/tamil-ie/media/media_files/uploads/2021/11/Merck.jpg)
கொரோனா தொற்றுக்கு எதிராக செயல்படும் மருந்துகளை, குறிப்பாக மாத்திரைகளை உருவாக்கி வருகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அதில் தற்போது மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது மோல்னுபிராவிர். அதனை விரைவில் உருவாக்கும் பொருட்டு ஆராய்ச்சியாளர்கள் என்சைம்களை கண்டறிந்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. ஆய்வு ACS சென்ட்ரல் சயின்ஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மோல்னுபிராவிர், வைரஸ்கள் தங்களின் ஆர்.என்.ஏக்களை நகலெடுக்கு போது பிழைகளை உருவாக்குகிறது. இது வைரஸ்கள் நகலெடுப்பதைத் தடுக்கும் பிறழ்வுகளை அறிமுகப்படுத்துகிறது.
கேரளாவில் தடுப்பூசி போட்டவர்கள் மத்தியில் அதிகரிக்கும் கொரோனா
காய்ச்சலை தடுக்க மெர்க் நிறுவனத்தால் ஆரம்பத்தில் இந்த மருந்து உருவாக்கப்பட்டது. இது கோவிட்-19 சிகிச்சையாக மதிப்பாய்வு செய்வதற்காக அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் FDA-விடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்தியாவில் ஆப்டிமஸ் குழுமம் சமீபத்தில் 3-ஆம் கட்ட மருத்துவ பரிசோதனைகளின் முடிவுகளை அறிவித்தது, இந்த மருந்தை உட்கொண்டவர்களில் 91.5% பேருக்கு கொரோனா சோதனையின் போது எதிர்மறை முடிவுகள் வெளியாகின.
புதிய ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் மூன்று-படி தொகுப்பு வழியை உருவாக்கியுள்ளனர், இது 70% குறைவாக இருந்தது மற்றும் அசல் வழியை விட ஏழு மடங்கு அதிக ஒட்டுமொத்த மகசூலைக் கொண்டிருந்தது என்று அமெரிக்கன் கெமிக்கல் சொசைட்டி ஒரு செய்திக்குறிப்பில் அறிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.