Advertisment

பகத் சிங் பற்றி பேசுவதோடு மட்டும் இந்தியா நிறுத்திக் கொண்டது ஏன்?

புரட்சியாளர் பகத் சிங் உருவப்படம் குறித்த சர்ச்சை; அவரின் கருத்துக்களை கண்டுக் கொள்ளாமல், அவரைப் பற்றி பேசுவதோடு மட்டும் இந்தியா நிறுத்திக் கொண்டது ஏன்?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பகத் சிங் பற்றி பேசுவதோடு மட்டும் இந்தியா நிறுத்திக் கொண்டது ஏன்?

கட்டுரை: சமன் லால்

Advertisment

Unseeing Bhagat Singh: Why India has stopped at only talking about him: புரட்சியாளர் பகத் சிங்கின் நான்கு உண்மையான புகைப்படங்களை விட, அமர் சிங்கின் ஓவியத்தை அடிப்படையாக கொண்ட, பகத் சிங்கின் உருவத்தை, தனது அலுவலகங்களில் காண்பிக்கும் பஞ்சாப் அரசின் முடிவு, பல ஆண்டுகளாக இந்திய அரசாங்கங்கள் தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு மார்ச் 23 அன்று ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட அந்த மாவீரனை கடைப்பிடித்த அணுகுமுறையை விளக்குகிறது.

சமூக ஊடகங்கள் மற்றும் அரசியல் உரையாடல்களில் அடிக்கடி பயன்படுத்தப்படும் படம் மற்றும் படங்கள் தேசத்திற்காக தனது உயிரைக் கொடுத்தபோது 23 வயதாக இருந்த பகத் சிங்கின் இணையற்ற துணிச்சல் மற்றும் அச்சமின்மையைச் சுற்றியுள்ள நாட்டுப்புறக் கதைகளில் வேரூன்றிய சில அன்பு சார்ந்த ஸ்டீரியோடைப்களிலிருந்து பெறப்பட்டது.

சுதந்திரத்திற்கு முன்: கலவையான விமர்சனங்கள்

பகத் சிங் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட1929 முதல் ​​1931 வரை, பகத் சிங்கின் நீதிமன்ற அறிக்கைகள் மற்றும் சிறந்த சிறை நிலைமைகளுக்காக உண்ணாவிரதம் குறித்த செய்திகள் மற்றும் படங்கள், இந்தியா முழுவதும் பல மொழிகளில் பரவலாக செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டன. ஆனால், அவர் தூக்கிலிடப்பட்ட பிறகு, பகத்சிங்கின் சொந்த எழுத்துக்களை மறந்து போனோம்.

1931 மற்றும் 1936 க்கு இடையில், இந்தி, தமிழ், உருது, ஆங்கிலம், பஞ்சாபி மற்றும் பிற மொழிகளில் பகத் சிங் குறித்த கிட்டத்தட்ட 100 புத்தகங்கள் உட்பட குறைந்தது 200 கட்டுரைகள் தடைசெய்யப்பட்டது. அவற்றில் பல பகத்சிங்கின் தோழர்கள் மற்றும் சமகாலத்தவர்கள் மற்றும் அவரை தனிப்பட்ட முறையில் அறிந்த நபர்களால் எழுதப்பட்டவை. இந்த எழுத்தாளர்களில் சிலர் தண்டிக்கப்பட்டனர்; லாகூர் சதி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட ஜிதேந்திர நாத் சன்யால், பகத்சிங்கின் வாழ்க்கை வரலாற்றை எழுதியதற்காக இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.

publive-image

பகத் சிங் தூக்கிலிடப்பட்ட பிறகு, பகத் சிங்கைப் புகழ்ந்த முதல் பெரிய ஆளுமை, பிராமண எதிர்ப்பு சுயமரியாதை இயக்கத்தின் நிறுவனர் ஈ.வி. ராமசாமி நாயக்கர் (தந்தை பெரியார்) ஆவார், அவர் மார்ச் 29, 1931 இல் தனது குடி அரசு இதழில் பகத் சிங் குறித்து தலையங்கம் எழுதினார். சில மாதங்களுக்குப் பிறகு, 1930 ஆம் ஆண்டு பகத் சிங்கால் எழுதப்பட்டு, செப்டம்பர் 27, 1931 ஆம் ஆண்டு தி பீப்பிள் ஆஃப் லாகூர் இதழில் வெளியான பகத்சிங்கின் ‘நான் ஏன் நாத்திகன்’ என்ற கட்டுரையை பெரியார் பெற்றார். இந்தக் கட்டுரையின், ஜீவானந்தம் அவர்களின் தமிழாக்கம் 1934 இல் குடி அரசு இதழில் வெளியானது.

டாக்டர் பி ஆர் அம்பேத்கர் அந்த நேரத்தில் தனது மராத்தி செய்தித்தாள் ஜந்தாவில், பகத் சிங் மறைவு குறித்து சிறிய தலையங்கம் எழுதினார், மேலும் காந்தி, நேரு, சர்தார் படேல், சுபாஷ் சந்திர போஸ் மற்றும் மதன் மோகன் மாளவியா உள்ளிட்ட தேசிய இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் பத்திரிகை அறிக்கைகள் மூலம் அஞ்சலி செலுத்தினர்.

சுவாரஸ்யமாக, பகத் சிங்கின் உயிரைக் காப்பாற்ற முடியாமல் போனதற்காக நௌஜவான் பாரத் சபாவின் செயல்பாட்டாளர்களிடமிருந்து காந்தி கராச்சியில் கருப்பு மலர்களை ஏற்றுக்கொண்டார், பகத் சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவ் ஆகியோரின் தியாகத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் காங்கிரஸ் தீர்மானம் தடைகளை எதிர்கொண்டது. காந்தியின் விருப்பப்படி, நேருவால் முன்வைக்கப்பட்டு மற்றும் மதன் மோகன் மாளவியாவால் ஆதரிக்கப்பட்ட தீர்மானம், பகத்சிங்கிற்கு அஞ்சலி செலுத்தியது, ஆனால் தேசத்தின் இளைஞர்கள் அவரது பாதையைப் பின்பற்ற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டது. இது மிகக் குறைந்த பெரும்பான்மையான பிரதிநிதிகளால் மட்டுமே நிறைவேற்றப்பட்டது.

லாகூரில் உள்ள நௌஜவான் பாரத் சபா மற்றும் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்களால் ரூ.10 லட்சம் நிதி கோரி திட்டமிடப்பட்ட நினைவிடத்திற்கு ஒத்துழைக்க காந்தி மறுத்துவிட்டார். நௌஜவான் பாரத் சபா தடை செய்யப்பட்டதால், பஞ்சாபில் காங்கிரஸ் தலைவர்கள் மகாத்மாவின் விருப்பு வெறுப்பைக் கண்டு இழுத்தடித்ததால் அந்தத் திட்டம் நிறைவேறவில்லை.

publive-image

1947க்குப் பின்: வெறுமனே உதட்டுப் பேச்சு

பகத் சிங் இளைஞர்களிடம் மறுக்க முடியாத சக்தியாக இருந்தபோதிலும், அரசாங்கத்தின் 250 க்கும் மேற்பட்டவை உட்பட சுதந்திர இந்தியாவின் 1,000 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் ஒன்றுக்கு கூட அவருடைய பெயரிடப்படவில்லை. பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் ஏற்கனவே பகத் சிங் பெயரைக் கொண்ட ஒரு பொறியியல் கல்லூரி சமீபத்தில்தான் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டது. சண்டிகர் விமான நிலையத்திற்கு பகத் சிங் பெயரை சூட்ட வேண்டும் என்ற திட்டம் தொழில்நுட்ப சிக்கலில் சிக்கியுள்ளது.

அவர் தூக்கிலிடப்பட்ட நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு, பகத் சிங்கின் எழுத்துக்கள் ஒரே தொகுதியில் சேகரிக்கப்படவில்லை; இருப்பினும், அவை இப்போது பல மொழிகளிலும் சர்வதேச பதிப்புகளிலும் கிடைக்கின்றன. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பகத் சிங் இருக்கை உருவாக்கப்பட்டு 15 ஆண்டுகளுக்குப் பிறகும் நிரப்பப்படாமல் உள்ளது, மேலும் அதன் கீழ் எந்த பெரிய கல்வித் திட்டமோ அல்லது ஆராய்ச்சியோ ஏற்பாடு செய்யப்படவில்லை.

இதையும் படியுங்கள்: ராணுவத்துடன் மோதல்; கூட்டணிகளின் ஆதரவு இல்லை; இம்ரான் கானின் எதிர்காலம் நிச்சயமற்றது ஏன்?

பகத் சிங் (சந்திரசேகர் ஆசாத் மற்றும் மாஸ்டர்தா சூர்ஜ்யா சென் போன்றவர்கள்) பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தின் உருவப்படக் காட்சியகத்தில் இடம் பெறவில்லை, 2003ல் அப்போதைய உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி தனிப்பட்ட முறையில் ஆர்வம் காட்டியதால், 1943 இல் 20 வயதிற்கு முன்பே தூக்கிலிடப்பட்ட பெரிதாக அறியப்படாத புரட்சியாளர் ஹேமு கலானி இடம்பெற்றிருந்தாலும் கூட பகத் சிங் இடம் பெறவில்லை.

1929 ஆம் ஆண்டில், ”கேட்காதவர்களுக்கு கேட்க செய்ய”, பகத் சிங்கும் படுகேஷ்வர் தத்தும் இந்த நாடாளுமன்ற வளாகத்தில் வெடிகுண்டுகளை வீசினர், பின்னர் மத்திய சட்டமன்றம் என்று அழைக்கப்பட்டது. நிறுவனங்களுக்கு பகத் சிங்கின் பெயரைப் பெயரிடவோ, நாடாளுமன்றத்தில் அவரைக் கௌரவிக்கவோ அல்லது உதட்டளவில் பேசப்படும் அவரது கருத்துக்களையும் தொலைநோக்குப் பார்வையையும் ஊக்குவிப்பதில் தயக்கம் காட்டுவது, அரசு அலுவலகங்கள் மற்றும் விளம்பரங்களில் அவரது உண்மையான படத்தைப் பயன்படுத்தாதது போன்றவை இருவேறுபாட்டை பிரதிபலிக்கிறது.

publive-image

உண்மையில், 2008 ஆம் ஆண்டு அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலால் பகத் சிங்கின் சிலை நாடாளுமன்ற வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது. ஆனால் இந்த விஷயத்திலும் கூட, புரட்சியாளரின் குடும்ப உறுப்பினர்கள் அவர் தோற்றத்தைப் பற்றி புகார் கூறியுள்ளனர். சுதந்திரப் போராட்ட வீரர்களும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, பாகிஸ்தானைச் சேர்ந்த மறைந்த உருது கவிஞர் ஃபஹ்மிதா ரியாஸ், இது உண்மையான பகத்சிங்கின் முகம் அல்ல என்று கவிதை எழுதியிருந்தார்.

2007-2008 பகத் சிங்கின் நூற்றாண்டு விழாவில் இந்திய அரசு ரூ.5 மற்றும் ரூ.100 நாணயங்களை வெளியிட்டபோது, ​​அவர் தொப்பி அணிந்திருப்பதைக் காட்டி, பஞ்சாபில் உள்ள அகாலிகள் அவரது தலைப்பாகை உருவம் சித்தரிக்கப்படவில்லை என்று எதிர்ப்பு தெரிவித்தனர். சுவாரஸ்யமாக, 1970 களில், அப்போதைய முதல்வர் கியானி ஜைல் சிங், நவன்ஷஹரில் (இப்போது ஷஹீத் பகத் சிங் நகர்) பகத் சிங்கின் தொப்பியுடன் கூடிய சிலையை அவரது இளைய சகோதரர் குல்தார் சிங் முன்னிலையில் திறந்து வைத்தார், ஆனால் அந்தச் சிலை பின்னர் தலைப்பாகை அணிந்தவாறு மாற்றப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Punjab Explained
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment