட்டது. “பாதுகாப்பான ரத்தமாற்றத்தைப் பெறுவதற்கான பெறுநரின் உரிமை, ரத்த தானம் செய்வதற்கான தனிநபரின் உரிமையை விட அதிகமாக உள்ளது” என்று மத்திய அரசின் பிரமாணப் பத்திரம் கூறியுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Transgenders
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment