Advertisment

ஆளுநரை திரும்ப பெறக்கோரும் திமுக... கவர்னர் பதவி நீக்கம்.. சட்டம் சொல்வது என்ன?

மாநில அரசு கவர்னரை பதவி நீக்கம் செய்ய கோர முடியுமா? கவர்னர் எப்படி நியமிக்கப்படுகிறார்? எப்படி அவரை பதவி நீக்கம் செய்ய முடியுமா? வாருங்கள் பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
DMK wants Tamil Nadu Guv gone

புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழக கவர்னர் ஆர்.என். ரவி.

திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு நவ.1ஆம் தேதி ஆளுநர் ஆர்.என். ரவியை நீக்கும் திட்டத்துக்கு ஒத்த எண்ணம் கொண்ட அனைத்து எம்.பி.க்களும் ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Advertisment

இது தொடர்பாக டிஆர் பாலு எழுதிய கடிதத்தில், “திமுக மற்றும் ஒத்த கருத்துள்ள அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அண்ணா அறிவாலயத் தலைமையகத்துக்குச் சென்று குடியரசுத் தலைவருக்கு அனுப்ப உள்ள கடிதத்தில் உடனடியாக வாபஸ் பெறுவது தொடர்பாகப் படித்து கையெழுத்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன். தமிழக ஆளுநரின் இந்த முன்மொழிவு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.

ஆளுநர் நியமனம் நீக்கம்

அரசியலமைப்பின் 155 மற்றும் 156 வது பிரிவின் கீழ், ஒரு ஆளுநர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்.

இவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். இந்தக் காலத்தில் குடியரசுத் தலைவர் நினைத்தால், அவரை பதவி நீக்கலாம்.

மேலும், அரசமைப்புச் சட்டத்தின் 163வது பிரிவு, அமைச்சர்கள் குழுவால் உதவியும் ஆலோசனையும் பெறுவார் என்று கூறுகிறது.

அந்த வகையில், ஒரு ஆளுநர் மாநிலத்தில் பொறுப்பில் போது, பதவி நீக்கம் செய்வதற்கான சாத்தியக் கூறுகள் குறைவு.

கவர்னர் மாநில அரசு உறவுகள்

அமைச்சர்கள் குழுவின் ஆலோசனையின்படி செயல்பட வேண்டிய அரசியல் சார்பற்ற தலைவராக ஆளுநர் கருதப்படுகிறார். இருப்பினும், மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது அல்லது நிறுத்தி வைப்பது போன்ற அரசியலமைப்பின் கீழ் வழங்கப்பட்ட சில அதிகாரங்கள் ஆளுநருக்கு உண்டு.

சட்டமன்றம், ஒரு கட்சி தனது பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான நேரத்தை நிர்ணயித்தல், எந்தக் கட்சி முதலில் அழைக்கப்பட வேண்டும் என்பதை நிர்ணயித்தல், சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டமன்ற அமையும் நிலை வந்தால் அவருக்கு சில அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

உதாரணமாக இதற்கு 2 உதாரணங்கள் சமீபத்தில் நிகழ்ந்துள்ளன. மகாராஷ்டிராவில் 2019 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக விளங்கியபோது தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

அப்போது அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்ட நிலையில் அவரது அரசாங்கம் 4 நாள்களில் கவிழ்ந்தது. மற்றொன்று செப்டம்பரில் பஞ்சாப் மாநிலத்தில் நடந்தது.

கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால் என்ன நடக்கும்

கருத்து வேறுபாடு ஏற்படும் போது கவர்னரும் அரசும் எவ்வாறு நடக்க வேண்டும் என்பதற்கான விதிகள் அரசியலமைப்பில் இல்லை. வேறுபாடுகளை நிர்வகித்தல் பாரம்பரியமாக ஒருவருக்கொருவர் எல்லைகளுக்கு மரியாதை செலுத்துவதன் மூலம் வழிநடத்தப்படுகிறது.

நீதிமன்றம் என்ன சொல்கிறது?

கவர்னர் "ஜனாதிபதியின் விருப்பத்தின் பேரில்" பதவியில் இருப்பதால், ஆளுநருக்கு ஏதேனும் பதவிக்கால பாதுகாப்பு உள்ளதா, மற்றும் கவர்னரை திரும்ப அழைப்பதற்கான காரணங்களைக் காட்ட ஜனாதிபதி கடமைப்பட்டாரா என்ற கேள்விகள் மீண்டும் மீண்டும் எழுப்பப்படுகின்றன.

சூர்ய நரேன் சௌத்ரி vs யூனியன் ஆஃப் இந்தியா (1981) வழக்கில், ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் குடியரசுத் தலைவரின் மகிழ்ச்சி நியாயமானது அல்ல என்றும், ஆளுநருக்கு பதவிப் பாதுகாப்பு இல்லை என்றும், குடியரசுத் தலைவர் ஆளுநரை திரும்பப் பெறுவதன் மூலம் எந்த நேரத்திலும் நீக்கப்படலாம் என்றும் கூறியது.

பிபி சிங்கால் vs யூனியன் ஆஃப் இந்தியா (2010) இல், உச்ச நீதிமன்றம் இதை கூறியது. உத்தரப் பிரதேசம், குஜராத், ஹரியானா மற்றும் கோவா ஆளுநர்களை மே 2, 2004 அன்று புதிதாக அமைக்கப்பட்ட காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவர் நீக்கியதை எதிர்த்து பாஜக தலைவர் பிபி சிங்கால் தாக்கல் செய்த பொதுநல மனுவுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்தத் தீர்ப்பு வந்தது.

அதன் தீர்ப்பில், "எந்தவொரு காரணமும் கூறாமல், எந்த காரணத்தையும் காட்ட வாய்ப்பளிக்காமல், எந்த நேரத்திலும் கவர்னரை பதவியில் இருந்து குடியரசுத் தலைவர் நீக்க முடியும்" என்று நீதிமன்ற அமர்வு குறிப்பிட்டது.

எனினும், நீக்குவதற்கான அதிகாரத்தை "தன்னிச்சையாகப் பயன்படுத்த முடியாது. இந்தஅதிகாரம் அரிதான மற்றும் விதிவிலக்கான சூழ்நிலைகளில் செல்லுபடியாகும். அதுவும், கட்டாயமான காரணங்களுக்காக பயன்படுத்தப்பட வேண்டும். மத்திய அரசு அல்லது மத்தியில் ஆட்சியில் உள்ள கட்சியின் கொள்கைகள் மற்றும் சித்தாந்தங்களுடன் ஒத்துப்போகவில்லை என்ற காரணத்திற்காக ஒரு ஆளுநரை நீக்க முடியாது.

மேலும் அவர் மீது மத்திய அரசு நம்பிக்கை இழந்துவிட்டதாக கூறி அவரை பதவி நீக்கம் செய்ய முடியாது” என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

பதவி நீக்கம் செய்யப்பட்ட ஆளுநர் நீதிமன்றத்திற்கு வந்தால், குடியரசுத் தலைவரிடம் "கட்டாயமான மற்றும் சரியான" காரணங்கள் இருப்பதாக நீதிமன்றம் கருதும் என்றும், அதன் முடிவை மத்திய அரசு நியாயப்படுத்த வேண்டும் என்றும் பெஞ்ச் கூறியது.

பல்வேறு கமிஷன்கள் என்ன கூறியுள்ளன

1968 இன் நிர்வாக சீர்திருத்த ஆணையம், 1988 இன் சர்க்காரியா கமிஷன் போன்ற பல ஆண்டுகளாக, பல குழுக்கள் மற்றும் கமிஷன்கள் ஆளுநர்கள் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்கள் மற்றும் அவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதில் சீர்திருத்தங்களை பரிந்துரைத்துள்ளனர்.

2001 இல் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி எம்.என்.வெங்கச்சலியா தலைமையில் அரசியலமைப்பின் செயல்பாட்டை மதிப்பாய்வு செய்வதற்கான தேசிய ஆணையமும் பரிந்துரைகள் வழங்கியுள்ளன.

சர்க்காரியா கமிஷன், கவர்னர்கள் ஐந்தாண்டு பதவிக்காலத்தை முடிப்பதற்கு முன், "அரிதான மற்றும் கட்டாயமான" சூழ்நிலைகளைத் தவிர, பதவி நீக்கம் செய்யக்கூடாது என்று பரிந்துரைத்துள்ளது.

பேரவையால் ஆளுநரை பதவி நீக்கம் செய்வதற்கான ஏற்பாடு குறித்தும் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், இவை எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dmk Governor Rn Ravi Governor
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment