/tamil-ie/media/media_files/uploads/2022/07/WhatsApp-Image-2022-07-28-at-5.24.01-PM.jpeg)
மக்கள் நீண்ட நாட்கள் எதிர்பார்த்த கூகுள் ஸ்ட்ரீட் வியூ இந்தியாவில் உள்ள 10 நகரங்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வருடத்திற்குள் 50 நகரங்களுக்கு ’ஸ்ட்ரீட் வியூ அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. 360 டிகிரி ஆங்கிள் வழியாக நகரத்தின் தெருக்களை நீங்கள் பார்க்க முடியும். இது உலகத்தில் உள்ள 100 நாடுகளில் 2007ம் ஆண்டே அறிமுகம் செய்யப்பட்டது. தேசிய காஸ்பாட்டியல் பாலிசியின்படி முன்றாம் நபர்கள் மூலம் கூகுள் ஸ்ட்ரீட் வீயூ புகைப்படங்கள் வழங்கப்படுகிறது.
கூகுள் ஸ்ட்ரீட் வியூ என்றால் என்ன
பிரத்யேக கேமிராக்களால் 360 டிகிரி ஆங்கிளில் நகரத்தில் உள்ள எல்லா இடங்களையும் பதிவு செய்யப்பட்டிருக்கும். இந்த புகைப்படங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு 360 டிகிரி பார்வை கிடைக்கும்படி உருவாக்கப்படும். இதனால் எல்லா திசைகளிலும் புகைப்படங்களை ஸ்வைப் செய்து பார்வையாளர்கள், குறிப்பிட்ட இடங்களை கண்டுபிடிக்கலாம்.
இதுவரை ஏன் இந்தியாவில் கூகுள் ஸ்ட்ரீட் வியூ அறிமுகம் செய்யப்படவில்லை ?
2011ம் ஆண்டு பெங்களூர் போலிசர், கூகுள் ஸ்ட்ரீட் வியூவிற்கு எடுக்கப்படும் புகைப்படங்களை நிறுத்தினார்கள். ஆனால் இதற்கான முறையான காரணங்கள் கூறப்படவில்லை. இந்நிலையில் கூகுள் இந்த பணிகளை கைவிட்டது. இந்நிலையில் சில உள்ளூர் நிறுவனங்கள் இதுபோன்ற மேப்பை உருவாக்கியது.
தற்போது எப்படி ஸ்ட்ரீட் வியூ அறிமுகம் ஆனது ?
இந்த சிறப்பான ஆப்ஷனை வழங்க கூகுள் நிறுவனம் இந்தியாவில் உள்ள டெக் மகேந்திரா மற்றும் மும்பையில் உள்ள கேனியஸ் இன்டர்நேஷனல் நிறுவனங்களோடு இணைந்து இந்த சேவையை மக்களுக்கு வழங்கிறது. டேட்டாவை வெளி நபர்களிடத்திலிருந்து வாங்குவது கூகுள் நிறுவனத்திற்கும் இதுவே முதல் முறையாகும்.
அரசுக்கும் சொந்தமான , ராணுவத்திற்கு சொந்தமான இடங்களுக்கு கூகுள் ஸ்ட்ரீட் வியூ ஆப்ஷன் இருக்காது. இவை பாதுகாக்கப்பட்ட இடங்கள் என்பதால் இதில் இடம்பெறாது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.