வெண்டைக்காய் காரக் குழம்பு
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து அதில், வெங்காய வடகம், வத்தல், கட்டி பெருங்காயம் சேர்த்து கிளர வேண்டும். தொடர்ந்து சின்ன வெங்காயம், கருவேப்பிலை, இடித்த பூண்டு சேர்த்து கிளரவும். வெங்காயம் நிறம் மாறியதும். அதில் தக்காளி அரைத்ததை சேர்க்கவும். தொடர்ந்து சாம்பார் பொடி, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும். எண்ணெய் பிரிந்து வந்ததும், புளி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். கடைசியாக உப்பு சேர்த்து கிளரவும். தொடர்ந்து 5 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும்.