சர்க்கரை வியாதி (நீரிழிவு) ஒரு பொதுவான பிரச்சனையாக மாறியுள்ள நிலையில், அதற்குப் பாரம்பரிய மருத்துவ முறைகளிலும், குறிப்பாக சித்த மருத்துவத்திலும் பல தீர்வுகள் கூறப்பட்டுள்ளன. அவற்றில் முதன்மையானது ஆவாரை கஷாயம். ஆவாரை, எப்போதும் பூத்திருக்கக்கூடிய ஒரு தாவரம். இதை வலியுறுத்தும் விதமாக, "ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ" என்ற சித்த மருத்துவப் பாடல் அதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக டாக்டர் சிவராமன் கூறுகிறார்.
Advertisment
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் ஆவாரையின் பங்கு குறித்து இன்று பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வுகள், ஆவாரை சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், இன்சுலின் சுரப்பு சீராக இருக்கும்பட்சத்தில் கூட, குளுக்கோஸ் டிரான்ஸ்போர்ட்ஸ் (Glucose Transporters) எனப்படும் புரதங்களின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது என்று கண்டறிந்துள்ளன.
இந்த டிரான்ஸ்போர்ட்ஸ் நம் ஈரலில் (கல்லீரல்) இருந்து சுரக்கக்கூடியவை. இவை குளுக்கோஸை செல்களுக்குள் கொண்டு சென்று ஆற்றலாக மாற்றும் பணியைச் செய்கின்றன. ஆவாரை இந்த டிரான்ஸ்போர்ட்ஸ்களைச் சரிசெய்வதன் மூலம், உடலில் குளுக்கோஸ் சரியான முறையில் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்கிறது.
எனவே, ஆவாரை கஷாயம் சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு சிறந்த துணை மருந்தாக அமைகிறது. இது ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், உடலின் இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது.
Advertisment
Advertisements
எனவே ஆவாரம் கஷாயம் எப்படி செய்வது என்று தரூஸ் கிச்சன் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் 200 மில்லி தண்ணீரை ஊற்றவும். அதில் 1 டேபிள்ஸ்பூன் ஆவாரை பூவை சேர்க்கவும். தண்ணீர் பாதியாக வற்றும் வரை மிதமான தீயில் கொதிக்க விடவும். கஷாயம் ஆறியதும், வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.