Advertisment

வாளையார் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை கொலை வழக்கு; சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; நடந்தது என்ன?

2017 ஆம் ஆண்டு கேரளாவின் வாளையாரில் 2 சகோதரிகள் சிறுமிகள் இறந்து கிடந்தனர். அவர்களின் பிரேத பரிசோதனையில் அவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டது. பரவலான மக்களின் கோபத்திற்கு வழிவகுத்த இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
வாளையார் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை கொலை வழக்கு; சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; நடந்தது என்ன?

2017 ஆம் ஆண்டு கேரளாவின் வாளையாரில் 2 சகோதரிகள் சிறுமிகள் இறந்து கிடந்தனர். அவர்களின் பிரேத பரிசோதனையில் அவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டது. பரவலான மக்களின் கோபத்திற்கு வழிவகுத்த இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisment

பாலக்காடு, வாளையாரில் 2 தலித் சகோதரிகள் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இறந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மேலும் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு கேரள செஷன்ஸ் நீதிமன்றம் புதன்கிழமை (ஆகஸ்ட் 10) உத்தரவிட்டது. சிபிஐயின் புதிய குழு விசாரணையை மேற்கொள்ள விரும்புவதாக உயிர்ழந்த சகோதரிகளின் தாய் செய்தியாளர்களிடம் கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

publive-image

2017 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 9 வயது மற்றும் 13 வயதுடைய சிறுமிகள் சில வாரங்கள் இடைவெளியில் அவர்களது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டனர். பல மாதங்களாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிகள் தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் முடிவு செய்தனர். உயிரிழந்த சிறுமிகள் கொலை செய்யப்பட்டதாக சிறுமிகளின் தாய் குற்றம் சாட்டினார்.

செப்டம்பர் மற்றும் அக்டோபர் 2019-இல், சிறப்பு போக்சோ நீதிமன்றம் நான்கு குற்றவாளிகளை விடுவித்தது. மாநில அரசு மற்றும் சிறுமிகளின் தாயார் மேல்முறையீடு செய்ததைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றம் ஜனவரி 2021-இல் மறு விசாரணைக்கு உத்தரவிட்டது. மேலும், அரசாங்கம் விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைத்தது.

இருப்பினும், டிசம்பர் 2021-இல் போக்ஸோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், நீண்டகால பாலியல் துஷ்பிரயோகத்தைத் தொடர்ந்து சிறுமிகள் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் கூறியதையே சிபிஐயும் தெரிவித்தது.

2017-இல் என்ன நடந்தது?

ஜனவரி 13, 2017-இல் கேரளா-தமிழ்நாடு எல்லையில் உள்ள வாளையாரில் உள்ள குடும்பத்தின் ஒரு அறை கொண்ட வீட்டில் 13 வயதான மூத்த சகோதரி தூக்கில் தொங்கிய நிலையில், அவருடைய 9 வயதான தங்கை பார்த்ததாகக் கூறினார். மேலும், அன்று இரண்டு ஆண்கள் முகத்தை மூடிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறுவதை பார்த்தேன் என்று அந்த சிறுமி கூறினார்.

கட்டிடத் தொழிலாளிகளான அந்த சிறுமிகளின் பெற்றோர்கள் தங்கள் மகள் கொலை செய்யப்பட்டதாகக் கூறினாலும், போலீசார் இது இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்குப் பதிவு செய்தனர்.

52 நாட்களுக்குப் பிறகு, மார்ச் 4 ஆம் தேதி உயிரிழந்த 13 வயது பெண்ணின் தங்கையான 9 வயது சிறுமியும் அதே வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினரின் போராட்டத்தைத் தொடர்ந்து, ஒரு சிறுவன் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

இருவரது உடல்களையும் பிரேதப் பரிசோதனை செய்ததில் அவர்கள் இறப்பதற்கு முன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது போக்ஸோ சட்டத்தின் கடுமையான விதிகளின் கீழ் பாலியல் வன்புணர்வு மற்றும் தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டது.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கூறியது என்ன ?

இரண்டு சிறுமிகளின் தாயார் தொடர்ந்து போலீஸ் விசாரணையில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டினார் மேலும், அவர் உள்ளூர் அரசியல் மட்டங்களில் தலையீடு இருப்பதாக குற்றம் சாட்டினார். இது குற்றம் சாட்டப்பட்டவர்கள் நடவடிக்கையிலிருந்து தப்பிக்க வழிவகுத்தது. அந்த புகாரில் தனது வாக்குமூலத்தை போலீசார் திரித்துவிட்டதாகவும், அதற்கு பதிலாக அவர்களது சொந்த வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமைகளில் இருந்து தப்பிப்பதற்காக தனது மகள்கள் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்திருக்கலாம் என்று அவர் காவல்துறையிடம் ரகசியமாக கூறியதாக வெளியான தகவலை மறுத்தார்.

“நான் அப்படிச் சொல்லவில்லை. அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் நம்ப வைக்க முயற்சி செய்தனர். இது காவல்துறையின் வார்த்தைகள். அன்றும் இன்றும், என் மகள்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டார்கள் என்று நான் நம்பவில்லை. அத்தகைய செயலைச் செய்ய அவர்களுக்கு புத்திசாலித்தனம் இல்லை. அப்படி தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அவர்கள் உயரம் இல்லை. அவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மூத்த பெண்ணைக் கொன்றுவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய இரண்டு ஆண்களைக் நேரில் கண்ட சாட்சி இளைய பெண் தான். அதனால்தான் இளையப் பெண்ணும் கொல்லப்பட்டார்” என்று சிறுமிகளின் தாய் 2019 இன் பிற்பகுதியில் iemalayalam.com இடம் கூறியிருந்தார்.

போலீசார், பாரபட்சமின்றி நடந்து கொண்டதாகவும், குடும்பத்தினரின் நம்பிக்கைக்கு துரோகம் இழைத்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார். அப்போது அவர் “இந்த வழக்கு நீதிமன்றத்தை எட்டியபோதுதான் நாங்கள் (காவல்துறையிடம்) எதைச் சொன்னாலும் அதை அவர்கள் பதிவு செய்யவில்லை என்பதை உணர்ந்தோம். தங்களுக்குப் பொருத்தமாகத் தோன்றியதை எழுதினார்கள். இந்த வழக்கை சிபிஐ மீண்டும் விசாரிக்க வேண்டும். முதலமைச்சரை சந்திக்கும் போது இந்த கோரிக்கையை முன்வைப்பேன்” என்று அவர் கூறியிருந்தார்.

போக்சோ நீதிமன்றம் என்ன கண்டுபிடித்தது?

செப்டம்பர் 30, 2019 அன்று கூடுதல் செஷன்ஸ் நீதிபதி முரளி கிருஷ்ணா எஸ் அளித்த தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட பிரதீப் குமாருக்கு எதிராக, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு அருகில் வசித்த, அவர்களுக்குத் தெரிந்தவருக்கு எதிராக அரசுத் தரப்பால் வலுவான ஆதாரங்களைக் கொண்டுவர முடியவில்லை என்று சுட்டிக்காட்டியது.

“குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகக் கூறப்படும் குற்றங்களை நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டது என்று கூறுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை” என்று நீதிபதி குறிப்பிட்டார்.

இரண்டு அரசு தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்களிலும் முரண்பாடுகள் இருப்பதை நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் தனது நிர்வாணப் படங்களை எடுக்க மூத்த சிறுமிக்கு செல்போன் கொடுத்ததாக நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்த ஒருவரின் வாக்குமூலம் அவரது போலீஸ் வாக்குமூலத்தில் காணப்படவில்லை.

குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களுடன் குற்றம் சாட்டப்பட்டவர்களை இணைக்கும் அறிவியல் ஆதாரம் எதுவும் இல்லை என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. வயதான பெண்ணின் பிரேத பரிசோதனையை மேற்கொண்ட தடயவியல் நிபுணர், பாதிக்கப்பட்ட பெண்ணின் குத காயங்கள் பைல்ஸ் தொற்று காரணமாக இருக்கலாம் என்று கூறியது குற்றம் சாட்டப்பட்டவருக்கு சாதகமாக அமைந்தது.

அதைத் தொடர்ந்து, அக்டோபர் 25, 2019 அன்று மூன்று பேரும் விடுவிக்கப்பட்டனர்.

மாநிலத்தில் ஆளும் எல்.டி.எஃப் ஆட்சியில் அங்கம் வகிக்கும் சிபிஐ மற்றும் காங்கிரஸ், பாஜக ஆகியவற்றால் பரவலான மக்கள் கொந்தளிப்பும் போராட்டங்களும் எழுந்தன. சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவருக்காக முன்பு வழக்கறிஞராக ஆஜரானவரை பாலக்காட்டில் குழந்தைகள் நலக் குழுவின் தலைவர் என் ராஜேஷை அரசாங்கம் மாற்றியது. பாலியல் பலாத்காரம் மற்றும் விடுதலை விவகாரம் மாநில சட்டசபையில் எதிரொலித்தது. இந்த வழக்கை காவல்துறை கையாண்ட விதம் குறித்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் அரசாங்கத்தை கடுமையாக சாடினார்கள்.

இறுதியில், உயர் நீதிமன்றம் மறு விசாரணைக்கு உத்தரவிட்டது. மேலும் அரசாங்கம் சிபிஐக்கு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kerala Cbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment