தினமும் இட்லி, தோசைக்கு ஒரே மாதிரியான தேங்காய் சட்னி, சாம்பார், காரா சட்னி, வேர்க்கடலை சட்னி என அலுத்துவிட்டதா? இந்த வெயிலுக்கு ஏற்றவாறு, குளிர்ச்சியான மற்றும் சுவையான ஆந்திரா பாணி வெள்ளரிக்காய் சட்னியை வெறும் 10 நிமிடங்களில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
வெள்ளரிக்காய் - 1
வறுத்த வேர்க்கடலை - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 1
காய்ந்த மிளகாய் - 2
பூண்டு - 3 பல்
புளி - சிறிதளவு
வெல்லம் - சிறிதளவு
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு
செய்முறை:
வெள்ளரிக்காயைத் தோல் நீக்கி, பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய துண்டுகளில் இருந்து இரண்டு சிறிய துண்டுகளைப் பொடியாக நறுக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.
வறுத்த வேர்க்கடலையை வெறும் கடாயில் போட்டு, மிதமான தீயில் 5 நிமிடங்கள் வறுத்து, ஆறவிடவும். அதே கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம், மற்றும் பெரிய துண்டுகளாக நறுக்கிய வெள்ளரிக்காய் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.
அடுத்து, அதில் பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, பூண்டு பொன்னிறமாகும் வரை வதக்கி, பிறகு ஆறவிடவும். மிக்ஸி ஜாரில் வதக்கிய அனைத்து பொருட்களையும் (வேர்க்கடலை, பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய் தவிர) போட்டு, அதனுடன் புளி, உப்பு, மற்றும் வெல்லம் சேர்த்து நன்கு அரைக்கவும்.
அனைத்தும் நன்கு அரைபட்டதும், இப்போது வறுத்த வேர்க்கடலையைச் சேர்த்து மீண்டும் அரைக்கவும். இறுதியாக, நறுக்கிய வெள்ளரிக்காய் துண்டுகளைச் சேர்த்து, சட்னியை நைசாக அரைக்கவும். அரைத்த சட்னியை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி, அதில் பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காயைத் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
இப்போது, சத்தான, சுவையான மற்றும் குளிர்ச்சியான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் சட்னி தயார். இதை இட்லி, தோசையுடன் சேர்த்துப் பரிமாறினால் அருமையாக இருக்கும்.