Advertisment

ஜாலியன் வாலாபாக் படுகொலை: ஓ டயரை பழிதீர்த்த உத்தம் சிங் நினைவு தினம்; பஞ்சாப் அரசு வாக்குறுதிகள் என்ன?

ஜாலியன் வாலாபாக் படுகொலையில் இருந்து தப்பியவர் உத்தம் சிங். அவர் முன்னாள் பஞ்சாப் லெப்டினன்ட் கவர்னர் ஓ டயருக்கு எதிராக பழிவாங்க திட்டமிட்டு அவரை 1940-ல் படுகொலை செய்தார். அவரது உடைமைகள் பல லண்டன் மற்றும் பிற இடங்களில் தொடர்ந்து உள்ளன. மேலும், அவற்றை பஞ்சாபில் உள்ள அவரது நினைவிடத்திற்கு கொண்டு வர கோரிக்கை எழுந்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
udham singh

உத்தம் சிங், ஷேர் சிங் என்ற பெயரில் டிசம்பர் 26, 1899 அன்று சங்க்ரூர் மாவட்டத்தில் உள்ள சுனம் நகரில் பிறந்தார். சுனமில் உள்ள அவரது நினைவுச்சின்னம் இங்கே படத்தில் உள்ளது. (Express photo)

ஜூலை 31, 1940-ல், பஞ்சாப்பின் முன்னாள் லெப்டினன்ட் கவர்னரான மைக்கேல் ஓ டயரைக் கொன்றதற்காக இந்தியப் புரட்சித் தலைவர் உத்தம் சிங் லண்டனில் உள்ள பென்டன்வில்லி சிறையில் தூக்கிலிடப்பட்டார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: On the 85th death anniversary of Udham Singh, a look at Punjab govt’s promises to memorialise him

1919-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஜாலியன் வாலாபாக் படுகொலையில் உயிர் பிழைத்தவர்களில் ஒருவரான உத்தம் சிங், ஓ டயருக்கு எதிராக பழிவாங்க திட்டமிட்டு மார்ச் 13, 1940-ல் அவரை படுகொலை செய்தார். அமிர்தசரஸ் பூங்காவில் கூடியிருந்த இந்தியர்களின் கூட்டத்தின் மீது பிரிட்டிஷ் பிரிகேடியர் ரெஜினால்ட் டயர் துப்பாக்கியால் சுட்டார். வெளியேறும் வழிகளைத் அடைக்க துருப்புக்களுக்கு கட்டளையிட்டதால், 1,000 க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் உயிர்களை இழந்தனர், 1,200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

உத்தம் சிங் பஞ்சாப்பில் ஒரு அடையாளமான நபராக மாறினார். அவரது நினைவாக நினைவிடங்கள் அமைப்பதாகவும், சிலைகள் அமைப்பதாகவும் பல ஆண்டுகளாக அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளித்து வருகின்றன. சில முக்கிய அறிவிப்புகள் மற்றும் அவை இன்று எந்த நிலையில் உள்ளன என்பதை இங்கே பார்க்கலாம்.

உத்தம் சிங் பிறந்த இடம்

உத்தம் சிங், ஷேர் சிங் என்ற பெயரில் டிசம்பர் 26, 1899-ல் சங்க்ரூர் மாவட்டத்தில் உள்ள சுனம் நகரில் பிறந்தார். அவர் சிறுவனாக இருந்தபோது அவரது பெற்றோர் இறந்துவிட்டனர். பின்னர், உத்தம் சிங்கின் மாமா அவரையும் அவரது மூத்த சகோதரரையும் அமிர்தசரஸில் உள்ள மத்திய கல்சா அனாதை இல்லத்தில் வாழ அனுப்பினார். அங்கு அவர்கள் இருவருக்கும் புதிய பெயர்கள் வழங்கப்பட்டன. 1917-ல், அவரது சகோதரர் முக்த் சிங் நோய்வாய்ப்பட்டு இறந்தபோது மீண்டும் சோகம் ஏற்பட்டது.

சுனமில் சிங்கின் ஒரு அறை தங்கும் மூதாதையர் வீடு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.இப்போது தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது. அதில் அவர் மற்றும் பிற புரட்சியாளர்கள் பற்றிய இலக்கியங்கள் மற்றும் அவரது சில புகைப்படங்கள் உள்ளன. இருப்பினும், இது வார இறுதி நாட்களில் மூடப்படும்.

udham singh memo
உத்தம் சிங்கின் மூதாதையர் வீடு. (Express photo)

 

மேலும், சுனமில் 4 ஏக்கர் நிலத்தில் 2.61 கோடியில் உத்தம் சிங்கிற்கு நினைவிடம் கட்டப்பட்டது. டிசம்பர் 26, 2016-ல் உத்தம் சிங்கின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், அப்போதைய பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் அடிக்கல் நாட்டினார். இந்த நினைவகம் 2021 அக்டோபர் 31-ம் தேதி அப்போதைய முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கால் திறந்து வைக்கப்பட்டது.

நகரத்தில் சிங்கின் சில சிலைகள் உள்ளன. ஒரு அரசு கல்லூரிக்கும் அவரது பெயர் சூட்டப்பட்டது. சுனம் சட்டமன்றத் தொகுதியானது சுனம் உத்தம் சிங் வாலா என்றும் அழைக்கப்படுகிறது.

1974-ல், உத்தம் சிங்கின் நினைவுப் பொருட்கள் இங்கிலாந்தில் தோண்டி எடுக்கப்பட்டு இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டன. பஞ்சாப் முதல்வர் ஜெய்ல் சிங்கும் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டதாக நம்பப்படுகிறது. உத்தம் சிங்கின் தகனம் சுனாமில் செய்யப்பட்டது. ஆகஸ்ட் 2, 19740ல், அவரது அஸ்தி ஹரித்வார், கிராத்பூர் சாஹிப், ரைசா ஷெரீப், ஜாலியன் வாலாபாக் அருங்காட்சியகம், சுனம் மற்றும் சுனமில் உள்ள ஷாஹீத் உத்தம் சிங் அரசுக் கல்லூரி நூலகத்திற்கு அனுப்பப்பட்ட ஏழு கலசங்களுக்கு இடையே பிரிக்கப்பட்டது. 

நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்

சுனமில் உத்தம் சிங்கின் 4 சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. அவை அனைத்தும் வெவ்வேறு முகங்களை சித்தரிப்பதாக பல உள்ளூர் அமைப்புகள் கூறுகின்றன. மேலும், கலசங்கள் வைக்க தனி இடம் இருந்தும், கல்லுாரி நூலகத்தில் வைக்கப்பட்டு, விழா நடக்கும் போது மட்டுமே, நினைவிடத்திற்கு கொண்டு வரப்படுகின்றன. அமிர்தசரஸில் உள்ள குருநானக் தேவ் பல்கலைக்கழகத்தில் உத்தம் சிங்கின் சில கடிதங்களும் நினைவிடத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

“2021-ம் ஆண்டு நினைவிடம் திறக்கப்பட்ட பிறகு, நாங்கள் ஆம் ஆத்மி அரசாங்கத்திடம் இந்த கோரிக்கையை முன்வைத்து வருகிறோம். ஆனால் இந்த திசையில் எதுவும் செய்யப்படவில்லை” என்று உத்தம் சிங் பற்றிய புத்தகத்தை எழுதியவரும் வரலாற்றாசிரியருமான ராகேஷ் குமார் கூறினார். லண்டனில் இருந்து உத்தம் சிங்கின் கைத்துப்பாக்கி மற்றும் அவரது பிற பொருட்களை திரும்ப கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு, உத்தம் சிங் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், “லண்டனில் இருந்து ஷாஹீத் உத்தம் சிங்கின் தனிப்பட்ட உடமைகளை திரும்பக் கொண்டுவர அரசாங்கம் கடுமையான முயற்சிகளை மேற்கொள்ளும். இந்த செயல்முறையை விரைவுபடுத்த மாநில அரசு சம்பந்தப்பட்ட அனைத்து தளங்களிலும் இந்த விஷயத்தை எழுப்பும் என்று கூறினார்.

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபி புரட்சித் தலைவர் ஷஹீத் பகத்சிங்குடன் தொடர்புடைய பொருட்களும் நாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார். மேலும், புரட்சியாளர்களுக்கு பாரத ரத்னா விருதை முதல்வர் கேட்டு வந்தார். இருப்பினும், காத்ரி உத்தம் சிங் விசார் மஞ்ச் போன்ற அமைப்புகள், அவரது உடமைகளை நினைவிடத்திற்கு மாற்றுவது குறித்து உள்ளூர் அளவிலான நடவடிக்கைகள் கூட இதுவரை எடுக்கப்படவில்லை என்று குறிப்பிடுகின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Punjab
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment