வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது உணவில் ரசம் சேர்த்துக்கொண்டால் தான் முழுமையான உணவாக இருக்கும். அப்படி இருக்கையில் சுவையான தக்காளி ரசம் எப்படி செய்வது என்று அனிஹ்டஸ் ஹெல்தி கிச்சன் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
பழுத்த தக்காளி சுடு தண்ணீர் புளி உப்பு மஞ்சள் தூள் மல்லி மிளகு சீரகம் வெந்தயம் காய்ந்த மிளகாய் பச்சை மிளகு பூண்டு கடுகு கறிவேப்பிலை காய்ந்த மிளகாய் பெருங்காயத்தூள் மல்லி இலை
செய்முறை:
Advertisment
Advertisements
முதலில், பழுத்த தக்காளியை நறுக்கி, அதனுடன் 2 கப் சுடு தண்ணீர் சேர்த்து ஊறவிடவும். அதே நேரத்தில், ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு புளியையும் தண்ணீரில் ஊறவைக்கவும். சுமார் 10 நிமிடங்கள் கழித்து, ஊறிய தக்காளி மற்றும் புளியை நன்கு கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
இந்தக் கரைசலுடன், தேவையான அளவு உப்பு, சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் தேவைப்பட்டால் மேலும் சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கி வைக்கவும். ஒரு கடாயில், லேசாக வறுத்த மல்லி, மிளகு, சீரகம், வெந்தயம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து ஓரளவுக்கு பொடித்துக் கொள்ளவும்.
இதனுடன், பச்சை மிளகு, பூண்டு, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து இடித்து தனியே எடுத்து வைக்கவும். (இது ரசத்திற்கு கூடுதல் சுவையைக் கொடுக்கும்). ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும். தாளித்ததும், தயார் செய்து வைத்துள்ள தக்காளி-புளி கரைசலை சேர்க்கவும்.
ரசம் கொதிக்க ஆரம்பிக்கும் முன், அரைத்து வைத்துள்ள ரசப்பொடி, சிறிது பெருங்காயத்தூள் மற்றும் நறுக்கிய மல்லி இலை ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும். ரசம் நன்கு நுரை கட்டி, ஒரு கொதி வந்ததும் (சுமார் 2 நிமிடங்களில்), அடுப்பை அணைத்து விடவும். அதிக நேரம் கொதிக்க விட்டால் ரசத்தின் சுவை மாறிவிடும்.