Advertisment

அமெரிக்க - சீன பதற்றங்களுக்கு மத்தியில், ஜோ பைடன் - ஷி ஜின்பிங் சந்திப்பு: இருவரும் பங்கேற்கும் ஏ.பி.இ.சி என்றால் என்ன?

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் அகியோர் உச்சிமாநாட்டில் சந்திக்க உள்ளனர். ஏ.பி.இ.சி (APEC) ஏன் நிறுவப்பட்டது, இந்த உச்சிமாநாட்டில் என்ன எதிர்பார்க்கலாம்?

author-image
WebDesk
New Update
US China

அமெரிக்க - சீன பதற்றங்களுக்கு மத்தியில், ஜோ பைடன் - ஷி ஜின்பிங் சந்திப்பு: இருவரும் பங்கேற்கும் ஏ.பி.இ.சி என்றால் என்ன?

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் அகியோர் உச்சிமாநாட்டில் சந்திக்க உள்ளனர். ஏ.பி.இ.சி (APEC) ஏன் நிறுவப்பட்டது, இந்த உச்சிமாநாட்டில் என்ன எதிர்பார்க்கலாம்?

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Xi-Biden to meet amid US-China tensions: What is APEC, the forum they will be attending?

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (ஏ.பி.இ.சி - APEC) குழுவானது அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோவில் நவம்பர் 11-ம் தேதி தொடங்கிய தலைவர்கள் வாரத்திற்கான கூட்டம், வெள்ளிக்கிழமை (நவம்பர் 17) பொருளாதாரத் தலைவர்களின் பின்வாங்கலுடன் முடிவடைய உள்ளது. ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (ஏ.பி.இ.சி - APEC) உச்சிமாநாட்டின் ஓராண்டில் புதன்கிழமை (நவம்பர் 15) அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் முதல்முறையாக நேரில் சந்திக்கிறார்கள். இந்த அமைப்பில் இந்தியா உறுப்பினராக இல்லை; இருப்பினும், இந்தியாவின் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

ஜோ பைடனும் ஷி ஜின்பிங்க்ம் அமெரிக்க-சீன உறவுகளில் பதட்டங்கள் மற்றும் நீடித்த தாழ்வுகளுக்கு மத்தியில் சந்திக்கிறார்கள். வர்த்தகம் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பான முக்கிய புள்ளிகள் உள்ளன. இந்த வாரம் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மற்ற தலைவர்களில் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் இந்தோனேசியாவின் அதிபர் ஜோகோ விடோடோ ஆகியோரும் சந்திக்க உள்ளனர். பிப்ரவரி 2022-ல் உக்ரைனை ஆக்கிரமித்ததிலிருந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எந்த பெரிய சர்வதேச உச்சிமாநாட்டிலும் கலந்து கொள்ளவில்லை. அவர் அமெரிக்கத் தடைகளின் கீழ் இல்லாத துணைப் பிரதமர் அலெக்ஸி ஓவர்சுக் அவர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவார்.

உச்சிமாநாட்டில் உள்ள சிக்கல்கள் என்ன, பல ஆண்டுகளாக ஏ.பி.இ.சி ஒரு மன்றமாக எவ்வாறு பங்கு வகிக்கிறது? என்பதை இங்கே பார்ப்போம்.

ஏ.பி.இ.சி (APEC) என்றால் என்ன? எப்போது நிறுவப்பட்டது?

ஏ.பி.இ.சி  என்பது 1989-ல் நிறுவப்பட்ட ஒரு பிராந்திய பொருளாதார மன்றமாகும். அதன் நோக்கம்  “ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் ஒன்றுக்கொன்று சார்ந்திருப்பதை மேம்படுத்துவது மற்றும் பிராந்திய பொருளாதார ஒருங்கிணைப்பின் மூலம் பிராந்திய மக்களுக்கு அதிக செழிப்பை உருவாக்குவது ஆகும். 80-களில் ஏ.பி.இ.சி மன்றம் உருவாவதற்கு முந்தைய பத்தாண்டுகளில் பல கிழக்கு ஆசிய நாடுகள் வளர்ச்சி விகிதங்களை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏ.பி.இ.சி-ன் 21 உறுப்பினர்களின் பொருளாதாரங்கள் (நாடுகள் அல்லது உறுப்பு நாடுகளைக் காட்டிலும்) என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில், வர்த்தகம் மற்றும் பொருளாதார சிக்கல்கள் குழுவின் மையமாக உள்ளன. இந்த யோசனையின் பிரதிபலிப்பாக, தைவான், ஹாங்காங் ஆகியவை சீனாவின் பகுதிகள் மற்றும் சுதந்திரமான நாடுகள் அல்ல என்று சீனா கூறினாலும் கூட, தைவான் மற்றும் ஹாங்காங் தனித்தனி நிறுவனங்களாக ஏ.பி.இ.சி கூட்டங்களில் கலந்து கொள்கின்றன. 

ஏ.பி.இ.சி (APEC) பொருளாதாரங்கள் ஆஸ்திரேலியா, புருனே, நியூசிலாந்து, பப்புவா நியூ கினியா, ஹாங்காங் (சீனாவின் ஒரு பகுதியாக), பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மலேசியா, வியட்நாம், சிங்கப்பூர், தாய்லாந்து, சீன தைபே (தைவான்), சீனா, ஜப்பான், தென் கொரியா, ரஷ்யா, கனடா, அமெரிக்கா, மெக்சிகோ, பெரு மற்றும் சிலி - பசிபிக் பெருங்கடலைச் சுற்றி புவியியல் ரீதியாக அமைந்துள்ளது.

பல ஆண்டுகளாக ஏ.பி.இ.சி என்ன பங்கு வகிக்கிறது?

இந்தக் குழுவானது எப்போதும் தடையற்ற வர்த்தகம், வர்த்தகக் கட்டணங்களைக் குறைத்தல் மற்றும் பொருளாதார தாராளமயமாக்கல் ஆகியவற்றுக்கு ஆதரவாக உள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை கருத்துப்படி, “அதன் முதல் ஐந்து வருட செயல்பாட்டில், ஏ.பி.இ.சி அதன் முக்கிய நோக்கங்களை நிறுவியது. 1991 சியோல் பிரகடனத்தில், ஏ.பி.இ.சி உறுப்புப் பொருளாதாரங்கள், பசிபிக் விளிம்பைச் சுற்றி தாராளமயமாக்கப்பட்ட சுதந்திர வர்த்தகப் பகுதியை உருவாக்குவதை அமைப்பின் கொள்கை நோக்கமாக அறிவித்தன.” என்று குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச உத்தி ஆய்வுகளின் சிந்தனைக் குழு மையம் (சி.எஸ்.ஐ.எஸ்) நிபுணர்களின் கட்டுரையில், “ஏ.பி.இ.சி முன்முயற்சிகளுக்குக் காரணமான ஆற்றல்மிக்க வளர்ச்சி, வளரும் ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்தது. ஏ.பி.இ.சி பொருளாதாரங்களின் 2.9 பில்லியன் குடிமக்கள் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 60 சதவிகிதம் ஆகும். 2018-ம் ஆண்டு நிலவரப்படி, அவை உலகளாவிய வர்த்தகத்தில் 48 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

இந்தியா ஏ.பி.இ.சி-ல் சேர விருப்பம் தெரிவித்தது. 1991-ல் ஒரு முறையான கோரிக்கையை விடுத்தது - அந்த ஆண்டில்  தாராளமயமாக்கல் மற்றும் உலகமயமாக்கலுக்கான பொருளாதார சீர்திருத்தங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. 2016-ம் ஆண்டில், அப்போதைய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவின் புவியியல் இருப்பிடம், பொருளாதாரத்தின் சாத்தியமான அளவு மற்றும் ஆசிய-பசிபிக் உடனான வர்த்தக தொடர்புகளின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் சேருவதற்கான கோரிக்கையை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதற்கான பதிலில் ஏ.பி.இ.சி பல ஆண்டுகளாக உறுப்பினர்களை விரிவுபடுத்துவதில் முறைசாரா தடையைக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டது. 2015-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆசிய-பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிக்கான அமெரிக்க-இந்திய கூட்டு உத்தி தொலைநோக்குப் பார்வையில், “ஆசியப் பொருளாதாரத்தின் ஒரு பகுதிகாக இந்தியப் பொருளாதாரம் ஆற்றல்மிக்கதாக இருப்பதால், ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மன்றத்தில் சேருவதற்கான இந்தியாவின் ஆர்வத்தை அமெரிக்கா வரவேற்கிறது.” என்று கூறியது.

இந்த ஆண்டு ஏ.பி.இ.சி உச்சிமாநாட்டில் குறிப்பிடத்தக்கவை என்ன?

ஜோ பைடன் - ஷி ஜின்பிங் சந்திப்பு ஹைலைட் - அமெரிக்க-சீன உறவுகளில் குறிப்பிடத்தக்க உடனடி மாற்றத்திற்கு வழிவகுக்க வாய்ப்பில்லை என்றாலும். இரண்டு சக்திகளும் சமீபத்திய மாதங்களில் உயர் மட்ட உத்தியோகபூர்வ தொடர்புகளில் ஈடுபட்டுள்ளன. இதில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இந்த ஆண்டு அமெரிக்காவிற்கு சென்றார். அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவர் ஜேனட் யெல்லன் மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோர் சீனாவிற்கு வருகை தந்துள்ளனர்.

ஏ.பி. செய்தி நிறுவனத்தின் கருத்துப்படி, முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிகவும் பிரபலமான டிரான்ஸ்-பசிபிக் கூட்டுறவில் இருந்து விலகிய பின்னர் கடந்த ஆண்டு தொடங்கிய புதிய இந்தோ-பசிபிக் பொருளாதார கட்டமைப்பின் (ஐ.பி.இ.எஃப்) முன்னேற்றத்தை முன்னிலைப்படுத்தும் என்று ஜோ பைடன் நம்புகிறார்.

இன்று, 14 உறுப்பினர்கள் ஐ.பி.இ.எஃப்-ன் ஒரு பகுதியாக உள்ளனர். பிஜி மற்றும் இந்தியாவைத் தவிர, மீதமுள்ள அனைத்தும் ஏ.பி.இ.சி மன்றத்தின் உறுப்பினர்களாக உள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Joe Biden
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment