Advertisment

இந்தியர்களின் தரவுகளை ஏன் சேகரிக்கிறது சீனா?

ஆனால் இந்த தளங்களில் அல்லது இடைத்தரகர்கள் சீனாவைப் போன்ற ஒரு இறையாண்மை கொண்ட தேசத்திற்கு எதிராக செயல்பட முடியுமா?

author-image
WebDesk
New Update
Why China harvests India data

P Vaidyanathan Iyer , Jay Mazoomdaar

Advertisment

Why China harvests India data :  தி இந்தியன் எக்ஸ்பிரஸின் மூன்று பகுதி விசாரணைத் தொடரைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் தேசிய சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளரின் கீழ் ஒரு “நிபுணர் குழு” அமைக்க இந்திய அரசு புதன்கிழமை முடிவு செய்தது. இந்த குழு அறிக்கைகளை ஆய்வு செய்து, அவற்றின் தாக்கங்களை மதிப்பீடு செய்யும், சட்ட மீறல்கள் ஏதேனும் இருந்தால், அதன் பரிந்துரைகளை 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்கும் என்று தெரிய வந்துள்ளது. 

சீன அரசு மற்றும் இராணுவத்துடனான தொடர்புகளைக் கொண்ட ஷென்சென் பகுதியை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஜென்ஹுவா டேட்டா, உலகெங்கிலும் குறைந்தது 10,000 இந்தியர்கள் உட்பட உலகெங்கிலும் 2.5 மில்லியனுக்கும் அதிகமான நபர்களை எவ்வாறு கண்காணித்து வருகிறது என்பதை இந்தத் தொடர் வெளிப்படுத்துகிறது. விசாரணை பலவிதமான பதில்களை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

இந்தியா-சீனா எல்லையில் நிலவும் சூழ்நிலை, நடவடிக்கைகளின் அளவு மற்றும் சட்டபூர்வமான தன்மை, சம்பந்தப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் இறுதிப் பயன்பாட்டு சாத்தியக்கூறுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சூழலை வடிவமைக்க இந்தியன் எக்ஸ்பிரஸ் முயற்சிக்கிறது.

வேவு பார்க்கும் சீனா ; பின்னணி என்ன?

கடந்த பத்தாண்டுகளில், வேகமாக வளர்ந்து வரும் இணைய தொழில்நுட்ப வளர்ச்சி, குறைந்த விலையிலான ஸ்மார்ட்போன்கள், மலிவான விலையில் கிடைக்கும் டேட்டா போன்றவை இந்தியாவில் இருக்கும் நகர்புற மற்றும் ஊரக மக்களின் வாழ்வை மாற்றிவிட்டது.

ஸ்மார்ட்போன்கள் எங்கும் நிறைந்திருப்பதால், தொழில்நுட்பம் அணுகலை மேம்படுத்துகிறது. மேலும் அனைத்து போன்களும் டேட்டா டிவைஸ்களாக இருக்கிறது. மலிவான விலையில் அதாவது ரூ. 6.5 க்கு ஒரு ஜிபி டேட்டா கிடைக்கிறது. நரேந்திர மோடி தலைமையிலான அரசு டிஜிட்டல் மயத்திற்கு அரசு சேவைகளை மாற்றியது மற்றும் ரூ. 500 மற்றும் ஆயிரம் மதிப்பிழக்கத்திற்கு பிறகு மொபைல் போன்கள் ஒவ்வொருவரின் கே.ஒய்.சி. டிவைஸாக மாறியுள்ளது. ஆதார் அங்கீகாரம் மொபைல் தொலைபேசியால் எளிதாக்கப்படுகிறது; வங்கி கணக்குகளுக்கு இடையில் உடனடி நிதி பரிமாற்றம் UPI வழியாக செயல்படுத்தப்படுகிறது.

இந்த ஏப்ரல் - ஜூன் மாதங்களில் விற்பனையான நான்கில் மூன்று ஸ்மார்ட்போன்கள் சீன பிராண்டுகள். அதே போன்று இதற்கு முந்தைய காலாண்டில் விற்பனையான ஐந்தில் நான்கு ஸ்மார்ட்போன்கள் சீன பிராண்டுகள். அவை விற்பனைக்கு வரும்போதே முகநூல், கூகுள், யுடியூப் மற்றும் நிறைய சமூக வலைதள பக்கங்களை கொண்டிருக்கிறது. இந்தியா இதுவரை டிக்டாக், கேம்ஸ்கேனர், மற்றும் பப்ஜி உள்ளிட்ட 224 சீன செயலிகளை முடக்கியுள்ளது. அமெரிக்காவில், விரையில் டிக்டாக் கைமாற உள்ளது. இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளில் எடுக்கப்படும் இந்த முடிவுகளால் செயலிகள் மட்டத்திலும் பைப் லெவலிலும் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தனிப்பட்ட தரவுகள் சமரசம் செய்யப்பட்டு சீன செர்வர்களுக்கு அனுப்பப்படலாம். பெய்ஜிங் இதற்கு மறுப்பு தெரிவித்தாலும் நாடுகள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கின்றன. குறிப்பாக ஒரு உறுதியான மற்றும் லட்சிய தன்மை கொண்ட சீனாவை இது இன்று விரிவாக்கவாதியாக அடையாளப்படுத்துகிறது.

சட்டபூர்வமான கேள்வி

ஜென்ஹூவா டேட்டா நிறுவனம், ஒரு டஜனுக்கும் மேற்பட்ட சமூக வலைதள பக்கங்களில் இருந்து தனிப்பட்ட தரவுகளை ஸ்க்ராப் செய்துள்ளது. முகநூல், ட்விட்டர், விக்கி, மீடியம், யுடியூப் மற்றும் இன்ஸ்டகிராம் அளித்த ஒப்புதலை மூன்றாம் தரப்பினருக்கு தரப்பட்ட ஒப்புதலாக பார்க்க முடியுமா? இருபது வருடங்களுக்கு முன்பு இது பார்க்க சரியானதாக இருக்கலாம். ஆனால் செயலாக்க திறனில் அதிவேக உயர்வு, பெரிய தரவு பகுப்பாய்வுகளில் விரைவான பரிணாமம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவை முன்னுதாரணத்தை முற்றிலும் மாற்றிவிட்டன.

நிறுவனங்கள் தங்கள் தளங்களில் கூறியதில் உண்மை ஏதும் இல்லை என்பது மிகவும் வெட்ட வெளிச்சமாகிறது. மேலும் தற்ஓத் நிறுவனங்கள் பொறுப்புகள் இல்லை என்பதையே பதிவு செய்கிறது. பெர்சனல் டேட்டா ப்ரொடெக்சன் பில் சட்டமாக்கப்பட்டால், பொறுப்புகள் அனைத்தும் தளங்கள் மீது வைக்கப்படும். அது ட்விட்டராக இருந்தாலும் சரி ஃபேஸ்புக்காக இருந்தாலும் சரி. அக்கௌண்ட் அக்கிரெகேட்டர்ஸ் மற்றும் ஒப்புதல் மேலாளர்கள் போன்ற இடைத்தரகர்கள் இருப்பார்கள், அவர்கள் இந்த தளங்களில் ஒரு பார்வை வைத்திருப்பார்கள், மேலும் அந்த தளங்களை தவறாக பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளது. ஆனால் இந்த தளங்களில் அல்லது இடைத்தரகர்கள் சீனாவைப் போன்ற ஒரு இறையாண்மை கொண்ட தேசத்திற்கு எதிராக செயல்பட முடியுமா, அது தவறான பயன்பாட்டின் இறுதி ஆதாரமாக இருந்தால்?

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

செயல்பாடுகள் மற்றும் அளவு

உலகெங்கிலும் உள்ள நாடுகளிலிருந்து சுமார் 2.5 மில்லியன் முக்கிய நபர்கள் மற்றும் 650,000 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பற்றிய தகவல்களை ஜென்ஹுவா டேட்டா சேகரித்துள்ளது. இந்தியாவில் இருக்கும் முக்கிய நபர்கள் அவர்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களை அவர்களின் சமூக வலைதளங்கள் வாயிலாக கண்காணித்து வருகிறது. இந்தியாவில் முக்கிய நபர்கள். அமைச்சர்கள், வணிகர்கள், தொழில்முனைவோர், பாதுகாப்பு பணியாளர்கள், அரசுஅதிகாரிகள், அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், மற்றும் கல்வியாளர்களை ஆராய்ந்து வருகிறது சீனா. ஏற்கனவே நன்றாக தெரிந்த பிரபலங்களை வேவு பார்ப்பதில் என்ன பயன்? ஒரு தனிப்பட்ட பிரபலத்தை தொடரும் நண்பர்கள் மற்றும் ஃபாலோவர்கள் ஒருவரைப் பற்றி ஒருவர் நிறைய தகவல்களை அந்த தளத்தில் வெளிப்படுத்துகிறார்கள். ஜென்ஹூவா டேட்டா நிறுவனம் அனைத்து ஃபாலோவர்கள் குறித்தும் கண்டு கொள்ளவில்லை. அது பெரிய தரவை பற்றிய விசயம்.

அப்படியானால், பல நிறுவனங்கள் இந்தியாவிலும் பிற நாடுகளிலும் பல ஆண்டுகளாக இதைச் செய்கின்றனவா?  ஓஎஸ்ஐஎன்டி (ஓப்பன் சோர்ஸ் இன்டலிஜென்ஸ்) சம்பந்தப்பட்ட எந்த பெரிய தரவு செயல்பாட்டையும் போலவே, ஷென்ஹுவா டேட்டாவும் தொகுதிகளில் செயல்படுகிறது.

முதலில், ஸ்வீப்: இது எத்தனை நபர்களைக் கண்காணிக்கிறது. இரண்டாவதாக, ஆழம்: அது கண்காணிக்கும் ஒவ்வொரு நபரைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்க எத்தனை தரவு புள்ளிகள் ஈடுபடுகின்றன. ‘ஹைப்ரிட் வார்ஃபேருக்கான’ தரவுத்தளத்தின் சாத்தியம் இரு காரணிகளையும் சார்ந்துள்ளது: அவை எத்தனை நபர்கள் குறித்து அறிந்திருக்கின்றன, அவர்கள் ஒவ்வொருவர் பற்றியும் எவ்வளவு தெரியும் என்பது தான். ஒவ்வொரு பெயரின் கீழ் இருக்கும் அனைத்து வரிசைகளையும் உடனே நிரப்பிவிட முடியாது. ஆனால் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அடைய இருக்கும் இலக்கு குறித்து டேட்டாவை கசியவிடும் இது. ஏற்கனவே 5 பில்லியன் தரவுகல் எண்ணப்பட்டு வருகிறது. இதனை யூசபிள் டேட்டா என்று அழைக்கின்றார்கள். இது தான் இந்த திட்டத்தில் முதலீட்டை அதிகரிக்க போதுமானதாக இருக்கிறது.

நிறுவனங்கள் ஒழுங்குமுறைக்கு உட்பட்டவை, மேலும் அவை தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்களால் பொறுப்புக்கூறப்படலாம் அல்லது கேள்விகளைக் கேட்கலாம். இதற்கு நேர்மாறாக, ஒரு சீன நிறுவனம், ஒரு ஒளிபுகா சர்வாதிகார அமைப்பிலிருந்து கொண்டு , அதிக திறந்த ஜனநாயக அமைப்பில் பெரிய தரவுகளை சுரங்கப்படுத்துவது போன்ற சோதனைகள் மற்றும் நிலுவைகளைக் கொண்டிருக்கவில்லை. மேலும், நாடுகள் போருக்குச் செல்லும்போது பிரச்சாரம் - தவறான தகவல், மற்றும் போலி செய்திகள் - நிகழ்ச்சி நிரலில் எப்போதும் ஒரு பெரிய பொருளாக இருந்து வருகிறது. ஆனால் இப்போது பெரிய தரவு அனுமதிப்பது என்னவென்றால், மில்லியன் கணக்கானவர்களுக்கு தரவை உடனடியாகத் தனிப்பயனாக்குவது தான். .

முதல்வர்கள், அரசியல்வாதிகள், ஜம்முகாஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் ஆராய்ச்சியாளர்கள், 6000க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் ஆகியோரை ஆண்டுக்கணக்காக மேற்பார்வையிட்டு வருகின்றனர். , அதிநவீன பெரிய-தரவு கருவிகளால் பகுப்பாய்வு செய்யப்பட்டு இறுதி பயனரின் படி செயலாக்கக்கூடிய ஒரு அதிர்ச்சியூட்டும் தகவலை அளிக்கிறது.

 

India China
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment