Advertisment

எஃப்.டி.சி மருந்துகள் என்றால் என்ன? 156 மருந்துகளுக்கு மத்திய அரசு தடை ஏன்?

156 ஃபிக்ஸட் டோஸ் காம்பினேஷன் (FDC) மருந்துகளை மத்திய அரசாங்கம் தடை செய்துள்ளது.

author-image
WebDesk
New Update
comb dru

சளி மற்றும் காய்ச்சல் மற்றும் வலிக்கு முறையே பயன்படுத்தப்படும் செஸ்டன் கோல்ட் மற்றும் ஃபோராசெட் போன்ற பிரபலமான மருந்துகளை உள்ளடக்கிய 156 ஃபிக்ஸட் டோஸ் காம்பினேஷன் (FDC) மருந்துகளை அரசாங்கம் தடை செய்துள்ளது.

Advertisment

2018 ஆம் ஆண்டு முதல், 328 மருந்துகள் தடைசெய்யப்பட்டதில் இருந்து, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அறியப்பட்ட மருந்துகளின் கலவையான ஒற்றை-டோஸ் வடிவில் உள்ள எஃப்.டி.சி-களுக்கு எதிரான மிகக் கடுமையான ஒடுக்குமுறை தடையாகும்.

2014 முதல் மொத்தம் 499 எஃப்.டி.சிகள் தடை செய்யப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த வாரம் வெளியிடப்பட்ட அதன் அறிவிப்பில், மத்திய அரசு இந்த எஃப்.டி.சிகளை irrational என்றும், அவற்றால் எந்த நோயிக்கும் பலன் இல்லை என்றும் கூறியது.

எஃப்.டி.சி என்றால் என்ன?

எஃப்.டி.சி  என்பது ஒன்றுக்கு மேற்பட்ட ஆக்டிவ் மூலப்பொருளைக் கொண்ட மருந்துகள் - உடலில் விளைவைக் கொண்ட மருந்துகளில் உள்ள ரசாயன கலவைகள் - ஒரு மாத்திரை, காப்ஸ்யூல் அல்லது ஷாட். எஃப்.டி.சி காசநோய் மற்றும் நீரிழிவு போன்ற நிலைமைகளைக் கொண்ட நோயாளிகளுக்கானது, அதற்காக அவர்கள் தொடர்ந்து பல மருந்துகளை உட்கொள்ள வேண்டும். எஃப்.டி.சி எடுக்கும் நோயாளி ஒவ்வொரு நாளும் எடுத்துக்கொள்ள வேண்டிய மாத்திரைகளின் எண்ணிக்கையைக் குறைத்து, சிகிச்சையை மேம்படுத்த உதவுகின்றன.

உதாரணமாக, செஸ்டன் சளியில் காய்ச்சலுக்கான பாராசிட்டமால், ஒவ்வாமை நிவாரணத்திற்கான செடிரிசைன் மற்றும் மூக்கடைப்புக்கான ஃபீனைல்ஃப்ரின் ஆகியவை உள்ளன. ஒவ்வாமை காரணமாக இந்த அறிகுறிகளைக் கொண்டவர்களுக்கு இந்த மருந்து உதவும் என்றாலும், பாக்டீரியா தொற்றுக்கு இது உண்மையில் தேவையில்லை.

தடை செய்யப்பட்ட மருந்துகள் என்ன? 

இரைப்பை குடல் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் என்சைம்களின் பல காம்பினேஷன்;

ஒவ்வாமை எதிர்ப்பு மருந்துகளான லெவோசெடிரிசைன் மற்றும் நாசி டிகோங்கஸ்டன்ட், சளியை உடைக்கும் சிரப்கள் மற்றும் பாராசிட்டமால்;

கற்றாழையுடன் கூடிய மெந்தோல் உட்பட தோல் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகள்; மருந்து சோப்பு வடிவில் வைட்டமின் ஈ கொண்ட கற்றாழை; 

ஆண்டிசெப்டிக் முகவர், கற்றாழை சாறு மற்றும் வைட்டமின் கொண்ட சில்வர் சல்ஃபாடியாசின் (தீக்காயங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது); கற்றாழை மற்றும் இயற்கையான பொருளுடன் கூடிய கலமைன் லோஷன் (தோல் எரிச்சலுக்கு) பயன்படுத்தப்படுகிறது. 

இப்போது தடை ஏன்?

பல ஆண்டுகளாக சந்தையில் உள்ள irrational மருந்து கலவைகளை களையெடுக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு ஏற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தடைசெய்யப்பட்ட மருந்துகள் ஆரம்பத்தில் பல்வேறு மாநில உரிமம் வழங்கும் அதிகாரிகளால் சேர்க்கைக்கான எந்த சோதனையும் இல்லாமல் அங்கீகரிக்கப்பட்டன, ஏனெனில் பொருட்கள் தனித்தனியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்று அமைச்சகத்தின் மூத்த அதிகாரி கூறினார்.

ஆங்கிலத்தில் படிக்க:   What are combination drugs; why have 156 of them been banned?

2012 ஆம் ஆண்டில், பாராளுமன்றக் குழு முதன்முதலில்  irrational  மருந்து கலவைகள் அத்தகைய ஒப்புதல்களைப் பெறுவதில் உள்ள சிக்கலை முன்னிலைப்படுத்தியது. 1988க்குப் பிறகு நாட்டில் உற்பத்தி மற்றும் விற்பனைக்காக அங்கீகரிக்கப்பட்ட 3,450 FDC களை ஆய்வு செய்ய அரசாங்கம் 2014 இல் ஒரு குழுவை அமைத்தது. அந்த குழு 963 மருந்துகளை  irrational  எனக் கண்டறிந்து, உடனடியாக தடை செய்ய பரிந்துரைத்தது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment