சர்க்கரை நோய் வந்துவிட்டால், அதிலிருந்து முற்றிலும் குணமடைவது என்ற பேச்சிக்கே இடம் இல்லை. இந்நிலையில் வாழ்க்கை முறையில் பெரிதாக ஒன்றும் மாற்றிக்கொள்ள தேவையில்லை. சிறிய மாற்றங்கள்தான் சரக்கரை நோயை கட்டுபடுத்தும். சர்க்கரை நோய்க்கு சூப்பர் உணவு என்று நெல்லிக்காய்யை சொல்லலாம். இதில் அதிக நார்சத்து இருக்கிறது. மேலும் குறைந்த கலோரிகள் உள்ளது.
இதனால் உடல் எடை குறைக்கவும் உதவும் . இது ரத்ததில் உள்ள குளுக்கோஸை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளும்.
இதில் இருக்கும் க்ரோமியம், உடலின் இயக்கத்திற்கு உதவுகிறது. இதனால் நமது உடல் இன்ஸுலினை ஏற்றுக்கொள்ள உதவுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால் தொற்று நோய்கள் வராமல் இருக்க உதவுகிறது.
மேலும் இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட் சத்து நல்ல கொலஸ்ட்ராலை ஊக்கப்படுத்துகிறது. இந்நிலையில் இது கொலஸ்ட்ராலை அதிகரிக்காமல் தடுக்கிறது.
நாம் நெல்லிக்காயை பச்சையாகவே சாப்பிடலாம். தொடர்ந்து ஒரு கிளாஸ் தண்ணீரை குடித்தால் அதன் துவர்ப்பு சுவை நம்மை பாதிக்காது.
இதுபோல நெல்லிக்காய் விதைகளை நீக்கிவிட்டு . அதை மிக்ஸியில் போட்டு அடித்து, கிடைக்கும் சாறை குடிக்கலாம்.