வெறும் வயிற்றில் நெல்லிக்காய் தண்ணீர் குடிப்பது அதிக நன்மைகளை கொடுக்கும். நெல்லிக்காய் வைட்டமின் சி சத்து நிறைந்தது. தோல் ரிதியான பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும்.
இந்நிலையில் நெல்லிக்காய் தண்ணீரின் நன்மைகளை பற்றி தெரிந்துகொள்வோம்.
சர்க்கரை நோயாளிகளுக்கு அதிக நன்மை தருகிறது. நெல்லிக்காயில் க்ரோமியம் இருப்பதால் சர்க்கரையை கட்டுபடுத்த உதவுகிறது. உடல் எடை குறைக்கவும் நெல்லிக்காய் தண்ணீர் உதவுகிறது.
உடலில் உள்ள கொழுப்பை வேகமாக சக்தியாக மாற்ற உதவுகிறது. இதனால் நெல்லிக்காய் நீரை தொடர்ந்து குடித்து வந்தால் உடல் எடை குறையும்
இதுபோலவே அஜீரணம் ஏற்படாமல் தடுக்கவும். நன்றாக உணவு செரிமாணமாகவும் உதவுகிறது. நெல்லிக்காயில் நார்சத்து உள்ளதால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். மேலும் உணவு வேகமாக செரிமானமும்.