அரை மணி நேரத்தில் இந்த தோசையை செய்துவிட முடியும். அவல் என்பதால் உடலுக்கு நன்மை தரும்.
தேவையான பொருட்கள்
கெட்டி அவல்- 1 கப்
புளித்த மோர்- 1கப்
பச்சை மிளகாய்- 2
உப்பு- தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு
செய்முறை : அவலை நன்றாக கழுவி, 20 நிமிடங்கள் வரை மோரில் ஊறவைக்க வேண்டும். தொடர்ந்து தேவையான அளவு அவலில் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். தொடர்ந்து அதில் உப்பு பெருங்காயத்தூள் சேர்க்கவும். மேலும் இந்த மாவில் பச்சை மிளகாய் பொடியாக அரிந்து சேர்க்கவும். மேலும் இதை தோசை மாவு பதத்திற்கு கரைத்து மெல்லிய தோசைகளாக எண்ணெய் ஊற்றி சுட்டு எடுக்கவும். ஒரு வேளை புளித்த மோர் இல்லை என்றால், மோரில் எலுமிச்சை கலந்துகொள்ளவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/