மாணவர் விசா நேர்காணல் நிறுத்தியது அமெரிக்கா: இந்திய மாணவர்களுக்கு பாதிப்பு என்ன?

வெளிநாட்டு மாணவர்களுக்கான புதிய விசா நேர்காணல்களை நிறுத்தி வைக்கும் படி, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ உத்தரவிட்டுள்ளார். விசா கோரியுள்ள மாணவர்களின், 'பேஸ்புக், எக்ஸ், லிங்க்ட்இன், டிக்டாக்' சமூகவலைதளங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளன

வெளிநாட்டு மாணவர்களுக்கான புதிய விசா நேர்காணல்களை நிறுத்தி வைக்கும் படி, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ உத்தரவிட்டுள்ளார். விசா கோரியுள்ள மாணவர்களின், 'பேஸ்புக், எக்ஸ், லிங்க்ட்இன், டிக்டாக்' சமூகவலைதளங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளன

author-image
WebDesk
New Update
student visa appointments

அமெரிக்காவில் மாணவர் விசா நேர்காணல் நிறுத்தம்: இந்திய மாணவர்களுக்கு சிக்கல்?

வெளிநாட்டு மாணவர்களுக்கான புதிய விசா நேர்காணல்களை நிறுத்தி வைக்கும் படி, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ உத்தரவிட்டுள்ளார். விசா கோரியுள்ள மாணவர்களின், 'பேஸ்புக், எக்ஸ், லிங்க்ட்இன், டிக்டாக்' சமூகவலைதளங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளன.

Advertisment

செவ்வாய்க்கிழமை (மே 27) அன்று டிரம்ப் நிர்வாகம், அமெரிக்க தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களுக்கு வெளிநாட்டு மாணவர்கள், அமெரிக்காவில் படிக்க விண்ணப்பித்தால் அதற்கான நேர்காணலை நிறுத்தி வைக்க அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. சமூக வலை தளங்கள் மற்றும் மாணவர்களின் தனி விவரங்கள் நன்கு பரிசீலித்த பிறகே விசா வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

"விசா பரிசோதனை மற்றும் சரிபார்ப்பில் உள்ள அனைத்து தகவல்களையும் நாங்கள் பயன்படுத்துகிறோம்" என்று வெளியுறவுத்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது. எந்தெந்த தகவல்கள் ஆட்சேபணைக்குரியதாக கருதப்படும் என்பதை அந்த அறிக்கை குறிப்பிடவில்லை என்றாலும், விசா விண்ணப்பதாரர்கள் 2019 முதல் தங்கள் படிவங்களில் சமூக ஊடக தகவல்களை வழங்கும்படி கேட்கப்பட்டுள்ளனர்.

Advertisment
Advertisements

வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோவின் இந்த உத்தரவு, காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகள் குறித்த விமர்சனங்கள் மற்றும் 'யூத எதிர்ப்பு' பேச்சுக்களை கட்டுப்படுத்தத் தவறியதாகக் கூறி, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை டிரம்ப் நிர்வாகம் தண்டிக்கும் நடவடிக்கைகளுக்கு மத்தியில் வந்துள்ளது. நாடு கடத்துதல் மற்றும் மாணவர் விசாக்களை ரத்து செய்தல் உள்ளிட்ட குடியேற்றக் கொள்கைகளை கடுமையாக்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும். இந்த நடவடிக்கை உயர் கல்விக்காக அமெரிக்காவிற்கு குடியேற விரும்பும் இந்திய மாணவர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா 4,000-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களுடன், பெரும்பாலானவை 4 வருட பட்டப்படிப்பு திட்டங்களை வழங்கும் வாய்ப்புகளை வழங்குகிறது. பல அமெரிக்க நிறுவனங்களுக்கு IELTS மதிப்பெண்கள் தேவையில்லை என்றாலும், மாணவர்கள் தங்கள் ஆங்கிலப் புலமையை நிரூபிக்க வேண்டும். மேலும், அமெரிக்க அதிகாரிகள் அமெரிக்கப் பல்கலை. மேம்படுத்துவதற்கும் அதிக இந்திய மாணவர்களை ஈர்ப்பதற்கும் இந்தியா முழுவதும் கல்வி நிகழ்வுகளை தீவிரமாக ஏற்பாடு செய்துள்ளனர்.

கல்வி ஆலோசகர்கள், சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்காவில் உயர் கல்வி கற்க விரும்பும் இந்திய மாணவர்களின் அதிகரிப்பானது கனடா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தின் குடிவரவு கொள்கைகளில் ஏற்பட்ட மாற்றங்களின் விளைவாகவே பார்க்கின்றனர். 2024-ல், கனடா சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கைக்கு உச்சவரம்பை அறிமுகப்படுத்தியது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு நாடுகளும் தங்கள் மாணவர் விசா விதிகளை கடுமையாக்கியுள்ளன. இதனால், அமெரிக்கா கவர்ச்சிகரமான மற்றும் நிலையான விருப்பமாக மாறி உள்ளது.

கனடா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கான வெளிநாட்டுப் படிப்பு திட்டங்களில் நிபுணத்துவம் பெற்ற கபூர்தலா-வைச் சேர்ந்த கல்வி ஆலோசகர் குர்பிரீத் சிங் கூறுகையில், "கனடாவின் விசா கொள்கைகள் கடுமையாகி வருகின்றன. அதே நேரத்தில், அமெரிக்க விசா அங்கீகார விகிதம், முன்பு 15-20% ஆக இருந்தது, சமீபத்திய ஆண்டுகளில் கணிசமாக மேம்பட்டுள்ளது. அமெரிக்கா எப்போதும் பலரால் வாய்ப்புகளின் பூமியாக அல்லது 'சம்பாதிக்கும் சொர்க்கமாக' பார்க்கப்படுகிறது" என்றார்.

மாணவர்களுக்கு, அமெரிக்கா மலிவான வீட்டு வசதி, கனடாவை விட மிதமான வானிலை மற்றும் நெகிழ்வான கல்விக் கட்டண செலுத்தும் விருப்பங்கள் போன்ற நன்மைகளை வழங்குகிறது. கட்டணம் பெரும்பாலும் நிறுவனத்தில் சேரும்போது மட்டுமே செலுத்த வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் எத்தனை இந்திய மாணவர்கள் அமெரிக்கா செல்கிறார்கள்?

கடந்த சில ஆண்டுகளில், உயர் கல்விக்காக அமெரிக்காவைத் தேர்ந்தெடுக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ளது. இந்திய மாணவர்களை அதிக அளவில் ஏற்கும் நாடுகளில் அமெரிக்கா இப்போது கனடாவுக்கு அடுத்தபடியாக 2வது இடத்தில் உள்ளது.

அமெரிக்க தூதரக வட்டாரங்களின்படி, கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவிற்கான அமெரிக்க தூதரகம், 2018, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் வழங்கப்பட்ட மொத்த மாணவர் விசாக்களின் எண்ணிக்கையை விட அதிகமான மாணவர் விசாக்களை வழங்கியுள்ளது. 2022-ல் 1,15,115 மற்றும் 2023-ல் 1,30,730 மாணவர் விசாக்கள் இந்திய மாணவர்களுக்கு பல்வேறு அமெரிக்க கல்வி நிறுவனங்களில் சேர வழங்கப்பட்டன. 2024-ல் இந்த எண்ணிக்கை 86,110 ஆக குறைந்தாலும், விசா வழங்கப்பட்ட வகையில் இந்தியா தொடர்ந்து முதல் இடத்தைப் பிடித்துள்ளது. சீனா சுமார் 82,000 விசாக்களுடன் 2வது இடத்தில் உள்ளது.

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது, வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்கள் குறித்த புதுப்பிக்கப்பட்ட தரவுகளை எழுத்துப்பூர்வ பதிலில் அளித்தார். 2024-ம் ஆண்டில் வெளிநாடுகளில் உள்ள 13,35,878 இந்திய மாணவர்களில், சுமார் 4,27,000 பேர் கனடாவிலும், 3,37,630 பேர் அமெரிக்காவிலும் இருந்தனர். இதனால் அமெரிக்கா 2வது விருப்பமாக மாணவர்களுக்கு உள்ளது.

Us Visa India

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: