கருக்கலைப்பை அர்ஜென்டினா ஏன் சட்டப்பூர்வமாக்கியது?

Why Legalisation of abortion is historic 1921 முதல் நடைமுறையில் உள்ள இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அங்குள்ள ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

Why Legalisation of abortion is historic explained in Tamil
Abortion-rights activists hold hangers in Argentina

Legalisation of Abortion in Argentina Tamil News : உலகில் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட கருக்கலைப்புச் சட்டங்களைக் கொண்ட அர்ஜென்டினா காங்கிரஸ், கர்ப்பகாலத்தின் 14-வது வாரம் வரையிலான கருக்கலைப்பை இந்த வாரம் சட்டப்பூர்வமாக்கியது.

இந்த மாற்றம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது மற்றும் அதன் தாக்கங்கள் அர்ஜென்டினாவிற்கு அப்பால், லத்தீன் அமெரிக்காவிலும் காணப்படுகின்றன.

இந்த மசோதாவின் பெண்கள், ஆர்வலர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கடந்த புதன்கிழமை புயெனஸ் அயர்ஸின் தெருக்களில் வெள்ளம் போல் திரண்டு, இந்தத் தீர்ப்பை ஆரவாரம் செய்து அழுதனர். அதே நேரத்தில் விமர்சகர்களும் எதிர்ப்பாளர்களும் போராட்டங்களை நடத்துவதைக் காண முடிந்தது.

இந்த மசோதாவின் அர்த்தம் என்ன?

இந்த மசோதா நிறைவேற்றப்படுவதற்கு முன்பு, கற்பழிப்பு வழக்குகளில் அல்லது பெண்ணின் உடல்நிலை கடுமையான ஆபத்தில் இருக்கும்போது மட்டுமே கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கப்பட்டது. 1921 முதல் நடைமுறையில் உள்ள இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அங்குள்ள ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கருக்கலைப்பு மசோதாவை அந்நாடு கிட்டத்தட்ட நிறைவேற்றியது. ஆனால், குறுகிய காலகட்டத்தில் தோற்கடிக்கப்பட்டது.
இந்த மசோதா, பெண்களுக்கு தங்கள் சொந்த உடல் மீது அதிக சுயாட்சி மற்றும் அவர்களின் இனப்பெருக்க உரிமைகளை கட்டுப்படுத்தவும் மேலும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் இளம் தாய்மார்களுக்கு சிறந்த சுகாதார சேவையை வழங்குவோம் உதவும்.

இது ஏன் முக்கிய மசோதா?

இதற்கு முன், அர்ஜென்டினாவில் கருக்கலைப்பு சட்டம் எதிரானது என்பதால் பெண்கள் மற்றும் பெண்கள் சட்டவிரோத மற்றும் பாதுகாப்பற்ற நடைமுறைகளுக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சமூக-பொருளாதார ரீதியாக பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்த பெண்களுக்கு, கருக்கலைப்புக்கான பாதுகாப்பான மருத்துவ முறைகளை அணுகுவதற்கான வாய்ப்பு மேலும் குறுகியது. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் கூற்றுப்படி, பாதுகாப்பற்ற கருக்கலைப்புதான் நாட்டின் தாய் இறப்புக்கு முக்கிய காரணமாக இருந்தது.

கத்தோலிக்க திருச்சபையும் சுவிசேஷ சமூகமும் அர்ஜென்டினாவில் மகத்தான சக்தியையும் செல்வாக்கையும் கொண்டுள்ளன. மேலும், இந்த மசோதாவை நிறைவேற்றுவதை கடுமையாக எதிர்த்தன. உண்மையில், பல தசாப்தங்களாக, கத்தோலிக்க திருச்சபையின் நம்பிக்கைகளைப் பின்பற்றி, கருத்தடை சாதனங்களின் விற்பனை கூட நாட்டில் தடைசெய்யப்பட்டது.

அர்ஜென்டினாவில் பெண்களுக்கு இந்த மசோதா ஏன் முக்கியமானது என்பதை விளக்கும் எண்ணற்ற வழக்குகள் உள்ளன. 2006-ம் ஆண்டில், கடுமையான உடல் மற்றும் மனநல குறைபாடுகள் கொண்ட பாலியல் பலாத்காரத்திலிருந்து தப்பிய 25 வயதுடைய பெண்ணின் குடும்பம் கருக்கலைப்பு செய்வதற்கான நீதிமன்ற அங்கீகாரத்திற்காக மனு தாக்கல் செய்தது. நீதிமன்றம் அனுமதி வழங்கிய போதிலும், தடை உத்தரவைக் கோரிய ஒரு கத்தோலிக்க அமைப்பால் இந்த நடைமுறை தடுக்கப்பட்டது. குடும்பத்தினர் தடை உத்தரவை மேல்முறையீடு செய்து நீதிமன்றம் அனுமதித்த பின்னரே கருக்கலைப்பை தொடர முடியும்.

சட்டமியற்றுபவர்கள் என்ன சொல்கிறார்கள்?

இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட மராத்தான் அமர்வில் 38 செனட்டர்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர், 29 பேர் எதிராகவும் மற்றும் ஒரு வாக்காளர் பெங்கேற்காமலும் இருந்தனர். இந்த மசோதா, ஜனாதிபதி ஆல்பர்டோ பெர்னாண்டஸின் பிரச்சார வாக்குறுதிகளில் ஒன்று. 2018-ல் நிராகரிக்கப்பட்ட பின்னர் அதனை மீண்டும் அறிமுகப்படுத்துவதாக அவர் கூறியிருந்தார். “நான் கத்தோலிக்கன், ஆனால் அனைவருக்கும் சட்டமியற்ற வேண்டும்” என்று பெர்னாண்டஸ் கூறினார்.

மசோதா நிறைவேற்றப்பட்ட பின், “இன்று, நாங்கள் ஒரு சிறந்த சமூகம். இது பெண்களின் உரிமைகளை விரிவுபடுத்துகிறது மற்றும் பொது சுகாதாரத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது” என ஜனாதிபதி ட்வீட் செய்தார்.

சட்டத்தை உருவாக்கிய ஜனாதிபதியின் சட்ட மற்றும் தொழில்நுட்ப செயலாளர் வில்மா இப்ரா, “ரகசிய கருக்கலைப்பில் ஒரு பெண் இனி கொல்லப்பட மாட்டார்” என்று பிபிசி செய்தியாளர்களிடம் பகிர்ந்துள்ளார்.

ஆனால், சட்டத்திற்கு எதிராக வாக்களித்த சட்டமியற்றுபவர்கள் தொடர்ந்து தங்கள் நிலைப்பாட்டில் நிற்கின்றனர். “கர்ப்பத்தின் குறுக்கீடு மிக பெரிய சோகம். இது வளர்ந்து வரும் மற்றிருவரின் வாழ்க்கையை திடீரென முடிக்கிறது” என்று பிபிசி சட்டத்திற்கு எதிராக வாக்களித்த ஒரு சட்டமன்ற உறுப்பினர் இன்னெஸ் பிளாஸ் கூறினார்.

லத்தீன் அமெரிக்காவில் இது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

இந்தச் சட்டம் இயற்றப்படுவது லத்தீன் அமெரிக்காவின் பிற நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆர்வலர்கள் நம்புகின்றனர். தற்போதுவரை, நிகரகுவா, எல் சால்வடார் மற்றும் டொமினிகன் குடியரசில் கருக்கலைப்பு செய்வது சட்டவிரோதமான செயல். உருகுவே, கியூபா, கயானா மற்றும் மெக்ஸிகோவின் சில பகுதிகளில், பெண்கள் கருக்கலைப்பு செய்யக் கோரலாம். ஆனால், குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் மட்டுமே அவை சாத்தியம். கர்ப்பகாலத்தின் வாரங்களின் எண்ணிக்கையில் ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் சொந்த சட்டங்கள் மாறுபடும். சிறை உட்பட பெண்கள் மற்றும் பெண்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனைகள் மற்றும் அபராதங்களும் நாடுகளில் உள்ளன.

அர்ஜென்டினாவில் புதிய சட்டம் இருந்தபோதிலும், இப்பகுதியில் பிரச்சனைகள் வெகு தொலைவில் உள்ளது என்பதை பெண்கள் உரிமை ஆர்வலர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். கருக்கலைப்பு எதிர்ப்பு குழுக்கள் மற்றும் அவர்களின் மத மற்றும் அரசியல் ஆதரவாளர்கள் இந்த செயல்பாட்டில் எந்த முன்னேற்றத்தையும் தடுக்க முயன்றனர். மிக சமீபத்தில், பிரேசிலின் பழமைவாத அதிபர் ஜெய்ர் போல்சனாரோ நாட்டில் கருக்கலைப்புக்கு ஆதரவான எந்தவொரு மசோதாவையும் நிராகரிப்பதாக உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: Why legalisation of abortion is historic in argentina explained in tamil

Exit mobile version