Advertisment

ரஷ்யா-உக்ரைன் போரில் உலகின் மிகப்பெரிய விமானம் அழிப்பு - என்ன நடந்தது?

உலகின் மிகப்பெரிய விமானம் நிறுத்தப்பட்டிருந்த ஹோஸ்டோமலில் உள்ள உக்ரைன் விமானத் தளத்திற்குள் ரஷ்ய துருப்புக்கள் நுழைந்ததால் விமானம் பெருமளவில் சேதமடைந்தது. சேதத்தின் அளவு உறுதிப்படுத்தவில்லை என்றாலும், பழம்பெரும் விமானத்தை மீண்டும் கட்டுவதாக உக்ரைன் கூறியுள்ளது.

author-image
WebDesk
New Update
ரஷ்யா-உக்ரைன் போரில் உலகின் மிகப்பெரிய விமானம் அழிப்பு - என்ன நடந்தது?

உக்ரைன் அதிகாரிகளின் கருத்துப்படி, விமானம் நிறுத்தப்பட்டிருந்த ஹோஸ்டோமலில் உள்ள உக்ரைன் விமானத் தளத்திற்குள் ரஷ்ய துருப்புக்கள் நுழைந்ததால் விமானம் பெருமளவில் சேதமடைந்தது. சேதத்தின் அளவை அவர்கள் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், பழம்பெரும் விமானத்தை மீண்டும் கட்டுவதாக உக்ரைன் கூறியுள்ளது.

Advertisment

உக்ரைன் மீதான மாஸ்கோவின் தாக்குதலுக்கு மத்தியில், உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமான ஆண்டனோவ் ஏ.என்.-225 (Antonov AN-225) அல்லது மிரியா (Mriya) கீவ் அருகிலுள்ள விமான நிலையத்தில் தாக்குதலின் போது ரஷ்ய துருப்புக்களால் அழிக்கப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் திங்கள்கிழமை அறிவித்தனர்.

உக்ரைன் அதிகாரிகளின் கருத்துப்படி, விமானம் நிறுத்தப்பட்டிருந்த ஹோஸ்டோமலில் உள்ள உக்ரைன் விமானத் தளத்திற்குள் ரஷ்ய துருப்புக்கள் நுழைந்ததால் விமானம் பெருமளவில் சேதமடைந்தது. சேதத்தின் அளவை அவர்கள் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், அந்த பழம்பெரும் விமானத்தை மீண்டும் கட்டுவதாக உக்ரைன் கூறியுள்ளது.

“ஏ.என்.-225 மிரியா (AN-225 Mriya) விமானம் (உக்ரைன் மொழியில் கனவு என்று பொருள்) உலகின் மிகப்பெரிய விமானம். ரஷ்யா நமது ‘மிரியா’வை அழித்திருக்கலாம். ஆனால், வலுவான, சுதந்திரமான மற்றும் ஜனநாயக ஐரோப்பிய அரசு என்ற நமது கனவை அவர்களால் ஒருபோதும் அழிக்க முடியாது. நாம் வெற்றி பெறுவோம்” என்று உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா கூறினார்.

ஆண்டனோவ் ஏ.என்.-225 (Antonov AN-225) விமானம் பற்றி தெரிந்த தகவல்கள்

290-அடிக்கும் அதிகமான நீளம் இறக்கைகளைக் கொண்ட, தனித்துவமான ஆண்டனோவ் ஏ.என்.-225 (Antonov AN-225) விமானமானது 1980-களில் அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே ஒரு பதட்டமான போட்டிக்கு மத்தியில், சோவியத் ஒன்றியத்தில் உக்ரைனில் வடிவமைக்கப்பட்டது. உக்ரைன் மொழியில் 'மிரியா' அல்லது 'கனவு' என்று செல்லப்பெயர் சூட்டப்பட்ட இந்த விமானம், விமானப் போக்குவரத்து வட்டாரங்களில் மிகவும் பிரபலமானது, மேலும், உலகம் முழுவதும் நடைபெறும் விமானக் கண்காட்சிகளில் இந்த விமானம் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்த விமானம் என்று அறியப்படுகிறது.

இது ஆரம்பத்தில் சோவியத் வானூர்தி திட்டத்தின் ஒரு பகுதியாக புரானை எடுத்துச் செல்ல வடிவமைக்கப்பட்டது, இது அமெரிக்காவின் விண்வெளி விண்கலத்தின் சோவியத் பதிப்பாகும். 1991 இல் சோவியத் யூனியனின் சரிவுக்குப் பிறகு, புரான் திட்டம் ரத்து செய்யப்பட்டபோது, ​​அதற்குப் பதிலாக பாரிய சரக்குகளை ஏற்றிச் செல்ல விமானம் பயன்படுத்தப்பட்டது.

இந்த விமானம் ஆரம்பத்தில் சோவியத் வானூர்தி திட்டத்தின் ஒரு பகுதியாக புரான் திட்டத்தை எடுத்துச் செல்ல வடிவமைக்கப்பட்டது. இது அமெரிக்காவின் விண்வெளி விண்கலத்தின் சோவியத்தின் தயாரிப்பாகும். 1991-ல் சோவியத் யூனியனின் சரிவுக்குப் பிறகு, புரான் திட்டம் ரத்து செய்யப்பட்டபோது, ​​அதற்குப் பதிலாக பாரிய சரக்குகளை ஏற்றிச் செல்ல விமானம் பயன்படுத்தப்பட்டது.

AN-225 விமானம் மட்டுமே இதுவரை விமானத்தை வடிவமைத்த பாதுகாப்பு உற்பத்தியாளர்களான கீவ்-வைச் சேர்ந்த தளமாகக் கொண்ட ஆண்டனோவ் நிறுவனத்தால் கட்டப்பட்டது. இது அடிப்படையில் அன்டோனாக் நிறுவனத்தின் மற்றொரு வடிவமைப்பின் பெரிய தயாரிப்பு ஆகும். ரஷ்ய விமானப் படையால் நான்கு-இயந்திரம் கொண்ட An-124 'கான்டர்' பயன்படுத்தப்படுகிறது.

இந்த விமானம் முதன்முதலில் 1988 இல் பறந்தது மற்றும் அன்றிலிருந்து பயன்பாட்டில் உள்ளது. சமீப காலங்களில், அண்டை நாடுகளில் ஏற்படும் பேரிடர்களின் போது நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு இது பயன்படுத்தப்பட்டது. கோவிட் தொற்றுநோயின் தொடக்கத்தில், பாதிக்கப்பட்ட நாடுகளில் மருத்துவப் பொருட்களை வழங்க இது பயன்படுத்தப்பட்டது.

விமானத்திற்கு என்ன ஆனது?

நான்கு நாட்களுக்கு முன்பு தாக்குதல் நடத்தியதில் இருந்து, ரஷ்யா விமானநிலையங்கள் மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து வருகிறது. AN-225 விமானம் பழுதுபார்க்கப்பட்ட ஹோஸ்டோமல் விமான நிலையத்தை வெள்ளிக்கிழமை கைப்பற்றியதாக ரஷ்யா கூறியது.

உக்ரைனின் விமானப் போக்குவரத்துத் திறன்களின் அடையாளமான மிரியாவை ரஷ்யா தாக்கியுள்ளது என்று ஆண்டனோவ் நிறுவனத்தை நிர்வகிக்கும் உக்ரைனின் அரசு நடத்தும் பாதுகாப்பு உற்பத்தியாளர் உக்ரோபோரோன்ப்ரோம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

சி.என்.என் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்திப்படி, விமானம் அமைந்துள்ள ஹேங்கரில் கணிசமான சேதத்தை வான்வெளி செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. ஞாயிற்றுக்கிழமை காலை 11:13 மணியளவில் விமான நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக நாசாவின் தீ தகவல் மேலாண்மை சிஸ்டம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ஆண்டனோவ் நிறுவனம், ஒரு அறிக்கையில், விமானத்தின் தொழில்நுட்ப நிலை குறித்து இன்னும் தெரிவிக்க முடியாது என்று கூறியது.

ஆண்டனோவ் ஏ.என் -225 விமானத்துக்கு அடுத்த பெரிய விமானம் எது?

3 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் ரஷ்யாவின் செலவில் விமானம் மீட்டமைக்கப்படும் என்று உக்ரோபோரோன்ப்ரோம் (Ukroboronprom) நிறுவனம் அறிவித்துள்ளது. “மறுசீரமைப்பு 3 பில்லியன் டாலர் செலவும் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் காலம் எடுக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது” என்று அந்த நிறுவனம் கூறியது.

உக்ரைனின் விமானப் போக்குவரத்து மற்றும் விமான சரக்கு துறைக்கு வேண்டுமென்றே சேதத்தை ஏற்படுத்திய ரஷ்ய கூட்டமைப்பு இந்த செலவுகளை ஈடுகட்டுவதை உறுதி செய்வதே எங்கள் பணி என்று உக்ரோபோரோன்ப்ரோம் நிறுவனம் கூறியுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Ukraine Russia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment