உ.பி. தேர்தல் பிரச்சாரங்களில் அதிக முக்கியத்துவம் பெறும் மின்சாரம்; காரணம் என்ன?

விவசாய பாசனத்திற்கு "இலவச மின்சாரம்" உத்தரவாதத்துடன் இந்த வாரம் வெளியிடப்பட்ட சமாஜ்வாடி கட்சியின் தேர்தல் அறிக்கையில் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. 24 மணி நேரமும் மின்சாரம் என்ற வாக்குறுதியை முன்பே அறிவித்த சமாஜ்வாடி கட்சியின் தலைவர்கள் தற்போது 300 யூனிட் இலவச மின்சாரம் என்ற அறிவிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

விவசாய பாசனத்திற்கு "இலவச மின்சாரம்" உத்தரவாதத்துடன் இந்த வாரம் வெளியிடப்பட்ட சமாஜ்வாடி கட்சியின் தேர்தல் அறிக்கையில் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. 24 மணி நேரமும் மின்சாரம் என்ற வாக்குறுதியை முன்பே அறிவித்த சமாஜ்வாடி கட்சியின் தலைவர்கள் தற்போது 300 யூனிட் இலவச மின்சாரம் என்ற அறிவிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
உ.பி. தேர்தல் பிரச்சாரங்களில் அதிக முக்கியத்துவம் பெறும்  மின்சாரம்; காரணம் என்ன?

Maulshree Seth

Advertisment

Uttar Pradesh poll campaigns: உ.பி. சட்டமன்ற தேர்தல் பிரச்சாரங்களில் முக்கிய இடம் பெற்ற ஒன்றாக இருக்கிறது மின்சாரம். பிரச்சாரக் கூட்டங்கள், தேர்தல் அறிக்கைகள், மக்கள் அரசிடம் இருந்து எனன் எதிர்பார்க்கின்றனர் என்பது உட்பட அனைத்திலும் மின்சாரம் இடம் பெற்றிருக்கிறது. தற்போது 24 மணி நேரமும் மின்விநியோகம் என்ற இலக்கை நோக்கி நடைபோடுகிறது உ.பி.

விலை

உ.பி.யில் மொத்தம் 3 கோடி மின் நுகர்வோர்கள் வசித்து வருகின்றனர். கடந்த 8 ஆண்டுகளில் வீட்டு தேவைக்காக பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கான கட்டணம் 2 மடங்கு அதிகரித்துவிட்டது. சமாஜ்வாடி கட்சியின் ஆட்சியின் போது தான் அதிகமாக மின்சாரத்திற்கு கட்டணம் உயர்த்தப்பட்டது. ஆனாலும் பாஜக அரசு தொடர்ந்து மின்சார கட்டணத்தை அதிகரித்துள்ளது.

Advertisment
Advertisements

தற்போது, உ.பி.யில் உள்ள உள்நாட்டு நுகர்வோர்களுக்கான கட்டணம், நிலையான கட்டணங்கள் உட்பட, ஒரு கிலோவாட்டுக்கு மாதத்திற்கு ரூ.110 ஆக உள்ளது. மேலும் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கான விலை ரூ. 7 வரை அதிகரிக்கப்படுகிறது. இறுதியாக 2018-19 கால கட்டத்தில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது.

உத்தரப் பிரதேச பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் ஒரு உயர்வை பரிந்துரைக்க முடியும் என்றாலும், முடிவு உத்தரபிரதேச மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் உள்ளது. 2020-21 ஆம் ஆண்டில் உயர்வு பரிந்துரைக்கப்பட்டதாகவும் ஆனால் ஆணையம் அதை நிராகரித்ததாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன. கமிஷன் ஒரு தன்னாட்சி அமைப்பாக இருப்பதால், அரசாங்கம், மின் கட்டணத்தை உயர்த்தவும் குறைக்கவும் இதன் அனுமதியை பெற வேண்டும்.

கோவிட் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது, ஆனால் அரசாங்கம் ஜனவரி மாதம் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்பு செயல்பட்டது, விவசாயிகள் குழாய் கிணறுகளைப் பயன்படுத்துவதற்கான கட்டணத்தை 50% குறைத்தது. பல வாக்காளர்களுக்கு, இது ஒரு முன்னெடுப்பாக தென்பட்டது.

வாக்குறுதி

சமாஜ்வாடி கட்சி ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட்டுகள் வரை இலவசமாக மின்சாரத்தை வழங்குவோம் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது. அகிலேஷ் யாதவ், மக்கள் தங்கள் மின்சாரக் கட்டணத்தில் அல்லது ஆதார் அட்டைகளைப் பயன்படுத்தி புதிய அல்லது சாத்தியமான நுகர்வோர் என்ற பெயரில் திட்டத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டார். விவசாய பாசனத்திற்கு "இலவச மின்சாரம்" உத்தரவாதத்துடன் இந்த வாரம் வெளியிடப்பட்ட சமாஜ்வாடி கட்சியின் தேர்தல் அறிக்கையில் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. 24 மணி நேரமும் மின்சாரம் என்ற வாக்குறுதியை முன்பே அறிவித்த சமாஜ்வாடி கட்சியின் தலைவர்கள் தற்போது 300 யூனிட் இலவச மின்சாரம் என்ற அறிவிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

அடுத்த 5 ஆண்டுகளுக்கு விவசாயிகளுக்கு பாசனத்திற்கு இலவச மின்சாரம் என்று தன்னுடைய தேர்தல் அறிக்கையின் முதல் அறிவிப்பாக இதனை அறிவித்துள்ளது பாஜக. 2017ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது 24 மணி நேர மின் விநியோகம் அனைத்து குடும்பத்தினருக்கும் வழங்கப்படும் என்று அறிவித்தது. ஆனால் இம்முறை அதனை கூறவில்லை. ஆனால் யோகியின் அரசு கிராமப்புற பகுதிகளில் 18 மணி நேர மின்சாரமும், நகர்ப்புறங்களில் 24 மணி நேர மின்சாரத்தையும் உறுதி செய்துள்ளது என்று அக்கட்சியினர் கூறுகின்றனர்.

சிக்கல்கள்

சமாஜ்வாடி கட்சி அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் பட்சத்தில் அரசுக்கு வருடத்திற்கு ரூ. 25 ஆயிரம் கோடிக்கு மேல் செலவாகும்.

உ.பி. மாநில மின் நுகர்வோர் அமைப்பின் தலைவராக பணியாற்றி வரும் அவதேஷ் வெர்மா பல ஆண்டுகளாக உ.பியில் மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார். உ.பியில் வீட்டு மின் பயன்பாட்டிற்கான கட்டணத்தை 50% வரை சமாஜ்வாடி ஆட்சியின் போதும், தற்போதைய பாஜக ஆட்சியின் போது 28% வரையும் உயர்த்தியுள்ளனர். உ.பியில் அதிக அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டாலும் கூட மின்கட்டணம் இரட்டிப்பு மடங்கு அதிகரித்துள்ளது.

எந்தவொரு அரசாங்கமும் சம்பந்தப்பட்ட தொகையைக் கொடுத்து கட்டணத்தை தள்ளுபடி செய்வது சவாலான ஒன்றாக தான் இருக்கும். அவரைப் பொறுத்தவரை, ஒரு சிறந்த தீர்வு கட்டணத்தை குறைப்பது தான். இலவசமாக மின்சாரத்தை தரும் பட்சத்தில் அதனை தவறாக பயன்படுத்தும் வாய்ப்புகளும் அதிகமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்பது நடைமுறைப்படுத்தக் கூடிய வாக்குறுதியாகும். ஏன் என்றால் இதன் மூலம் அரசின் கருவூலத்தில் 1800 கோடிக்கும் மேல் செலவாகாது என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: