குக்கரில் குழையாமல், கமகமக்கும் அரிசி பருப்பு சாதம் செய்ய வெறும் 10 நிமிடங்களே போதும். ஷெரீன் வீட்டு சமையல் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது போல எளிய குறிப்புகளைப் பின்பற்றி சுவையான அரிசிபருப்பு சாதத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம். டிபன் பாக்ஸ்க்கு கூட இதை கொடுத்து அனுப்பலாம். வெறும் ஊறுகாய் மட்டும்போதும் சுவையாக இருக்கும்.
Advertisment
தேவையான பொருட்கள்:
அரிசி - 1 டம்ளர் துவரம் பருப்பு - கால் டம்ளர் சின்ன வெங்காயம் - 200 கிராம் பச்சை மிளகாய் - 3 பூண்டு பல் - 4-5 கருவேப்பிலை - சிறிதளவு தக்காளி - 2 பெருங்காயத்தூள் - சிறிதளவு மஞ்சள் தூள் - சிறிதளவு உப்பு - தேவையான அளவு எண்ணெய் கடுகு, உளுந்து தண்ணீர் - 2 டம்ளர்
செய்முறை:
Advertisment
Advertisements
அரிசி மற்றும் பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்கவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்து சேர்க்கவும். சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், தக்காளி, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். ஊற வைத்த அரிசி, பருப்பு சேர்த்து, உப்பு சரிபார்த்து கொதிக்க விடவும்.
குக்கரை மூடி, இரண்டு விசில் விட்டு இறக்கவும். ஆவி போனதும் திறந்து பரிமாறவும். சுவையான அரிசி பருப்பு சாதம் ரெடி. இது சைடிஷ் இல்லாமலே சாப்பிட சூப்பரா இருக்கும்.