நாள் முழுவதும் புத்துணர்ச்சி... இந்த வெயில் காலத்துக்கு ஏற்றது: அனிதா குப்புசாமி சொல்லும் சீக்ரெட் பொடி!
நன்னாரி மூலிகை பொடியின் மருத்துவ பயன்கள் மற்றும் நன்மைகள் குறித்து அனிதா குப்புசாமி விவரித்துள்ளார். மேலும், இதனை எவ்வாறு தயாரிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
உடலுக்கு புத்துணர்வையும், குளிர்ச்சையையும் தருவதற்கு நன்னாரி மூலிகை பயன்படுகிறது என அனிதா குப்புசாமி தெரிவித்துள்ளார். பழைய காலத்தில் வீடுகளில், இந்த நன்னாரி சர்பத் பெரிதும் தயாரிக்கப்பட்டது. இதேபோல், பள்ளிகளுக்கு அருகேயும் நன்னாரி சர்பத் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
Advertisment
மேலும், குடிக்க பயன்படுத்தும் தண்ணீரிலும் நன்னாரி பொடி அல்லது நன்னாரியின் வேரை போட்டு வைக்கும் பழக்கம் மக்களிடையே இருந்த வந்தது. அதன்படி, நன்னாரி பொடி இப்போது கடைகளில் கிடைக்கிறது. அவற்றை வாங்கி பயன்படுத்தலாம். நன்னாரி பொடியை சிறிதளவு தண்ணீரில் கலந்து இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும்.
பின்னர், காலை நேரத்தில் நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லத்தை பாகு பதத்திற்கு காய்த்து, அதற்குள் நன்னாரி பொடி ஊற வைத்த தண்ணீரை ஊற்றிக் கொள்ளலாம். இவை இரண்டையும் நன்றாக கலந்த பின்னர், அடுப்பில் இருந்து இறக்கி வைத்து விடலாம். இறுதியாக, இத்துடன் எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு பாட்டிலில் அடைத்து ஃப்ரிட்ஜில் வைத்து விடலாம்.
இதனை, நமக்கு தேவைப்படும் நேரத்தில் தண்ணீரில் கலந்து குடித்தால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என அனிதா குப்புசாமி தெரிவித்துள்ளார். உடலில் இருக்கும் கெட்ட நீர் அனைத்தும், நன்னாரி சாறு குடிப்பதன் மூலம் வெளியேற்றப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
மேலும், சரும பிரச்சனைகள் இருப்பவர்கள் குளிக்கும் தண்ணீரில் நன்னாரி பொடியை கலந்து குளிக்கலாம் என்று அனிதா குப்புசாமி அறிவுறுத்துகிறார். இது தவிர உடல் உஷ்ணத்தை தனித்து எப்போதும் குளிர்ச்சியாக வைத்திருக்க நன்னாரி உதவுகிறது. சிறுநீரக பாதிப்புகளையும் நன்னாரி கட்டுப்படுத்துகிறது என அனிதா குப்புசாமி குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய நன்மைகள் அடங்கிய நன்னாரியை வெயில் காலத்தில் பயன்படுத்தும் போது ஆரோக்கியம் மேம்படும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
நன்றி - Anitha Pushpavanam Kuppusamy - Viha Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.