Advertisment

புதிய சி.பி.ஐ இயக்குனர் பிரவீன் சூட் யார்? டி.கே. சிவக்குமார் அவர் மீது வைத்த குற்றச்சாட்டு என்ன?

கர்நாடகாவில் தற்போது முதல்வர் பட்டியலில் உள்ள டி.கே. சிவக்குமார், பாஜக தொண்டர்கள் மீதான புகார்களை பிரவீன் சூட் பதிவு செய்யவில்லை என ஏற்கனவே புகார் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Praveen Sood the new CBI Director

சி.பி.ஐ புதிய இயக்குனர் பிரவீன் சூட்

ஞாயிற்றுக்கிழமை (மே 14) வெளியிடப்பட்ட அரசாணையின்படி, 1986-ம் ஆண்டு பேட்ச், கர்நாடக கேடர் இந்திய போலீஸ் சர்வீஸ் (ஐபிஎஸ்) அதிகாரி பிரவீன் சூட், மத்திய புலனாய்வுத் துறையின் (சிபிஐ) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான உயர் அதிகாரம் கொண்ட தேர்வுக் குழு இதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது.

Advertisment

தற்போதைய தலைவர் சுபோத் குமார் ஜெய்ஸ்வால் தனது பதவிக்காலத்தை மே 25 ஆம் தேதி நிறைவு செய்வார்.

தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளுக்கு இந்த பதவியில் பிரவீன் சூட் நியமிக்கப்பட உள்ளார்.

ஜெய்ஸ்வாலுக்கு அடுத்தபடியாக நாட்டின் மூத்த ஐபிஎஸ் அதிகாரி சூட் ஆவார். கர்நாடகப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி (கேபிசிசி) தலைவர் டி.கே. சிவக்குமார் அவர் மீதான சமீபத்திய குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு அவரது நியமனம் விரைவில் வந்துள்ளது.

டி.கே. சிவக்குமார் சனிக்கிழமையன்று நடந்த சட்டமன்றத் தேர்தலில் அவரது கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மாநிலத்தில் முதல்வர் பதவிக்கான முக்கிய போட்டியாளராக உள்ளார்.

யார் இந்த பிரவீன் சூட்?

சூட் தற்போது கர்நாடக மாநில காவல்துறையின் தலைமை இயக்குநராக உள்ளார். மேலும் அவர் ஐஐடி டெல்லி மற்றும் ஐஐஎம்-பெங்களூருவின் முன்னாள் மாணவர் ஆவார்.

அதிகாரத்துவத்தில் சேர்ந்த பிறகு, அவர் தனது பணியை Asstt ஆக தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு மைசூர் காவல் கண்காணிப்பாளர், பெல்லாரி மற்றும் ராய்ச்சூர் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றினார். அதற்கு முன்பு பெங்களூர் நகரத்திற்கு காவல்துறை, சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டார்.

1999 ஆம் ஆண்டில், அவர் மொரிஷியஸ் அரசாங்கத்தின் பொலிஸ் ஆலோசகராக 3 ஆண்டுகள் வெளிநாட்டு பிரதிநிதியாக இருந்தார். பின்னர் அவர் நியூயார்க்கில் உள்ள சிராகுஸ் பல்கலைக்கழகத்தின் ஐஐஎம் மற்றும் மேக்ஸ்வெல் ஸ்கூல் ஆஃப் கவர்னன்ஸ் ஆகியவற்றில் பொதுக் கொள்கை மற்றும் நிர்வாகத்தில் முதுகலை பட்டப்படிப்பைப் படிப்பதற்காக ஓய்வு எடுத்தார்.

மேலும் அவர் மைசூர் நகர காவல்துறை ஆணையர் மற்றும் பெங்களூரு போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் பதவிகளை வகித்துள்ளார்.

மேலும், 1996 இல் சிறந்த சேவைக்காக முதலமைச்சரின் தங்கப் பதக்கம், 2002 இல் சிறந்த சேவைக்கான காவல் பதக்கம் மற்றும் 2011 இல் சிறந்த சேவைக்கான ஜனாதிபதியின் காவல் பதக்கம் ஆகியவற்றை அவர் பெற்றுள்ளார்.

பெங்களூரு நகர காவல்துறை ஆணையராகவும், காவல்துறை தலைமை இயக்குநராகவும், சிஐடி, பொருளாதார குற்றங்கள் மற்றும் சிறப்புப் பிரிவுகளாகவும் பணியாற்றியுள்ளார்.

பிரவீன் சூட் மீது டி.கே.சிவகுமார் கூறிய குற்றச்சாட்டு என்ன?

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, காங்கிரஸ் தொண்டர்கள் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன, அன்றைய முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு எதிரான கட்சியின் “PayCM” ஊழல் எதிர்ப்பு பிரச்சாரம் தொடர்பான சில வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.

ஆனால் மாநில பாஜகவினர் மீது எந்த வழக்குகளும் அவர் பதியவில்லை எனக் குற்றஞ்சாட்டினார்.

முன்னதாக, மார்ச் மாதம், 18 ஆம் நூற்றாண்டின் மைசூரு ஆட்சியாளர் திப்பு சுல்தானைக் கொன்ற வொக்கலிகா தலைவர்கள் உரி கவுடா மற்றும் நஞ்சே கவுடா ஆகியோருக்கு பாஜகவினர் மாண்டியாவில் ஒரு நினைவு வளைவு வைத்தனர்.

இந்தக் கூற்றை பல வரலாற்று ஆய்வாளர்கள் எதிர்க்கின்றனர். மேலும் இந்த வளைவு பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு முன்னர் கட்டப்பட்டது.

மேலும், மாநிலத்தில் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், 59 வயதான காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் சபதம் செய்து அவரை "பிஜேபியின் முகவர்" என்று முத்திரை குத்தினார்.

சிபிஐ இயக்குனரை நியமிப்பது யார்?

சிபிஐ தலைவரை தேர்ந்தெடுக்கும் குழுவில் பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் இந்திய தலைமை நீதிபதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தின் வினீத் நரேன் தீர்ப்பு (1997) மற்றும் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம், 2013 மூலம் டெல்லி சிறப்புக் காவல் ஸ்தாபன (டிஎஸ்பிஇ) சட்டம், 1946ல் செய்யப்பட்ட மாற்றங்கள் ஆகியவற்றால் நியமனம் செயல்முறை நிறுவப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில், மோடியும் தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட்டும் அடுத்த சிபிஐ தலைவராக சூட்டை நியமிக்க ஒப்புக்கொண்டபோது, குழுவின் மூன்றாவது உறுப்பினரான மக்களவையின் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, போலீஸ் அதிகாரியின் தேர்வை எதிர்த்தார்” என கூறியிருந்தது.

சிபிஐ தலைவர் பதவிக்கு பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறை (DoPT) முன்பு கிட்டத்தட்ட 115 பெயர்களின் பட்டியலை அனுப்பியதாக வட்டாரங்கள் செய்தித்தாளிடம் தெரிவித்தன.

சவுத்ரி இதைக் குறிப்பிட்டு, பட்டியலில் உள்ள அதிகாரிகளின் சேவைப் பதிவுகள், தனிப்பட்ட விவரங்கள் மற்றும் நேர்மைக்கான ஆவணங்கள் தனக்கு கிடைக்கவில்லை என்றும் வாதிட்டார்.

மேலும், பெண் அதிகாரிகள் மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்களை அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர் கூறியதாக தெரிகிறது.

இந்த பதவிக்கு தாஜ் ஹாசன், தீயணைப்பு சேவை, குடிமைத் தற்காப்பு மற்றும் ஊர்க்காவல் படையினர் மற்றும் மத்தியப் பிரதேச டிஜிபி சுதிர் குமார் சக்சேனா ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Cbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment