ஆடி 18 நாளில் பாரம்பரிய முறையில் செய்யும், காப்பரிசியை நீங்கள் ஒரு முறை வீட்டில் செய்து. இந்த சனிக்கிழமை படையலில் வையுங்கள்.
தேவையான பொருட்கள்
150 கிராம் பச்சரிசி
1 ஸ்பூன் அளவு நெய்
3 ஸ்பூன் தேங்காய் துண்டுகள்
2 ஸ்பூன் பாசி பருப்பு
2 ஸ்பூன் பொட்டுக்கடலை
1 ஸ்பூன் வேர்கடலை
1 ஸ்பூன் கருப்பு எள்ளு
அரை கப் வெல்லம்
கால் டீஸ்பூன் ஏலக்காய் பொடி
செய்முறை: பச்சரிசியை நாம் நன்றாக கழுவி 1 மணி நேரம் ஊற வைக்கவும். நாம் அரிசியை காய வைக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து நறுக்கிய தேங்காய் துண்டுகளை வறுக்க வேண்டும். தொடர்ந்து பாசிபருப்பை தனியாக வறுக்க வேண்டும். இதை தனியாக எடுத்து வைத்துகொள்ளவும். பொட்டுக்கடலையை வறுக்க வேண்டும். தொடர்ந்து வேர்கடலையை வறுக்க வேண்டும். தொடர்ந்து எள்ளை சேர்த்து வறுக்கவும். இவை அனைத்தையும் அரிசியுடன் சேர்த்து கிளரவும். ஒரு பாத்திரத்தில் வெல்லம், தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்ச வேண்டும். வெல்ல பாகு, சிறு உருளையாக ஆக வேண்டும். அந்த பதம் வரும் வரை காத்திருந்து இதை கலவையில் சேர்த்து கிளரவும். இதை படையலுடன் நாம் இறைவனுக்கு வைக்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“