Advertisment

சவுதி அரேபியாவின் 81 பேர் மரண தண்டனை ஈரானில் பதற்றத்தை ஏற்படுத்துவது ஏன்?

81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட அடுத்த நாளே, சவுதி அரேபியாவுடனான பேச்சுவார்த்தையை ஈரான் அரசு நிறுத்தி வைத்துள்ளது.

author-image
WebDesk
New Update
சவுதி அரேபியாவின் 81 பேர் மரண தண்டனை ஈரானில் பதற்றத்தை ஏற்படுத்துவது ஏன்?

சவுதி அரேபியாவில் சமீபத்தில் வரலாற்றில் மிகப்பெரிய எண்ணிக்கையாக ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதில் கொலைக் குற்றவாளிகள், அல்-கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் உள்ளனர். ஏழு ஏமன் நாட்டினரும், ஒரு சிரியா நாட்டினரையும் தவிர மற்ற அனைவரும் சவுதி அரேபியர்கள் ஆவர்.

Advertisment

இந்த மரண தண்டனை விதிக்கப்பட்ட அடுத்த நாளே, ஈரான் அரசு சவூதி அரேபியாவுடனான பேச்சுவார்த்தைகளை சிறிது காலத்திற்கு நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு நெருக்கமான ஒரு செய்தி நிறுவனமான நூர் நியூஸ் வெளியிட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஐந்தாவது சுற்று பேச்சுவார்த்தை ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடைபெறவிருந்த நிலையில், தற்போது காரணம் அறிவிக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் யார்?

சீனா, ஈராக், வியட்நாம், ஈரான் ஆகிய நாடுகளை போல் சவுதி அரேபியாவும் உலகில் அதிக எண்ணிக்கையிலான மரணதண்டனைகளை நிறைவேற்றும் நாடுகளில் ஒன்றாக உள்ளது. சவுதி அரேபியா இதுவரை 800 க்கும் மேற்பட்ட மரணதண்டனைகளை நிறைவேற்றியுள்ளது. 2019 ஆம் ஆண்டில் மட்டும் 184 மரணதண்டனைகள் நிறைவேற்றியுள்ளது.

சமீபத்திய 81 பேர் மரண தண்டனை குறித்து செய்தி வெளியிட்ட சவுதி பிரஸ் ஏஜென்சி, மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அப்பாவி ஆண்கள், பெண்கள்,குழந்தைகளைக் கொன்றவர்களும், ஐஎஸ்ஐஎஸ், அல்-கொய்தா மற்றும் ஹூதிகள் உள்ளிட்ட வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தவர்களும் ஆவர்.

இது தவிர, கடத்தல், பாலியல் வன்புணர்வு, சவூதி அரேபியாவிற்கு ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளை கடத்துதல் போன்ற குற்றங்களின் தண்டனைகளும் அடங்கும் என தெரிவித்துள்ளது.

ஷியா-சன்னி பிரிவு

சவுதி அரேபியா - ஈரான் இடையிலான உறவில் மத வேறுபாடு முக்கிய பங்கு வகிக்கிறது. ஈரானில் ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். அதேசமயம் சவுதி அரேபியாவில் சன்னி முஸ்லிம்கள் உள்ளனர். உலகளவில் அதிக எண்ணிக்கையில் சன்னி பிரிவினரே வாழ்கின்றனர்.

இந்த மத வேறுபாடுகள் மத்திய கிழக்கின் எஞ்சிய பகுதிகளிலும் ஊடுருவியுள்ளன. சவுதி அரேபியா, ஈரான் போன்ற நாடுகள், சன்னி மற்றும் ஷியா முஸ்லிம்களின் மக்கள்தொகையை நம்பியுள்ளன.

உறவும் பதற்றமும்

இரு நாடுகளுக்கும் இடையிலான வரிசலின் தொடக்கம் குறைந்தது நான்கு தசாப்தங்களுக்கு முந்தையவை ஆகும். சவுதி அரேபியாவை சேர்ந்த முஸ்லீம் உலகின் தலைவர், அதே பதவிக்கு போட்டியிடும் மற்றொரு தலைவரை சந்திக்க வேண்டியதாக இருந்தது.

1979 இல், ஈரானியர்கள் புரட்சியின் போது, சவூதி அரேபிய முடியாட்சி ஈரான் இஸ்லாமியக் குடியரசின் உருவாக்கத்தால் அச்சுறுத்தப்பட்டது. அதுவரை முஹம்மது நபி பிறப்பிடமான மெக்கா மற்றும் அவர் அடக்கம் செய்யப்பட்ட மதீனா இடங்கள் அடங்கிய சவுதி அரேபியாவே முஸ்லிம் உலகின் தலைநகரமாக கருதப்பட்டது. ஆனால், ஈரானில் ஏற்பட்ட புரட்சியின் காரணமாக மாற்று தலைநகரம் உருவாக வழிவகுத்தது.

தொடர்ந்து, ஈரான் மீது ஈராக் படையெடுப்பை தொடங்கியதையடுத்து, அங்கு போர் உருவானது. இந்த நேரத்தில், சவுதி அரேபியா ஈராக்கை ஆதரித்தது. இது, ஈரானுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. 2003 இல், ஷியா பிரிவினர் அதிகளவில் வசிக்கும் ஈராக் மீது அமெரிக்க படையெடுப்பு நடத்தியபோது, சன்னி சிறுபான்மை உறுப்பினரான சதாம் ஹுசைனை நீக்கப்பட்டார். அதன் காரணமாக, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான ஷியாக்கள் இடத்தை ஆக்கிரமிக்க வாய்ப்பளித்தது.

2010 டிசம்பரில் அதிகாரிகளின் துன்புறுத்தலால் தீக்குளித்த துனிசிய பழங்கள் விற்பனையாளரின் மரணம், 'அரபு ஸ்பிரிங்ஸ்' என்கிற புரட்சியை உருவாக்கியது. இது, மத்திய கிழக்கின் மற்ற பகுதிகளில் ஜனநாயக சார்பு புரட்சிகளுக்கு வழிவகுத்தது

ஆனால், 2003 இல், ஈராக்கில் சதாம் உசேன் ஆட்சியின் வீழ்ச்சி, சவூதி அரேபியாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான போட்டி உணர்வுகளை அதிகப்படுத்தியது.

உதாரணமாக, சன்னி பிரிவினர் பெரும்பான்மையான சிரியாவின் பஷர் அல்-அசாத்தின் ஆட்சிக்கு ஈரான் ஆதரவு தெரிவித்தது. அதேவேளையில், சவுதி அரேபியா அவரது சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டங்களை ஆதரித்தது.

2011 இல் ஷியா பெரும்பான்மையான பஹ்ரைனில் ஜனநாயக சார்பு போராட்டங்களை ஈரான் ஆதரித்தது, அப்போது, சவுதி அரேபியா தனது படைகளை ஹமாத் மன்னர் ஆட்சிக்கு அனுப்பி எதிரிகளை அழிக்க உதவியது.

2016ல் இரு நாடுகளுக்கும் இடையே ராஜதந்திர உறவு முடிவுக்கு வந்தது. அப்போது, ஷியா மதகுரு நிம்ர் அல் நிம்ரை மற்ற சில கைதிகளுடன் சவுதி அரேபியா தூக்கில்லிட்டது. அப்போது, தெஹ்ரானில் உள்ள சவுதி அரேபிய தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது சவூதி அரேபியாவை தூதரக ரீதியான உறவுகளையும் நிறுத்த வழிவகுத்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Saudi Arabia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment