![நயன்தாரா- விக்னேஷ் சிவன் சர்ச்சை: இந்தியாவில் வாடகைத் தாய் முறையை கட்டுப்படுத்தும் சட்டங்கள் என்ன?](https://img-cdn.thepublive.com/fit-in/1280x960/filters:format(webp)/tamil-ie/media/media_files/uploads/2022/10/nayanthara-vignesh.jpg)
தமிழ் திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் அவரது மனைவி, நடிகை நயன்தாரா ஆகியோர் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோராகிவிட்டதாக அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது, இந்த ஜோடி வாடகைத் தாய் முறையைத் தேர்ந்தெடுத்ததாக ஊகங்கள் எழுந்தன.
Nayan & Me have become Amma & Appa❤️
— VigneshShivan (@VigneshShivN) October 9, 2022
We are blessed with
twin baby Boys❤️❤️
All Our prayers,our ancestors’ blessings combined wit all the good manifestations made, have come 2gethr in the form Of 2 blessed babies for us❤️😇
Need all ur blessings for our
Uyir😇❤️& Ulagam😇❤️ pic.twitter.com/G3NWvVTwo9
திங்கள்கிழமை செய்தியாளர் சந்திப்பின் போது, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார். “வாடகைத் தாய் பல விவாதங்களுக்கு உட்பட்டது. ஆனால் தனிநபர்கள் 21 வயதுக்கு மேல் மற்றும் 36 வயதுக்குக் கீழ் இருந்தால், குடும்பத்தின் ஒப்புதலுடன் அதைத் தேர்வுசெய்ய சட்டம் அனுமதிக்கிறது, ”என்று அமைச்சர் கூறினார்.
இதையும் படியுங்கள்: இந்தியாவின் வேளாண் உற்பத்தி போதுமானதா? தரவுகள் கூறுவது என்ன?
இந்த அறிக்கைகள் குறித்து தம்பதியினர் கருத்து தெரிவிக்கவில்லை என்றாலும், விசாரணையின் பரிந்துரை இந்தியாவில் வாடகைத்தாய் சட்டம் என்ன கூறுகிறது என்ற கேள்விகளுக்கு வழிவகுத்தது.
சட்டப்படி வாடகைத் தாய் முறையை அனுமதிப்பதற்கான நிபந்தனைகள் என்ன?
இந்தியாவில், நீண்ட காலமாக, வெளிநாட்டு தம்பதிகள் அதன் நல்ல மற்றும் மலிவு மருத்துவ முறையின் காரணமாக வாடகைத் தாய் முறையைத் தேர்ந்தெடுத்தனர். பல ஆண்டுகளாக, அரசாங்கம் ஒழுங்குப்படுத்தப்பட்ட குறிக்கோளுடன் இந்த நடைமுறையில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
வாடகைத்தாய் என்பது சட்டத்தில் "ஒரு பெண் ஒரு தம்பதிக்கு குழந்தையைப் பெற்றெடுக்கும் ஒரு நடைமுறை" மற்றும் வாடகைத் தாய் (ஒழுங்குமுறை) சட்டம், 2021 (SRA) இன் படி, குழந்தை பிறந்த பிறகு குழந்தையை தம்பதிகளிடம் ஒப்படைக்க வழிவகை செய்கிறது என வரையறுக்கப்பட்டுள்ளது
மேலும், மலட்டுத்தன்மையுள்ள இந்திய திருமணமான தம்பதிகளுக்கு மட்டுமே வாடகைத் தாய் கிடைக்க சட்டம் அனுமதிக்கிறது. இந்த விஷயத்தில் மற்ற சட்டம், உதவி இனப்பெருக்க தொழில்நுட்பம் (ART) (ஒழுங்குமுறை) சட்டம், 2021, மனித உடலுக்கு வெளியே விந்தணு அல்லது ஓசைட்டை (முதிர்ச்சியடையாத பெண் முட்டை) கையாளுதல் மற்றும் ஒரு பெண்ணின் இனப்பெருக்க அமைப்புக்கு மாற்றுதல் மூலம் கர்ப்பத்தைப் பெற முயற்சிக்கும் அனைத்து நுட்பங்களையும் ART நடைமுறைகள் என வரையறுக்கிறது. இது திருமணமான தம்பதிகள், லைவ்-இன் பார்ட்னர்கள், ஒற்றைப் பெண்கள் மற்றும் வெளிநாட்டினருக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. ART நடைமுறைகளில் கேமீட் தானம், கருப்பையக கருவூட்டல் மற்றும் இன்-விட்ரோ கருத்தரித்தல் அல்லது IVF ஆகியவை அடங்கும்.
SRA சட்டம், வாடகைத் தாய் என்பவர் திருமணம் செய்துகொண்டு, சொந்தக் குழந்தையைப் பெற்று எடுத்திருப்பவராக இருக்க வேண்டும் என்று கூறுகிறது. சட்டப்பூர்வமாக திருமணமான மலட்டுத்தன்மையுள்ள இந்திய தம்பதிகளுக்கு நற்பண்புள்ள வாடகைத் தாய்யை அனுமதிப்பதைக் கட்டுப்படுத்தும் சட்டம், தம்பதிகளில் கணவன் 26 முதல் 55 வயது வரையிலும், மனைவி 23 முதல் 50 வயது வரையிலும் இருப்பதற்கு வயது வரம்பை நிர்ணயிக்கிறது. மேலும், மனநலம் பாதிக்கப்பட்ட அல்லது உடல் ஊனமுற்ற குழந்தைகள் அல்லது உயிருக்கு ஆபத்தான கோளாறு அல்லது கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் போன்ற சில விதிவிலக்குகளைத் தவிர்த்து, வம்சாவளி அல்லது தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளைக் கொண்ட இந்தியத் தம்பதிகள் வாடகைத் தாய் முறையை மேற்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது.
இந்த வகை மக்களுக்குள்ளும் கூட, வணிகரீதியான வாடகைத் தாய் முறை இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது மேலும் அதில் "வாடகைத் தாய் சேவைகள் அல்லது நடைமுறைகள் அல்லது அதன் கூறு சேவைகள் அல்லது கூறு நடைமுறைகள்" ஆகியவையும் அடங்கும். வாடகைத் தாய்க்கு "மருத்துவச் செலவுகள் மற்றும் வாடகைத் தாயின் காப்பீட்டுத் தொகையைத் தவிர", வாடகைப் பெண்ணுக்குப் பணம், வெகுமதிகள், சலுகைகள் அல்லது கட்டணங்கள் வழங்க முடியாது.
வாடகைத் தாய் முறையைத் தேர்ந்தெடுப்பது எப்படி செய்யப்படுகிறது?
இந்த விவரக்குறிப்புகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க தொடர்புடைய அதிகாரிகள் சட்டத்தின் மூலம் பல நிலைகளில் அமைக்கப்பட்டுள்ளனர். அனைத்து வாடகைத் தாய் கிளினிக்குகளும் அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட வேண்டும், அதன் பிறகுதான் அவர்கள் நடைமுறையை நடத்த முடியும். சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்தியாவில் வாடகைத் தாய் முறையை நடைமுறைப்படுத்தும் கிளினிக்குகளின் எண்ணிக்கை 1,000க்கும் குறைவாக இருக்கும்.
மத்திய மற்றும் மாநில அரசுகள் முறையே தேசிய வாடகைத் தாய் வாரியம் (NSB) மற்றும் மாநில வாடகைத் தாய் வாரியங்களை (SSB) அமைக்க வேண்டும். NSBயின் செயல்பாடுகளில் மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குதல், வாடகைத் தாய் மருத்துவ மனைகளின் நடத்தை விதிகளை வகுத்தல் மற்றும் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்தல் ஆகியவை அடங்கும். இதேபோல், கிளினிக்குகளின் உரிமங்களை வழங்குவதற்கு அல்லது இடைநிறுத்துவதற்கும், சட்டத்தின் விதிகளை மீறும் புகார்களை சரிபார்ப்பதற்கும் மற்றும் பிற ஒத்த பணிகளைச் செய்வதற்கும் தேசிய மற்றும் மாநில அளவில் பொருத்தமான அதிகாரிகள் அமைக்கப்பட்டுள்ளனர்.
உதாரணமாக, நிரூபிக்கப்பட்ட கருவுறாமைக்கான சான்றிதழ்கள்/ நிபுணத்துவ மருத்துவ அறிக்கைகள் மனைவி அல்லது தம்பதியரின் மாவட்ட மருத்துவக் குழுவில் இருந்து கட்டாயம் தேவை. உரிய அதிகாரியால் வழங்கப்பட்ட தகுதிச் சான்றிதழானது, பெற்றோர் ஆக வர இருப்பவர்கள் மற்றும் வாடகைத் தாய் ஆகிய இருவராலும் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்பதைக் காட்டுகிறது. வாடகைத் தாய் கிளினிக்கின் இயக்குனர் அல்லது பொறுப்பாளர் போன்ற பிற தேவையான அதிகாரிகளும் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டதாக திருப்தி அடைய வேண்டும்.
வணிக வாடகைத் தாய் உள்ளிட்ட மற்ற குற்றங்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
சட்டத்தின் சில விமர்சனங்கள் என்ன?
சட்டம் அமலுக்கு வந்த பிறகு தி இந்தியன் எக்ஸ்பிரஸில் எழுதிய சட்ட வர்ணனையாளர் அனில் மல்ஹோத்ரா, சட்டம் குறித்த சில விமர்சனங்களை சுட்டிக்காட்டினார்.
"திருமணமான இந்திய தம்பதிகளுக்கு வரையறுக்கப்பட்ட நிபந்தனைக்குட்பட்ட வாடகைத் தாய் முறையை அனுமதிப்பது மற்றும் பிற நபர்களை தேசியம், திருமண நிலை, பாலியல் நோக்குநிலை அல்லது வயது ஆகியவற்றின் அடிப்படையில் தகுதி நீக்கம் செய்வது சமத்துவத்தின் தேர்வில் தேர்ச்சி பெறாது" என்று அவர் எழுதினார். இனப்பெருக்கம் மற்றும் பெற்றோருக்கான உரிமையை உள்ளடக்கிய இனப்பெருக்க சுயாட்சி அரசாங்கத்தின் எல்லைக்குள் இல்லை என்றும் அவர் கூறினார். "மேலும், மலட்டுத்தன்மை இருக்க வேண்டும் என்பதை வாடகைத் தாய்க்கு கட்டாயமாக்க முடியாது" என்று மல்ஹோத்ரா எழுதினார், மலட்டுத்தன்மையை நிரூபிப்பதற்கான சான்றிதழ், அரசியலமைப்பின் 21 வது பிரிவின் கீழ் வாழும் உரிமையின் ஒரு பகுதியாக தனியுரிமையை மீறுவதாகும், என்றும் அவர் எழுதினார்.
சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தண்டனை ஒட்டுமொத்த வாடகைத் தாய் முறைக்கும் கேடு விளைவிக்கும். 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் குஜராத் தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு வெபினாரில் கருத்தரித்தல், ஐ.வி.எஃப் மற்றும் வாடகைத் தாய் நிபுணரான டாக்டர் நயனா படேல் பேசுகையில், " சட்டத்தின் எந்த விதியையும் மீறியதற்காக மருத்துவ பயிற்சியாளருக்கு, இந்தச் சட்டம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ. 10 லட்சம் அபராதம் ஆகியவற்றை வழங்குகிறது. இது மிகவும் கடுமையான விதியாகும். இது அனைத்து மருத்துவர்களையும் இந்த நடைமுறைகளை செய்வதிலிருந்து தள்ளி வைக்கும், மேலும் அவர்கள் வாடகைத் தாய் நடைமுறைகளை மேற்கொள்ள மாட்டார்கள். உலகில் வேறு எந்த நாட்டிலும் இது போன்ற கடுமையான ஏற்பாடு இல்லை” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.