தினமும் நாம் உணவு சாப்பிடும், அரை மணி நேரத்திற்கு முன்பு 20 கிராம் பாதாம் சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அதிகரிப்பை 20 % குறைக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது.
இந்தியாவை மையமாக வைத்து நடைபெற்ற ஆய்வில் சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு நல்ல செய்தி வெளியாகி இருக்கிறது. நாம் மூன்று வேளையும் சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பாக 20 கிராம் பாதாமை எடுத்துக்கொண்டால், ரத்த சர்க்கரை அதிகரிக்கும் சதவிகிதம் 20 % குறைகிறது.
பாதாமில் மோனோ சாச்சுரேடட் கொழுப்பு சத்து இருக்கிறது. மேலும் நார் சத்தும், புரத சத்தும் உள்ளது. இந்நிலையில் இந்தியர்களை மையாக வைத்து செய்யப்பட்ட இந்த ஆய்வு முக்கியத்துவம் பெருகிறது. இங்கே இருப்பவர்கள் சாப்பிட்டதற்கு முன்பாக இருக்கும் சர்க்கரை அளவைதான் முக்கியமாக பார்க்கிறார்கள்.
ஆனால் சாப்பிட்டதற்கு பிறகு இருக்கும் சர்க்கரை அளவுதான் முக்கியமானது. ஒருவருக்கு சாப்பிட்டதற்கு பிறகு அதிக ரத்த சர்க்கரை அளவு இருந்தால், அவர்களுக்கு டைப் 2 சர்க்கரை நோய் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
இந்த ஆய்வின் போது, மூன்று வேளைகளிலும் சாப்பிடும் உணவுக்கு முன்பாக பாதாம் எடுத்துக்கொள்ளப்பட்டது. மேலும் தொடர்ந்து சர்க்கரை நோயாளிகள் கண்காணிக்கப்பட்டனர். தொடர்ச்சியாக ஆய்வு செய்த போது, பலருக்கு சாப்பிட்ட பின்பு ரத்த சர்க்கரை அதிகமாவது குறைந்தது. மேலும் யாருக்கெல்லாம் சர்க்கரை நோய் வருவதறு முன்பே சாத்தியங்கள் இருக்கிறதோ அவர்களை அடையாளம் காணா முடிந்தது.
மேலும் இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளை விட சர்க்கரை நோய் வரும் சாத்தியங்கள் கொண்டவர்கள்தான் அதிகம். அவர்களை அடையாளம் கண்டு சரியான உணவு முறை மற்றும் உடல் பயிற்சி செய்தால், சர்க்கரை நோய் வராமல் தடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.