Advertisment

ஊழல் குற்றச்சாட்டில் அரசு அதிகாரிகளை விசாரிக்க 'முன் அனுமதி' தேவை: அப்படி என்றால் என்ன?

சி.ஐ.டி விசாரணையைத் தொடங்கும் போது முன்அனுமதி பெறவில்லை என்று நீதிபதி போஸ் கூறினார். இந்தத் தேவை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டான 2018-க்குப் பிறகு செய்யப்பட்ட குற்றங்களை விசாரிப்பதற்கு மட்டுமே அனுமதி பெறுவது அவசியம் என்று நீதிபதி திரிவேதி கூறினார்.

author-image
WebDesk
New Update
Former CM Chandrababu Naidu.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் தன் மீது பதியப்பட்ட எஃப்.ஐ.ஆரை ரத்து செய்யக் கோரிய ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடர்ந்த மனு மீது உச்ச நீதிமன்றம் நேற்று (செவ்வாய்க் கிழமை) மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது. நீதிபதிகள் அனிருத்தா போஸ் மற்றும் பேலா எம். திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. அப்போது, குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துவதற்கு முன் ஆந்திர சி.ஐ.டி மாநில அரசிடம் இருந்து ‘முன் அனுமதி’ பெற வேண்டுமா? என்பதில் இருவரும் இரு வேறு கருத்துகளை கூறினர். 

Advertisment

சி.ஐ.டி விசாரணையைத் தொடங்கும் போது அரசிடம் இருந்து முன்அனுமதி பெறவில்லை என்று நீதிபதி போஸ் கூறினார். அதே சமயம் இந்தத் தேவை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டான 2018-க்குப் பிறகு செய்யப்பட்ட குற்றங்களை விசாரிப்பதற்கு மட்டுமே அனுமதி பெறுவது அவசியம் என்று நீதிபதி திரிவேதி கூறினார்.

முன் அனுமதி தேவை

2003-ம் ஆண்டில், சி.பி.ஐ போன்ற முகமைகளை நிர்வகிக்கும் டெல்லி சிறப்புக் காவல் ஸ்தாபனச் சட்டம் 1946, திருத்தப்பட்டது. அப்போது பிரிவு 6A-ன் கீழ், சம்பந்தப்பட்ட ஊழியர் இணைச் செயலாளரை விட உயர்ந்த பதவியில் இருந்தால், ஊழல் தடுப்புச் சட்டம் (பி.சி.ஏ), 1988-ன் கீழ் கூறப்படும் குற்றங்களை விசாரிப்பதற்கு முன் மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்று கூறுகிறது. 

உச்ச நீதிமன்றம் 2014-ல் இந்தத் தேவையை நிராகரித்தது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு, பி.சி.ஏ திருத்தப்பட்டது மற்றும் இதேபோன்ற விதி பிரிவு 17A என அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பிரிவின் கீழ், ஒரு அரசு ஊழியர் தனது உத்தியோகபூர்வ கடமைகளை நிறைவேற்றும் போது சட்டத்தின் கீழ் குற்றம் செய்தால், புலனாய்வாளர்கள் (முகமைகள்) விசாரணையைத் தொடங்க மத்திய/மாநில அரசு அல்லது தகுதிவாய்ந்த அதிகாரியிடம் இருந்து ஒப்புதல் பெற வேண்டும் என்று கூறியது. 

எதிர்ப்பு மனு 

2018-ல், பொதுநல வழக்குகளுக்கான NGO மையம் (CPIL) முந்தைய ஒப்புதல் தேவையின் அரசியலமைப்பை எதிர்த்து மனுத் தாக்கல் செய்தது. எந்தவொரு விசாரணையும் முதலில் நடத்தப்படாவிட்டால், அவர்கள் தங்கள் கடமைகளை ஆற்றும் போது ஒரு பொது அதிகாரியால் ஒரு குற்றத்தைச் செய்தாரா என்பதைத் தீர்மானிப்பது "மிகவும் கடினம்" என்று அது வாதிட்டது. இந்தச் சுமையை போலீஸ் அதிகாரிகள் மற்றும் விசாரணை முகமைகள் மீது சுமத்துவது, ஊழல் அதிகாரிகளைப் பாதுகாக்கும், மேலும் ஊழல் அளவுகள் உயரும் என்று கூறியது. 

2014-ம் ஆண்டு இதேபோன்ற தேவை குறித்தான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்த வழக்கையும் CPIL சுட்டிக்காட்டியது.

ஜூலை 2023-ல், இந்த வழக்கு நீதிபதிகள் பி.வி நாகரத்னா மற்றும் சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் பட்டியலிடப்பட்டது.

சந்திரபாபு நாயுடு வழக்கு 

சந்திரபாபு நாயுடு சம்பந்தப்பட்ட வழக்கு, ‘முன் அனுமதி’ தேவையை பின்னோக்கிப் பயன்படுத்த வேண்டுமா என்பதை எஸ்.சி முடிவு செய்வது முதல் முறை அல்ல. கடந்த செப்டம்பரில், அரசியல் சாசன அமர்வு கூறுகையில், இந்த விதியை கொண்டுவருவதற்கு முன்பு குற்றம் செய்திருந்தாலும், பிரிவு 6A-ன் கீழ் அதிகாரிகள் விலக்கு கோர முடியாது என்று கூறியது. (சி.பி.ஐ vs  வி.ஆர். ஆர் கிஷோர்)

2018 -ம் ஆண்டில், முன்னாள் டெல்லி போலீஸ் கமிஷனர் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் விசாரணையில், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய முன் அனுமதி தேவையில்லை என்று அப்போதைய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.எஸ் நரசிம்ஹா கருத்து தெரிவித்திருந்தார். 

ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/explained/explained-law/what-is-prior-approval-and-why-is-it-needed-before-investigating-public-officials-accused-of-corruption-9112409/

அஸ்தானாவுக்கு எதிரான வழக்கு 2021-ல் உச்ச நீதிமன்றத்திற்கு வந்தது. ஆனால் அது மீண்டும் மீண்டும் விசாரணைக்கு வராமல் ஒத்திவைக்கப்பட்டது, மேலும் 2022-ல் அஸ்தானா ஓய்வு பெற்ற பிறகு பயனற்றதாக அறிவிக்கப்பட்டது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

 

 

 

 

Supreme Court Of India Andhra Pradesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment